வெள்ளி, 29 நவம்பர், 2013

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! களைக்கட்டுகிறது சுவிஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து, சுவிஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டியையை முன்னிட்டு, மக்களை கவரும் விதமாக கடைகளில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வண்ணவண்ண விளக்குகளால் கடைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சூரிஜ்(Zurich) மற்றும் லுகெர்னி(Lucerne) நகரங்களில் ரயில் நிலையம் அருகில் உள்ள கடைகள் Apps ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஜெனீவாவின் ஏரிக்கரையில் அமைந்துள்ள மான்ட்ரியக்ஸ்(Montreux) நகர கடைகளில் பெரிய மர அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் இளைப்பாருவதற்காக பிட்ஸா மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நிர்வாக சங்கத்தின் தலைவர் யுவஸ்கார்னரோ கூறுகையில், இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது ஜாஸ் திருவிழா.
பல்வேறு நாடுகளிலிருந்து வணிகர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்கின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தால், இந்நகரம் முழுவதுமே மக்கள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆண்டுதோறும் புதுவிதமான மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தாண்டு 250க்கும் மேலான வணிகர்கள் கடை வைத்துள்ளனர், இதனால் சுவிசின் மற்ற நகரங்களுக்கும், மான்ட்ரியக்ஸ் நகரத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

வியாழன், 28 நவம்பர், 2013

சுவிஸ் எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த அமெரிக்கா

ஜெனிவாவில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் ஊழல் நடைபெற்றுள்ளதால் அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது.
ஜெனிவாவை சேர்ந்த வேதற்போட் சர்வதேச எண்ணெய் நிறுவனம் 100 நாடுகளில் 55,000 பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்நிறுவனம் சில நாடுகளில் லஞ்சமளித்து ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
23 மில்லியன் டொலர்களை கடந்த 2003 ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை ஈரானுக்கு வழங்கியுள்ளது. கியூபாவிற்கு 69 மில்லியன் டொலர்களை 2005 முதல் 2006 வரை வழங்கி 295,000 டொலர்கள் அளவில் வியாபாரம் நடத்தியுள்ளது.
மேலும் அரசாங்க நிறுவனங்களுக்கு 91 மில்லியன் லஞ்சம் வழங்கியுள்ளது போன்ற தகவல்கள் அம்பலமானது.

இதனை அறிந்த அமெரிக்க அரசு நிறுவனம் 250 மில்லியன் டொலர்கள் அபராதம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு 65.6 மில்லியன் டொலர்கள், குற்றவியல் தண்டனையாக 87.2 மில்லியன் டொலர்களை நீதிதுறைக்கு செலுத்தவேண்டும் என்றும் மீதமுள்ள அபராத பணத்தை வருமான வரித்துறை மற்றும் வணிகத்துறை பகிர்ந்துக் கொள்ளும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வேதற்போட் நிறுவனத்தின் தலைவர் பெர்நாட் டுரோக் டன்னர் (Bernard Duroc-Danner) கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொழில் முன்னணி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நிலைநிறுத்தவே நாங்கள் எண்ணினோம் என்று கூறியுள்ளார்.
 

களைகட்டிய சாலைவரி ஸ்டிக்கர்!!!

சுவிட்சர்லாந்தில் விதிமுறைகளை மீறி சாலைவரி ஸ்டிக்கர் விற்கப்பட்டுள்ளதை மத்திய அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
வாகனங்களில் ஒட்டப்படும் சாலைவரி ஸ்டிக்கர் டிசம்பர் மாதம் 1 திகதி விற்கப்படவுள்ளதாக அந்நாட்டு மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சுவிஸ் எலக்ட்ரானிக்ஸ் என்ற சில்லரை வணிக நிறுவனமானது 40 பிராங்குகள் பெருமானமுள்ள நெடுஞ்சாலை சாலைவரி ஸ்டிக்கர்களை மிக குறைந்த தள்ளுபடி விலையான 29,95 பிராங்குக்கு விற்பனை செய்யப்போவதாக அந்நிறுவனத்திற்கு சொந்தமான 21 கிளைகளிலும் இந்த மாதமே அறிவித்தது.
இதனை கேள்விபட்ட வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஸ்டிக்கர்களை வாங்கி குவித்தனர்.

