வியாழன், 26 செப்டம்பர், 2013

தவளை கடத்திய மனிதருக்கு அபராதம்


அரிய வகை தவளைகளை கடத்திய பிரான்ஸ் நபர் ஒருவர் சுவிஸ் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்சி ஒட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் 35 வகையான தவளைகளை ஏற்றிக்கொண்டு செப்டம்பர் 14ம் திகதி ஜேர்மன் நாட்டை கடந்து சுவிஸ் நாட்டினை கடக்க முயலும் போது சுங்க அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளார்.

சுங்க அதிகாரிகள் இவரிடம் சோதனை நடத்தியதில், இவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஒட்டியதுடன் கலர் கலரான  ஒபோகா, எக்ஸிடோபேட்ஸ் மற்றும் ராணிடொமெயா போன்ற அரியவகை தவளை இனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவருக்கு 2,000 பிராங்க் அபராதம் விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் விலங்குகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்பவர்கள் முறையான சான்றிதழ்களை அந்தந்த அமைப்புகளிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஆல்ப்ஸ் மலையில் இறந்த மாணவியின் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு


சுவிட்சர்லாந்தில் ஆல்ஃபைன் மலையில் இறந்துபோன மாணவி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 வயது பள்ளி மாணவி ஒருவர் ஆல்ஃபைன் மலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்று ஈவோலின் ரிசாரட் மேலாளர் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீது வழக்கு தொடரப்பட்டது.

தற்போது நடைபெற்று வந்த இந்த வழக்கில் மேலாளருக்கு 9 மாத சிறை தண்டனையும் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சுவிஸில் சுருங்கிய பனிக்கட்டி மலை


சுவிஸ் நாட்டின் மார்ட்டரேட் பனிக்கட்டி (Morteratsch glacier) மலையானது சுருங்கியதால் அந்நாட்டின் வெப்பநிலை போக்கு உயர்த்திக்காட்டப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது மார்ட்டரேட் பனிக்கட்டி மலை.
அழகான அமைப்புடன் கூடிய இப்பனிக்கட்டி மலையானது வெகுவாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது.

தற்போது இந்த பனிக்கட்டி மலையானது சுருங்கியதால் அந்நாட்டின் வெப்பநிலை போக்கு அதிகரித்துள்ளது.

கடந்த நூற்றாண்டில் இந்த பனிக்கட்டி மலையானது 2.4 கிலோ மீற்றர் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது பனிக்கட்டி மலையானது கொஞ்சம் அதிகமாகவே சுருங்கியுள்ளது.

இது குறித்து சுற்றுலாப்பயணி ஒருவர் கூறுகையில், இது கொஞ்சம் அற்புதமாக உள்ளது என்றும் அதேசமயம் அச்சுறுத்தலான விடயம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த பனிப்பாறையானது காலநிலை மாற்றங்களை எடுத்துக்காட்டுவதற்கு சிறந்த உதாரணம் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

சனி, 21 செப்டம்பர், 2013

அதிபரின் சொத்து விபரத்தை அம்பலப்படுத்திய சுவிஸ் வங்கி


பீனி பேபி நிறுவனத்தின் அதிபரான டை வார்னர் சுவிஸ் வங்கியில் உள்ள தன்னுடைய சொத்துக்களுக்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் டை வார்னர். 69 வயதான இவர் பிரபலமான பீனி பேபி பொம்மை தயாரிப்பு நிறுவனமான TYயின் அதிபர் ஆவார்.
இவர் 3 மில்லியன் சொத்துக்களை சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்து அதற்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2002ம் ஆண்டு 49.1

மில்லியன் வருமானத்தை கொண்ட இவர் அவற்றில் 3.1 மில்லியன் தொகையை சுவிஸ் வங்கியில் மறைத்துவைத்துள்ளார்.
இந்நிலையில், சுவிஸின் UBS வங்கியானது இவரது சொத்துவிபரங்களை அம்பலமாக்கியது.

இதனைத் தொடர்ந்து 5 வருட சிறைத்தண்டனையும், 250,000 டொலர் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் போர்ப்ஸ் சஞ்சிகையின் மதிப்பிட்டின்படி 2.6 பில்லியன் சொத்துக்கள் கொண்ட இவர் அமெரிக்காவின் 209வது பணக்காரர் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
 

மீண்டும் சுவிஸ் பொருளாதாரம் உயர்வு!


சுவிட்சர்லாந்தில் பொருளாதாரமானது மீண்டும் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

2013ம் ஆண்டில் யூன் மாதம் 1.4 சதவிகிதமாக இருந்த பொருளாதாரம் மூன்றே மாதத்தில் 1.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று பொருளாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் 2014ம் ஆண்டில் இந்த பொருளாதார உயர்வானது 2.3 சதவிகிதத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என செகோ (State Secretariat for Economic Affairs (seco)) அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்குள்ளாக சர்வதேச பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பாக யூரோவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது சுவிஸ் நாடானது உள்நாட்டு பொருளாதாரத்தால் பயனடைந்து வருகிறது.

