புதன், 21 ஜனவரி, 2015

அகதிகளாக தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு தடுக்க சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சான்றுகள் மறுசீராய்வு செய்யப்பட உள்ளன.
எனவே அவற்றை மத்திய புலனாய்வு துறைக்கு அனுப்பியுள்ளதாக அத்துறையின் செய்தி தொடர்பாளர் மார்ட்டின் ரீச்சலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவற்றின் முடிவுகள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்படும் என மார்ட்டின் ரீச்சலின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களின் சான்றுகளை ஆய்வுக்காக அனுப்புவதாக சுவிஸில் வெளியாகும் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

மேலும், ஐ.எஸ் தீவிரவாத பிரிவை சேர்ந்த பல நபர்கள் அகதிகள் என்ற போர்வையில் ஏற்கனவே சுவிஸ் நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என NZZ am Sonntag என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிஸ் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ள ஈராக்கியர்களில் மூன்றில் ஒரு அகதி தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என மத்திய புலனாய்வு துறையில் உள்ள அதிகாரிகள் கருதுவதால், அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மத்திய குற்றவியல் துறையின் உயர் அதிகாரியான ஜாக்கூஸ் ரீபாண்ட் கூறுகையில், சுவிஸிற்குள் அகதிகளாக நுழையும் தீவிரவாதிகள் அகதிகளுக்குரிய சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றி தான் வருகிறார்கள் என்பதை தன்னால் ஏற்க முடியாது.
மேலும், அகதிகளின் சான்றுகளை அதிகாரிகள் நேர்மையாக, முறையாக ஆய்வு செய்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

அவதிப்படும் சுவிஸ் மக்கள்: 25 ஆண்டுகளாக தொடரும் அவலம்

சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 25 வருடங்களாக அழுகிய துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
Ticino கிராமத்திலேயே இந்த அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இக்கிராமத்தின் Gordola பகுதியில் வசிக்கும் ஓஸ்வால்டோ காடிகா(67) என்பவர் கூறுகையில், உலகின் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என தங்களது வீட்டு ஜன்னல்களை எப்போதும் திறந்து வைத்திருப்பார்கள்.
ஆனால், இங்கே எங்கள் வீடுகளுக்குள் அசுத்தமான துர்நாற்றம் உள்ளே வந்தவிட கூடாது என எல்லா ஜன்னல்களையும் மூடியே வைத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் 14 வயது மாணவன் ஒருவன் கூறுகையில், நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால், இந்த துர்நாற்றாத்தால் மிகவும் அவதிப்படுவார்கள். அதனால், என் நண்பர்கள் அடிக்கடி இங்கே வருவதை தவிர்த்து விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கிராமத்தை சுற்றி சுமார் 3 கி.மீ சுற்றளவில் உரம் சுத்திகரிக்கும் ஆலை, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, கோழி பண்ணை உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான ஆலைகள் அமைந்திருப்பதால், அவைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தான் இந்த துர்நாற்றத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மேயர் கூறுகையில், உரங்களை சுத்திகரிக்கும் கம்போடினோ ஆலை சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதுடன்,
 அது காற்று மண்டலத்தை வெகுவாக அசுத்தப்படுத்துவதால் அந்த ஆலையை மூட ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உர சுத்திகரிப்பு ஆலையின் நிறுவனர், இது பொய்யான குற்றச்சாட்டு. பிற உரங்கள் சுத்திகரிப்பு ஆலைகளை விட எங்களது ஆலை குறைவான மாசுபாட்டை தான் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் தொடரும் இந்த அவலத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் Basta Puzze என்ற ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் அப்பகுதி ஆலைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கான அனுமதியை கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Blogger இயக்குவது.