இதனை கேள்விபட்ட மத்திய அதிகாரிகள் வேகமாக அந்நிறுவனத்திற்கு சென்று இந்த விற்பனை சட்டவிரோதமானது என்று நிறுத்திவிட்டனர்.
ஆனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த ஸ்டிக்கர்களை வாங்கிவிட்டனர்.
 

புதன், 27 நவம்பர், 2013

சுவிட்சர்லாந்தில் ரயில் விபத்து: 11 பேர் காயம்!!

சுவிட்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ரெயில் ஒன்று சரக்கு வாகனத்துடன் மோதியதில் ரெயிலில் வந்துகொண்டிருந்த 11 பயணிகள் காயமடைந்தனர்.
பனிமலைகள் மிகுந்த வலைஸ் நகரத்திலிருந்து இந்த ரெயில் திரும்பிவந்துகொண்டிருந்தபோது மொரேல் என்ற கிராமத்தின் அருகே இருந்த ஆளில்லா லெவல் கிராசிங்கைக் கடக்க வான் சாரதி ஒருவர் முயற்சித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் பயணிகளுக்குக் காயமேற்பட்டது.  மொத்தம் 41 பயணிகள் ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் 11 பேருக்குக் காயமேற்பட்டது. இதில் இருவருக்குப் பாதிப்புகள் அதிகமாகவும் மற்றவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரெயில் மற்றும் வாகன சாரதி காயமின்றி தப்பித்தனர். ரெயிலின் மூன்று பெட்டிகள் இந்த விபத்தின் காரணமாகத் தடம் புரண்டன. 

கடந்த 2010 ஆம் ஆண்டில் செர்மாட்டிலிருந்து செயின்ட் மோரிசுக்கு சென்றுகொண்டிருந்த வலைஸ் கிளேசியர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 64 வயது கொண்ட ஜப்பானியப் பெண் பயணி ஒருவர் இறந்தார்.

பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்தனர். அந்த விபத்து நடந்த இடத்திற்கு சற்று தூரத்திலேயே தற்போது புதிய விபத்து நடந்துள்ளது.
 

செவ்வாய், 26 நவம்பர், 2013

பெருமளவில் ஊதியக்குறைப்பு: சுவிஸ் அரசு தடாலடி

சுவிஸ் நாட்டில் ஊதியக்குறைப்பு செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு உயர்மட்ட முதலாளிகள் கூடுதல் ஊதியமளிப்பது அதிருப்தி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும் 1:2 என்ற விகிதத்திற்கு ஊதியத்தை கட்டுபடுத்த வேண்டும் என சுவிஸ் வர்த்தகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவர்(Christoph Darbellay) கிரிஸ்டோபர் தார்பேல்லே கூறுகையில், அநியாயமான ஊதியத்தை கொடுத்தது மன அமைதியின்மையாக உள்ளதென தெரிவித்தார்.

மேலும் இம்முறை இவ்வருவாய் உயர்வை முன்னிட்டு நாம் ‘ஆம்’ வாக்களிப்பது என்று வாகாலினை நாமே சுட்டுகொள்வதற்கு சமம் என்றும் சுவிசின் இல்லை என வாக்களிப்பது 1:12 என்னும் விகதத்தில் சட்டவருவாய்துறை மற்றும் வெளியூட்டு நிறுவனங்களை அச்சத்தில் ஆழ்த்தும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சுவிஸின் பொருளாதார அமைச்சர் ஜோகன் ஸ்னைடர் அம்மான்(Johann Schneider-Ammann) கூறுகையில், சுவிஸ் பொருளாதாரம் தான் பாராட்டுவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இப்பிரச்சனையையொட்டி சோசலிச பார்ட்டி தலைமையில் பொது ஜனநாயக வாக்கெடுப்பு

பிரச்சாரம் இளைஞர் பிரிவிலுள்ள பசுமைவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைப்பெற்றது.
இதில் 1:12 என்கிற ஒரு முறைசாரா விகிதத்தில் தங்களுக்கு ஊதியமளிப்பதாக அவர்கள் வாதிட்டுள்ளனர்.
மேலும் மக்கள் இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

திங்கள், 25 நவம்பர், 2013

கால்களுக்கு வலிமை வேண்டுமா? இதோ சுவிஸ் பந்து பயிற்சி(காணொளி, இணைப்பு)


சுவிஸ் பந்து பயிற்சிகள் விரைவில் நல்ல பலனை தரக்கூடியது.
இந்த வகையில் இந்த பயிற்சி கால்களை வலிமையாக்கி, கால்களில் உள்ள அதிகப்படியான சதையை குறைய உதவுகிறது.