மேலும் வேலைவாய்ப்பின்மையில் 3.3 சதவீதமானது வருகின்ற ஆண்டில் 3.2 சதவீதமாக குறையும் என செகோ எதிர்பார்க்கிறது

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விடுதலையான சிறைக்கைதி மர்மமான முறையில்!


சுவிட்சர்லாந்தில் சிறையில் இருந்து தப்பிச் சென்று உயிரிழந்த கைதியின் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சுவிஸில் அந்தமாட்டன் (39) என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 2011ம் ஆண்டு ஜெனிவா சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரான்சை பிறப்பிடமாக கொண்ட இவர் 2001ம் ஆண்டு ஜெனிவாவிற்கு குடிபெயர்ந்து வந்துள்ளார்.

பின்பு பாலியல் செயல்களில் ஈடுபட்ட வந்த இவர் கடைசியாக 2011ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் தண்டனை காலங்கள் முடிந்து சைகோதெரப்பிஸ்ட் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த இவர் மர்மமான முறையில் ஜேர்மனின் எல்லைப்பகுதியான அதாவது சுவிட்சர்லாந்துக்கு அருகில் இறந்து கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்

புதன், 11 செப்டம்பர், 2013

பலாத்கார குற்றவாளியின் காணொளி வெளியாகியது.


சுவிட்சர்லாந்தில் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியின் புகைப்படம் உள்ள காணொளியானது வெளியாகியுள்ளது.
சுவிஸில் கடந்த வாரம் மியாமி ஒட்டலில் தங்கியிருந்த பெண் ஒருவர் மர்மநபரால் கற்பழிக்கப்பட்டார்.

மேலும், அந்த மர்மநபர் கற்பழித்ததோடு மட்டுமல்லால் இவரிடம் உள்ள பணங்களையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிசென்றுள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த மர்மநபர் நடைபெற்ற காணொளியினை தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த ஒட்டல் விடுதியில் உள்ள கமெராவில் இவரது புகைப்படமானது இடம்பெற்றுள்ளது.

கருப்புநிற தோற்றத்தில் 178 செ.மீ உயரம் மற்றும் 104 கிலோ எடையுடன் உள்ள அந்த நபரின் புகைப்படமானது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அடையாளங்களின் மூலம் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்துவிடலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 

சுற்றுச்சூழல் பிரசாரகருக்கு கொலை மிரட்டல்


 சுவிஸில் சுற்றுச்சூழல் பிரசாரம் செய்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பிரான்ஸ் வெபர், சுற்றுச்சூழல் பிரசார வேலையில் ஈடுபட்டு வருபவர்.
இந்நிலையில் இவருக்கு தபாலின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் உனது சட்டத்தரணி மற்றும் மகள் சாகவேண்டும், அவர்களுக்கான இறுதிநாள் நெருங்கிவிட்டது, அந்த காலமானது 18 முதல் 24 மாதங்களே ஆகும் என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதமானது ஆகஸ்ட் 12ம் திகதி எழுதப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெபர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஆடுகளம் இடைநிறுத்தப்பட்டுள்ளது!

 
சுவிசில் நடைபெறவிருந்த ஆடுகளம் மாபெரும் நடனப்போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது!

நடனத்திற்கு உலகமே அரங்கம் ஆகும். இதனை எடுத்துக் காட்டும் வகையில் 'உலகலாவிய தமிழ் இளையோர் அவை' 'ஆடுகளம்' என்னும் அனைத்துலக நடனப் போட்டியை மூன்றாவது முறையாக இவ்வாண்டு சுவிஸில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாளை நடைபெறவிருந்த இவ் ஆடுகளம் நடனப் போட்டி நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதனை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்வானது மீண்டும் எப்போது நடைபெறும் என்னும் விபரத்தினை லங்காசிறியினூடாக அறிவிக்கப்படும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர்.

சனி, 7 செப்டம்பர், 2013

மூத்த குடிமகனைபெண்ணின் ஆடையை அணியுமாறு!!


இன அடிப்படையில் மூத்த குடிமகன் ஒருவரை Appenzell Ausserhoden உள்ள மருத்துவமனையில் அவமானப்படுத்திய குற்றத்திற்காக நான்கு செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த மூத்த குடிமகன் ஒருவரை அங்கு பணி புரியும் நான்கு செவிலியர்கள் சேர்ந்து பெண்ணின் ஆடையை கொடுத்து அணிய சொல்லி கட்டயாப்படுத்தியுள்ளனர்.

மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும் கிண்டல் செய்தும் அசிங்கப்படுத்தியுள்ளனர். இதில் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட நபர் பொலிசல் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் பணிபுரிந்த நான்கு பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் ஒரு செவிலியர் அவரை 30 முதல் 45 நிமிடம் வரை கிண்டல் செய்து பேசியதாகவும் கூறப்படுகின்றது.

பெண்ணின் ஆடையை அணிய சொன்ன நான்கு பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் மற்றும் உள்ள ஒருவர் அவகாச காலம் வரை பணிசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செவிலியர்களை பணி நீக்கம் செய்வதுடன் தண்டனை வழங்கவேண்டுமென பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

முறையாக முதலிடத்தில் சுவிஸ்


உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது.
பொருளாதார வரிசையில் நாடுகளின் வளர்ச்சி குறித்து ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சிங்கப்பூர், பின்லாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் நெதர்லாந்து எட்டாவது இடத்திலும், ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) 10வது இடத்திலும் உள்ளது.
ஆனால் சுவிட்சர்லாந்து பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்கள், தொழில்வளர்ச்சி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் மேலோங்கி

காணப்படுவதாக WEF உலகளாவிய நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இதில் எவற்றையும் குறிப்பிட்டு கூற இயலாது.

இது குறித்து இந்நிறுவனம் கூறுகையில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தெரிவு செய்வதற்கு 12 காரணிகளை கையாண்டுள்ளோம்.
அதில் தொழிற்சாலை, கண்டுபிடிப்புகள், சந்தை திறன், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் தெரிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்

 

வியாழன், 5 செப்டம்பர், 2013

இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு! ஆபத்தான நிலையில்!!!!


ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர்.
இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.
இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.
இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதன், 4 செப்டம்பர், 2013

விற்கப்படும் குரோனட்டுக்கு உரிமை கொண்டாடும் நியுயார்க் பேக்கரி



சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் நியூயார்க் வகையைச் சேர்ந்த குரோனட்டால் (Cronuts) விற்பனையாளர்கள் வருத்ததில் உள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் மான்ஹேட்டனில் உள்ள பேக்கரி ஒன்றில் குரோனட் (Cronuts) இனிப்பு பலகாரமானது வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்போடு விற்பனையாகி வந்தது.
இதனை அன்செல்(Ansel) என்பவர் நியூயார்க்கில் உற்பத்தி செய்து வந்தார். மேலும் இந்த பேக்கரியில் ஒரு குரோனட் ஒன்று 5 டொலருக்கு விற்கப்பட்டது.
பேக்கரியை திறப்பதற்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று குரோனட்டை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்
இந்நிலையில் திடீரென்று கடந்த இரண்டு வாரங்களாக வாடிக்கையாளர்கள் அனைவரும் சூரிச் மற்றும் லுசேர்னில் உள்ள மைக்ரோஸ் பல்பொருள் அங்காடியில் ஜுவா பேக்கரியில்(Jowa Bakery) இருந்து உற்பத்தி செய்யப்பட்ட குரோனட்டை வாங்க ஆரம்பித்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அன்செல், ஜுவா பேக்கரியானது என்னுடைய குரோனட் வகையினை உபயோகப்படுத்தி புதிய பேக்கரியினை நடத்தி வருகிறது என்றும் இது நியூயார்க் வகையினை சேர்ந்தது எனவும் சுவிஸ் ஊடகங்களிடம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஜுவா பேக்கரி, குரோனட் என்ற பெயரினை சுவிஸ் வர்த்தக சட்டங்களின்படி யூலை 25ம் திகதி முதல்பதிவு செய்துள்ளோம்.
மேலும், நாங்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி அதன் சொந்த செய்முறையில் இதனை உருவாக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

தீர்வு சுவிஸில் ரயில்வே விபத்துக்கு


சுவிட்சர்லாந்தில் ஏற்படும் ரயில் விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் சுவிஸில் நடைபெற்ற கோர ரயில் விபத்தால் 20 பயணிகள் படுகாயமடைந்தனர், ஒட்டுனர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 1700 ரயில்வே சிக்னல்களின் வேகத்தை கண்காணிப்பதற்காக உபகரணங்களை நிறுவுவதற்கான திட்டங்களை பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் ரயில்களில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளால் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் வெளிவந்த நிலையில் உள்ளன.
இது குறித்து கூட்டாட்சி ரயில்வே தலைவர் ஆன்ட்ரியாஸ் மேயர்(Andreas Meyer) கூறுகையில், ரயில்வே விபத்துக்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் ரயில்களின் தொழில்நுட்ப பிரச்சனைகள் குறித்து பரிசோதித்து கொண்டுதான் இருக்கிறோம்.
மேலும் இந்த குற்றச்சாட்டுகள் உண்மையென்ற பட்சத்தில் நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்
Blogger இயக்குவது.