புதன், 27 ஏப்ரல், 2016

பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்த புதிய சட்டம்: நன்மையா? தீமையா?

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்தும் வகையில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என கவுன்சிலர் ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. ஆனால், இதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதுமட்டுமில்லாமல், பாலியல் தொழிலாளிகளுக்கு அரசாங்கமே பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.
குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலாளிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தி வருவதால், பாலியல் தொழிலாளிகள் விளம்பரம் செய்வதற்கு, ‘மேக்-அப்’ செய்வதற்கு, அழகை மெருகூட்ட மருத்துவ சிகிச்சை செய்வதற்கு அரசு கட்டண சலுகைகளை வழங்கி வருகிறது.
இதுமட்டுமில்லாமல், சூரிச் நகரில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு சாலையோரம் சிறிய அளவில் பல அறைகளை அரசாங்கம் அமைத்துள்ளது.
அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் பாலியல் பெண்கள் மட்டுமே இந்த அறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாலியல் தொழிலாளிகளுக்கு இத்தனை வசதிகள் உள்ளபோதிலும், அவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என 
கூறப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு சூரிச் நகரின் மத்தியில் உள்ள சில பொது இடங்களில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்க கூடாது என அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்ததால், பாலியல் தொழிலாளிகள் நகரத்திற்கு வெளியே செல்ல வேண்டிய நிலை 
ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை சில ஆள் காட்டி நபர்கள் மூலம் கண்டுபிடிப்பதால், அவர்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் பாலியல் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சுவிஸின் SP கட்சியின் சூரிச் நகர கவுன்சிலரான Christine Seidler என்பவர் அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது, சூரிச்சில் பாலியல் தொழிலை அரசாங்கத்தின் செலவில் அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கத்திற்கு அவர் கடந்த வாரம் ஒரு மனுவையும் அனுப்பியுள்ளார்.
சூரிச் மாகாண ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த மனுவிற்கு சம்மதம் தெரிவித்தால், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால், சுவிஸ் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
SVP எனப்படும் சுவிஸ் மக்கள் கட்சியின் கவுன்சிலரான Martin Gotzl என்பவர் பேசுகையில், ‘பாலியல் தொழிலை ஏற்று நடத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் முக்கிய பணிகளில் 
ஒன்று இல்லை.
அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பாலியல் தொழிலை அரசு நடத்த வேண்டும் என்பது ஒரு மோசமான முன்னுதாரனமாக ஆகிவிடும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 23 ஏப்ரல், 2016

.புகலிடம் கோரிய இலங்கையரின் தகவல்களை தர மறுக்கும் சுவிஸ்

.இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் புகலிடம் கோரிய 147 இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இலங்கை அரசுக்கு வழங்க சுவிஸ் அரசு 
மறுத்துள்ளது.
இலங்கையில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிகளே இந்த இலங்கையர்கள் அங்கு செல்ல வீசா அனுமதியை வழங்கியிருந்தனர்.
அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் இதில் இருப்பதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
வட பகுதி அரசியல்வாதிகள் மற்றும் கொழும்பில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இவர்களுக்கு அரசியல் புகலிடத்தை வழங்குமாறு பரிந்துரைகளை வழங்கியிருப்பதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண் ஒருவர் கடவுள் பெயரை வைத்திருந்த வங்கிகணக்கைய் வங்கி முடக்கியது!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடவுள் பெயரை வைத்திருந்த பெண் ஒருவரின் வைப்பு கணக்குகளை வங்கி ஒன்று முடக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் லவ்சென் நகரை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா ஏஜென்சி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் இவரது ஊழியர்களுக்கும் Postfinance என்ற வங்கி மூலமாக நிதிப் பறிமாற்றங்கள் நடைபெற்று வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மேலாளருக்கும் அவரது ஊழியர்களுக்கும் வரவேண்டிய தொகையானது மிகவும் தாமதமாகவும், சில நேரங்களில் வராமலும் முடக்கப்பட்டது மேலாளருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கு வங்கி நிர்வாகிகளிடமே அவர் நேரடியாக விளக்கம் கேட்டுள்ளார். மேலாளரின் கேள்விக்கு பதிலளித்த வங்கி ‘மேலாளர் Isis Bihiry எனப் பெயர் வைத்திருந்ததால், அவர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கருதி வங்கி கணக்கினை முடக்கியுள்ளதாக’ 
பதிலளித்துள்ளனர்.
மேலாளரின் Isis என்ற முதல் பெயரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பின் பெயரும்(ISIS) ஒரே மாதிரி இருப்பதால், இந்த குழப்பம் ஏற்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
Isis என்பது எகிப்து நாட்டு மக்கள் வணங்கி வரும் ஒரு பெண் கடவுளின் பெயர் ஆகும். மேலாளர் எகிப்து நாட்டை பூர்வீகமாக கொண்டதால், அந்த பெண் கடவுளின் பெயரை தனது முதல் பெயராக வைத்துள்ளதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மேலாளர் குழப்பத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளதால், அவருக்கும் அவரது ஊழியர்களுக்கும் சேர வேண்டிய தொகையை வங்கி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 13 ஏப்ரல், 2016

மிகப்பெரிய பணக்காரர்கள் வசிக்கும் மாகாணமாக சுவிஸில் Zug தெரிவு

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகளவில் பணக்காரர்கள் வசிக்கும் முதல் 10 மாகாணங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
உலகளவில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. 26 மாகாணங்கள் கொண்டுள்ள இந்த நாட்டிற்குள் மிக அதிகளவில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் மாகாணங்கள் எவை என அண்மையில் ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டது.
வீடு, கார், தோட்டம் உள்ளிட்ட அசையும் அல்லது அசையா சொத்துக்களை வாங்கும் திறன் படைத்தவர்களின் வசதியை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது, 2016ம் ஆண்டில் அதிகளவில் வாங்கும் திறன் கொண்டவர்களின் சராசரி யூரோவை ஒப்பிட்டு இந்த ஆய்வு 
எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எடுக்கப்பட்ட ஆய்வில், சுவிட்சர்லாந்து நாட்டிலேயே அதிகளவில் பணத்தை செலவிட்டு வாங்கும் திறன் படைத்த பணக்காரர்கள் Zug மாகாணத்தில் வசித்து வருவது
 தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.