பயிற்சி செய்முறை
முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். சுவிஸ் பந்தை கால் பாதத்திற்கு இடையே வைத்து கொள்ளவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி கால்களை மெதுவாக மேல் நோக்கி தூக்கி கீழே இறக்கவும்.

இவ்வாறு ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முதல் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்றாக பழகிய பின்னர் 25 முதல் 30 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் உங்கள் கால்கள் நன்கு வலிமையடைந்து, கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைந்திருப்பதை காணலாம்.
 

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சுவிஸ் மனநல மருத்துவர்களில் உச்சத்தை எட்டியது

                                

சுவிஸ் மக்கள் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வினை அடைய மனநல நிபுணர்களை நாடுகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் பொருளாதார கூட்டுரவு சங்கம் கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டின் ஆய்வின் தகவல் படி இத்தாலி, ஜப்பான் போன்ற 34 நாடுகளுடன் மக்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது சுவிஸ் மக்கள் வாழும் காலம் 82 வருடம் 8 மாதக்காலம் என தெரிவித்துள்ளது.

மேலும் 2011ம் ஆண்டில் சுவிசில் பிறந்த பெண்கள் வாழும் காலம் 82 வருடம் 2 மாதக்காலமாகவும், ஆண்களின் வாழும் காலம் 77 வருடம் 3 மாதக்காலமாகமவும், இவ்விருபாலர்களும் 5 வருடம் 5 மாதக்காலம் வாழும் கால வித்தாசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல்நாடுகளான பிரான்சில் 22.1 சதவீத மனநல மருத்துவர்களும், அமெரிக்காவில் 14.1 சதவீதமும், மெக்சிகோவில் குறைந்தபட்சமாக 1.2 சதவீத அளவில் மட்டுமே மனநல மருத்துவர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சுவிசில் தினந்தினம் மனநல மருத்துவர்கள் அதிகரிக்கின்றனர். மொத்தம் 45.1 சதவீத மருத்துவர்கள் இருக்கின்றனர் என்றும் பிற நாடுகளை காட்டிலும் மூன்று மடங்கு மிகுதியான மனநல மருத்துவர்கள் சுவிசில் இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது
 

சனி, 23 நவம்பர், 2013

கொலைக்குற்றத்தை மறைக்கும் ஜெனிவா பேராசிரியை

அமெரிக்காவில் நடந்த கொலை தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டை ஜெனிவா பெண் பேராசிரியர் மறுத்துள்ளார்.

கலிபோர்னியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வெஸ்டர் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் பெண் ஒருவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மனோத்துவ உளவியல் துறை பேராசிரியரான நார்மா பெட்ரீஷியா எஸ்பார்கா (39) என்பவர் கலிப்போர்னியாவில் 1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி ராமிரேஸ்(24) என்பவரை திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

எஸ்பார்கா இந்த சம்பவம் குறித்து வேன் என்ற நபரிடம் விபரித்துள்ளார். இதனையடுத்து வேன் மற்றும் இரண்டு பேர் இணைந்து ராமிரேஸை கொலை செய்துள்ளனர் என நீதிமன்றம் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க பொலிசாரினால் 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் தற்பொழுது மூன்று லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவரின் கணவரான ஜோர்ஜ் என்பவர் நரம்பியல் நிபுணராவார். அவரே எஸ்பார்காவின் 4 வயது குழந்தை வளர்த்து வருகிறார். தன் மனைவி குற்றமற்றவர் என்று ஜோர்ஜ் வாதிட்டு வருகிறார்.
 

இராணுவ ஆதிக்கம் இல்லாத சிறந்த நாடு சுவிஸ்: நாளிதழ் புகழாரம்


 சுவிட்சர்லாந்து நாடானது இராணுவ ஆதிக்கம் இல்லாத சிறந்த நாடு என்று பிரிட்டிஷ் நாளிதழான மோனகல் புகழாரம் சூட்டியுள்ளது.
இந்த நாளிதழ் நடத்திய கணக்கெடுப்பில் தரவரிசையில் சுவிட்சர்லாந்து 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலாவது இடத்தை ஜேர்மனியும், இரண்டாவது இடத்தை பிரித்தானியாவும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும், நான்காவது இடத்தை பிரான்சும், ஐந்தாவது

 இடத்தை ஜப்பானும், ஆறாவது இடத்தை சுவீடனும், ஏழாவது இடத்தை அவுஸ்திரேலியாவும், எட்டாவது இடத்தை சுவிட்ஸர்லாந்தும் ஒன்பதாவது இடத்தை கனடாவும் பத்தாவது இடத்தை இத்தாலியும் பிடித்துள்ளது.
மேலும் சுவிஸ் நாட்டுக் கொடியுடன் வெளிவரும் எந்தப் பொருட்களும் உலகெங்கிலும் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவின் விளையாட்டுத் தளமான சுவிட்வர்லாந்து, பனிச்சறுக்கு விளையாட்டில் தரமாகவும், சொக்லேட் தயாரிப்பதிலும் உலகின் மிகச் சிறந்த சுவர்க்கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் தயாரிப்பதிலும் சிறந்தது என்று தெரிவித்துள்ளது.

மேலும் அமைதி மாநாடு நடத்தப்படுவதற்கு ஒரு சிறந்த இடமாக சுவிட்சர்லாந்து உள்ளது என்று கூறியுள்ளது
 

வியாழன், 21 நவம்பர், 2013

மலேரியாவை ஒழிப்போம்: திரைப்பட எழுத்தாளர் ரிச்சர்ட் அறைகூவல்



உலகமக்கள் அனைவரும் மலேரியாவை ஒழிக்க பாடுபட வேண்டும் என திரைப்பட கதாசிரியர் ரிச்சர்ட் காட்டிஸ் ஜெனிவாவில் நேற்று அறைகூவல் விடுத்துள்ளார்.
ரிச்சர்ட் கடந்த 10 ஆண்டுகளாக மலேரிய ஒழிப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரிச்சர்ட் இதுகுறித்து கூறுகையில், இதற்கான எளிய வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன. அவற்றை முறைப்படி பின்பற்றுவது மலேரியாவை ஒழிக்க உதவும்.
மேலும் வருடத்தில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மலேரியாவினால் கொல்லப்படுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலான மக்கள் ஆப்பிரிக்க கண்ட நாடுகளிலேயே உயரிழந்து வருகின்றனர் என்றும் மலேரிய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஒரு ஆப்பிரிக்க குழந்தையின் மரணம் கொடூரமானது, கற்பனை செய்தும் பார்க்க முடியாதது எனவும் கூறியுள்ளார்.

பஞ்சத்தில் வாடி வரும் எத்தியோப்பியாவில் ரிச்சர்ட் 1985 ஆம் ஆண்டு நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார்.

1988ம் ஆண்டு ஐ.நா மற்றும் உஸ்பொகிஸ்தானுடன் இணைந்து மலேரியா நோயை பரப்பும் கொசுக்களை அழிக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 

அழைப்பிதழோடு விபச்சாரத்தில் அசத்தும் அதிகாரிகள்



சூரிச் பகுதியில் விபச்சாரத்திற்கு துணை போன 11 பொலிசார்கள் குறித்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் இயங்கி வரும் சில்லி இரவு நேர விடுதியில் 11 பொலிசார்கள் அங்கு நடக்கும் விபச்சாரத்திற்கு உதவி செய்துள்ளனர்.

அதாவது அங்கு நடைபெறும் அக்டோபர்பிஸ்ட் விருந்தில் இவர்களுக்கு வரவேற்பு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளன.
இதில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் அங்கு வழங்கப்படும் வகை வகையான உணவுகள் மற்றும் பெண்களை லஞ்சமாக பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் வாடிக்கையாளர்கள் அதிமாக செலவு செய்து அழைப்பிதழை பெற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த அழைப்பிதழ் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இவர்கள் தினமும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளலாம். இந்நிலையில் இந்த உண்மையான வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் காவல்துறை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதியின் உரிமையாளர் எதுவும் கூற மறுத்துவிட்ட நிலையில் பொலிசாருக்கு 50 பிராங்குகள் அபராதம் விதித்து தலைமை அதிகாரி உத்தவிட்டுள்ளார்
 

திங்கள், 18 நவம்பர், 2013

வறிய நாடுகளுக்கு உதவும் மனப்பான்மையற்ற சுவிஸ்


 
உலகில் செல்வந்த நாடுகள் வரிசையில் இருக்கும் சுவிட்சர்லாந்து வறிய நாடுகளுக்கு உதவும் நாடுகள் வரிசையில் மோசமான இடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கை ஒன்றில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த உலகளாவிய அபிவிருத்தி மையம் Center for Global Development (CGD) வெளியிட்டு அறிக்கையில், சுவிட்சர்லாந்து சர்வதேச அமைதிக் காக்கும் பணிக்காக மிகவும் குறைவான பணத்தையே செலவிட்டுள்ளது.

மேலும் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களுக்காக சுவிட்சர்லாந்து செலவுகளை செய்வதே இல்லை என்றும் சர்வதேச அபிவிருத்தி மையத்தின் அறிக்கையின் படி மிகவும் கீழ் மட்டத்திலேயே உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் டென்மார்க் முதலிடத்தில் இருப்பதுடன் சுவீடன், நோர்வே, லக்ஸ்ஸம்பேர்க், நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
தென் கொரியாவும் ஜப்பானும் கடைசி நிலையில் இருப்பதுடன் ஏனைய நாடுகளுக்கு உதவி செய்யும் கொள்கையை பின்பற்றி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சுவிஸில் முதல் “ரயில் காபி ஷாப்” ஆரம்பம்


 சுவிட்சர்லாந்தில் மத்திய ரயில்வே, ஸ்டார்பக்ஜ் காப்பி ஷாப்புடன் இணைந்து ஓடும் ரயில்களில் காப்பி ஷாப் சேவையை ஆரம்பித்துள்ளது.

இதுவே உலகில் முதல் ஸ்டார் பக்ஸ் கபேவுடன் கூடிய ரயில். இச்சேவை நவம்பர் 27ம் திகதி முதல் சுவிஸ் நகரங்களுக்குள் ஓடும் ரயில்களில் தொடங்கப்பட உள்ளது.

ஸ்டார் பக்ஸ் காப்பி ஷாப் அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரில்மிகப் பெரிய நிறுவனமாகும். அது மிகப் பெரிய காப்பி ஹவுஸ் தொடர் நிறுவனமாக உலகெங்கிலும் உள்ளது.

இது 62 நாடுகளில் 21,000 காப்பி ஷாப்புக்களை வெற்றிகரமாக நடத்தி வாடிக்கையாளர்களில் ரயில் பயணிகளின் சௌகரியத்தையும் வீட்டில் ஓய்வெடுப்பது போன்ற வசதியையும் செய்து கொடுப்பதில் முன்னணியில் உள்ளது
 

ஜப்பானில் களைகட்டும் சுவிஸ் சொக்லேட்


 
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சொக்லேட் தொழிற்சாலை ஜப்பானில் திறக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்த சொக்லேட் தயாரிப்பாளர் பேர்ரி கேவிபாட் என்பவர் 18.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவு செய்து தொழிற்சாலையை திறந்துள்ளார்.

இது ஆசியாவின் மிகப்பெரிய சொக்லேட் தொழிற்சாலையாகும்.
இதுகுறித்து ஜப்பான் பிரதம மந்திரி ஷின்ஷோ ஏபீ கூறுகையில், சைனாவின் திறந்தவெளி பொருளாதாரக் கொள்கையை சமாளிக்கும் நோக்குடன் இத்திட்டத்தை முதலீடு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஜப்பானியர்களில் பெரும்பாலனோர் சாக்கோலீக்ஸ் சொக்லேட் பிரியர்களாக இருப்பதால் சொக்லேட் விற்பனை வெகுவாக களைகட்டும் என்று நம்பலாம்.
 

தேர்வில் சுறுசுறுப்பு வேண்டும்! மாத்திரைகளை பயன்படுத்தும் மாணவர்கள்


 சுவிட்சர்லாந்தில் ஏழு மாணவர்களில் ஒருவர் படிப்பதற்காக சுறுசுப்பை கொடுக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இந்த மாணவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் திறனை அதிகரிக்க செய்யும் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
சூரிச், பெசல் மற்றும் ஆஎச் பல்கலைக்கழங்களில் பயிலும் 6 ஆயிரத்து 725 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களில் 13.8 வீதமானவர்கள் தமது கல்வித் திறனை அதிகரிக்க செய்யும் மாத்திரைகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இவர்கள் ரிட்டாலின், தூக்க மாத்திரைகள், அம்பெட்டாமின்ஸ் ஆகிய மாத்திரைகளை பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் பரீட்சைகளின் போது இவற்றை பயன்படுத்துவதாக சூரிச் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சைகோஸ்டிமுலன்ட்ஸ் மருந்துகளை பயன்படுத்தும் மாணவர்களை ஆய்வு செய்த சூரிச் ஆய்வு நிலையம், 95 வீதமான மாணவர்கள் சுறுசுப்பு

மாத்திரைகள் அல்லது நியூசோஎன்சோன்ஸ்மென்ட் போன்ற மாத்திரைகள் பற்றி அறிந்திருந்தாலும் அவற்றை மிக குறைந்தளவிலேயே பயன்படுத்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.
 

 

அமெரிக்க குடியுரிமையை இழந்த சுவிஸ் பாடகி


சுவிட்சர்லாந்தில் மிக நீண்டகாலமாக வசித்து வரும் பாப் இசைக் கலைஞரான டினா டோனர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயதான டினா 2009ம் ஆண்டு வரை பாப் இசைப் பாடகியாக இருந்துடன் இசைத்துறையில் இருந்து ஓய்வுபெற்றார்.

இருபது ஆண்டு காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த இவர் அந்நாட்டு குடியுரிமையை பெற்ற செய்தியான பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சுவிஸ் பிரஜையான டினா தனது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் 24ம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்தாக தி வொஷிங்டன் போஸ்ட் வெளிநாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
 
 

உலகின் அரிய மஞ்சள் வைரம் 8.3 கோடி டொலருக்கு ஏலம்


சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் அரிய வகை வைரங்களின் ஏலம் நடைபெற்றது.

59.60 கேரட் எடை கொண்ட மஞ்சள் வைரம் என்றழைக்கப்படும் இந்த அரியவகை வெளிர்சிகப்பு நிற வைரம் சுமார் 6 கோடி அமெரிக்க டொலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்ப்பார்ப்பை முறியடித்து 8.3 கோடி அமெரிக்க டொலர்களுக்கு  இந்த வைரம் விற்பனையானது.

தொடக்க விலையாக சுவிட்சர்லாந்து நாட்டு ‘பிராங்க்’கில் 48 மில்லியன் பிராங்காக ஏலம் போன இந்த வைரத்தின் விலை படிப்படியாக 10 லட்சம் பிராங்குகளாக உயர்ந்தது. இறுதியாக 6.7 கோடி பிராங்குகளுக்கு (8.3 கோடி அமெரிக்க டாலர்) ஏலம் முடிவடைந்தது.

தனது பெயர், இருப்பிடம் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துவிட்ட ஏலம் எடுத்த நபர், வேறொருவர் சார்பாக இந்த ஏலத்தில் பங்கேற்றதாக தெரிவித்தார்.
 

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஆங்கிலத்தில் பின்தங்கும் சுவிஸ்

 
சுவிட்சர்லாந்து நாடு ஆங்கிலத் திறமையில் பின்தங்கி காணப்படுகின்றது என்று ஆங்கில திறமை அட்டவணை தெரிவித்துள்ளது(English Profiency Index).
உலகளவில் இந்த அட்டவணை மேற்கொள்ளப்பட்டதில் சுவிஸ் நாடு 16 வது இடத்திலேயே ஆங்கில மொழியினை வைத்துள்ளது என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், சுவிஸில் பன்மொழிகள் பேசப்படுகின்றன என்றும் ஆனால் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ரோமன்ஷ் என நான்கு தேசிய மொழிகளை கொண்டுள்ளது. அவற்றில் ஜேர்மனி மொழி பேசுபோர் 64 சதவீதமும், பிரெஞ்சு 20 சதவீதமும், இத்தாலியன் 7 சதவீதம் மற்றும் ரோமன்ஷ் பேசுவேர் 1 சதவீதமும் உள்ளனர்.

சுவிஸில் ஆங்கில திறமை பின்னோக்கி செல்வதற்கு சரியான வெளிக்காட்டுதல் இல்லாததே காரணம் என்று தெரிவித்துள்ளது.
 

வேலையில்லாமல்சுவிசில் திண்டாடும் வெளிநாட்டவர்கள்


சுவிசில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வெளிநாட்டவர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிசில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு புள்ளிவிபர தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த மூன்று மாதங்களாக மாறாமல் இருந்த இந்த சதவிகிதம் சற்று மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சுவிசை தாயகமாக கொண்ட இளைஞர்கள் 2.2 சதவிகிதம் பேரும், வெளிநாட்டவர்கள் 5.8 சதவிகிதம் பேரும் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
எனவே வெளிநாட்டவர்களால் தான் சுவிசில் வேலையில்லாதோரின் சதவிகிதம் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சனி, 9 நவம்பர், 2013

சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு


பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், பொலோனியம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், கடந்த 2004ல் அக்டோபரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார், அதன்பின் நவம்பரில் இறந்தார்.

இந்நிலையில் மனைவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரது சடலம் அப்போது பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2006ல் ரஷ்ய உளவு துறையை சேர்ந்த அலெக்சாண்டர் லிட்வென்கோ, லண்டன் ஓட்டலில் தங்கியிருந்த போது காபியில் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.
அதேபோல் அராபத்துக்கும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு அராபத் உடல் தோண்டியெடுக்கப்பட்டு அவரது உடலின் பல்வேறு உறுப்புகளை எடுத்து பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
சுவிட்சர்லாந்து நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், அறிவியல் அடிப்படையில் அராபத் இயற்கையாக நோய்வாய்பட்டு இறக்கவில்லை. அவரது உடலின் பல்வேறு உறுப்புகளில் பொலோனியம் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை பெற்றுக் கொண்ட பின், அராபத் மனைவி சுஹா பாரிசில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், எனது கணவருக்கு அரசியல் எதிரிகள் அதிகம், விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது.
இதற்காக நான் எந்த நாட்டையும், தனி நபர் யாரையும் குற்றவாளி என்று கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

செவ்வாய், 5 நவம்பர், 2013

மில்லியன் கணக்கான பரிசினை பெற தாமதன் ஏன்?


சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய லொத்தரி பரிசாக யூரோ மில்லியன் லொத்தரி ஜாக்பாட்(Euro Million Lottery Jackpot) கருதப்படுகிறது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 114 மில்லியன் பிராங்குகள் அதாவது 125 மில்லியன் டொலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிசினை வென்ற நபர் இதுவரையிலும் பணத்தை பெற்றுக்கொள்ள வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் பேச்சாளர் கூறுகையில், பரிசுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரத்திற்குள் 80 சதவிகித மக்கள் பெற்றுச் செல்வர்.

ஆனால் ஜாக்பாட்டை வென்ற நபர் இன்னும் வரவில்லை, ஆறு மாதங்கள் கழிந்த பிறகு பரிசு கிடைக்கப்பெறாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லி மான்டின் என்பவர் கூறுகையில், பரிசு

பெற்ற நபர் நிதிநிலைமையின் காரணமாக பெறாமல் இருக்கலாம்.
அதாவது 2013ம் ஆண்டு பரிசினை பெற்றால் அதிகளவு வரி செலுத்த நேரிடும்.
இதுவே 2014ம் ஆண்டு என்ற போது குறைந்தளவு வரி செலுத்தினாலே போதுமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.
 

சனி, 2 நவம்பர், 2013

உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்:


இந்தாண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிபா கால்பந்தாட்ட அமைப்பின் அதிபர் பிளாட்டர் இடம்பெற்றுள்ளார்.
உலகின் அதிகாரம் மிக்க அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடும்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிபா கால்பந்தாட்ட அமைப்பின் பிளாட்டர் 69வது இடத்தை பிடித்துள்ளார், கடந்தாண்டு பிடித்த இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இவர் 4வது தடவையாக அதிபராக பதவி வகிக்கிறார்(1998, 2002, 2007, 2011).
இந்த ஆண்டின் டாப் 10 பட்டியல்:

1. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்.
2. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.
3. சீன கம்யூனிஸ்ட் தலைவர் க்சி ஜின்பிங்.
4. கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ்.
5. ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல்.
6. மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ்.
7. அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் பென் எஸ்.பெர்னகே.
8. சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ்.
9. ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ டிராகி.
10. வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக்கேல் டியூக்.
 
Blogger இயக்குவது.