புதன், 18 ஜனவரி, 2017

சுவிஸில் நிகழ்ந்த கோர சம்பவம் பனிச்சரிவில் சிக்கி 1,884 பேர் பலி!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சரிவு விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்த நாள் முதல் தற்போது வரை சுமார் 1,884 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்படுவது என்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமின்றி சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்கும் பிடித்தமான பொழுதுபோக்காகும்.
ஆனால், ஆபத்து நிறைந்த இவ்விளையாட்டில் ஏற்படும் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பனிச்சரிவு விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கடந்த 1936-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தற்போது வரை பனிச்சரிவு விபத்துக்களில் சிக்கி சுமார் 1,884 பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
2017 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதல் பனிச்சரிவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உரி மாகாணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவர் பனிச்சரிவில் சிக்கி சுமார் 400 மீற்றர் ஆழத்தில் சிக்கியுள்ளார்.
நண்பர்கள் அவரை தோண்டி மீட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து வாலைஸ் மாகாணத்தில் நண்பர்கள் ஐவர் கடந்த சனிக்கிழமை அன்று பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு விபத்தில் 3 பேர் சிக்கியுள்ளனர். உடனடியாக மூவரும் ஹெலிகொப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக மூன்றாவது நபர் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பனிச்சறுக்கு விளையாட்டின்போது உயிரிழந்த இருவரின் மரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 16 ஜனவரி, 2017

இளம்பெண் ஒருவருக்கு சுவிசில் இழைக்கப்பட்ட அநீதி!

Nancy Holten என்னும் பெண் வேறு நாட்டில் பிறந்திருந்தாலும், தன் எட்டு வயது முதல் சுவிற்சர்லாந்தில் தான் வசித்து வந்தார்.
அவர் மீது எந்தவொரு குற்ற பதிவோ அல்லது தவறுகளோ இதுவரை இருந்ததில்லை. ஆனாலும் அவருக்கு சுவிற்சர்லாந்து பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் தெரியுமா? சுவிஸ்ஸில் அதிலும் முக்கியமாக வடக்கு சுவிற்சர்லாந்தில் குதிரை பந்தயம் நடத்தும் பழக்கம் உள்ளது. மேலும் அங்கு ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி உணவுகளை எல்லோரும் சாப்பிடும் Sunday roast என்னும் கலாசாரம் உள்ளது.
இயற்கையிலேயே சைவம் பிரியரும், விலங்குகளை வதம் செய்வதை விரும்பாதவருமான Nancy இதை எதிர்த்து சிலருடன் சேர்த்து பல முறை போராட்டம் நடத்தியுள்ளார்.
அவர்களை கலாச்சாரத்தை Nancy எதிர்க்கிறார் என கரம் வைத்து அந்நாட்டின் மாநகராட்சி ஊழியர்கள் இவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் அலைகழிக்கின்றனர்.
இது குறித்து Nancy கூறுகையில், நான் எந்த தவறும் செய்யவில்லை. என் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை இரு முறை அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.
நான் என்னவோ குற்றவாளி போல என்னை அவர்கள் நடத்துகிறார்கள்.
இது ஜனாநாயகத்தின் மேலே கேள்விகுறியை ஏற்படுத்துகிறது , நான் இது பற்றி மண்டல அரசிடம் முறையிட்டுள்ளதாக 
கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சுவிஸ் இளைஞன் விபச்சார அழகியை கொலை செய்தது ஏன்?


ஜேர்மனியின் Freiburg நகரில் 27 வயது இளைஞர் ஒருவர் வசித்து வந்தார், சம்பவத்தன்று 49 வயதான ஒரு விபச்சார அழகியை குறித்து இளைஞர் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் அவர் மட்டும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். அவரின் வீட்டிலிருந்து அடுத்த நாள் துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் பார்த்த போது,பெண் ஒருவர் மிக கொடூரமாக மார்பில் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட நிலையில் கிடந்தார்.
பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்த பொலிசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் Dominican Republicஐ சேர்ந்தவர் என்பதும், கொலை செய்த இளைஞர் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தற்போது இளைஞனை கைது செய்துள்ள பொலிசார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சுவிட்சர்லாந்தில் ருத்ரதாண்டவம் ஆடிய புயல்!

சுவிற்சர்லாந்து நாட்டை தாக்கிய Egon புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் தற்போது விடிய விடிய பெய்யும் மழை மற்றும் மணிக்கு 139 கி.மீ அளவில் வீசும் சூறாவளி காற்றால் சாலையில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சரிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10,000க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
முக்கியமாக குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
பலத்த காற்றுடன் 10 செண்டிமீட்டர் அளவிலான பனிபொழிவின் தாக்கமும் இங்கு அதிகமாக உள்ளது.
இந்த நிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என அந்நாட்டு வானிலை மையங்கள் கூறியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம், நிலைமை விரைவில் சீராகிவிடும் என அரசு அறிவித்திருப்பது
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



தேவலாயத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: வெளிநாட்டவருக்கு வலைவீச்சு

சுவிஸ் தேவாலயத்திற்கு சென்ற சிறுமியை வெளிநாட்டவர் ஒருவர் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Valais மாகாணத்திலே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் வழக்கறிஞர் Valais நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு அருகே உள்ள தேவலாயத்தில் நடக்கும் கூட்டத்திற்கு வாரம் வாரம் வழக்கமாக குடும்பத்தினருடன் சென்று வந்நதுள்ளார். சில நேரம் சிறுமி மட்டும் தனியாக சென்று 
வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி தனியாக சென்றுள்ளார். கூட்டம் முடிந்து தேவாலயத்தை விட்டு வெளியே வரும் வழியில் சிறுமியை மறித்த மர்ம நபர். சிறுமியை அருகே உள்ள மர பட்டறைக்கு தூக்கிச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், குற்றவாளி ஏற்கனவே இரண்டு வழக்குகளில் தொடர்புடைய 41 வயதான மாசிடோனியா சேர்ந்தவர் என தகவல்கள்
 வெளியாகியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

டாக்ஸியில் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்

சுவிட்சர்லாந்தில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காரில் பயணித்த மாணவியிடம் தவறாக நடந்துக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு சூரிச் பகுதியில் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த இளம் கல்லூரி மாணவி ஒருவர், வீட்டிற்கு டாக்ஸியில்
 பயணித்துள்ளார்.
பயணத்தின் போது போதையில் மாணவி தூங்கியதை அடுத்து இதை சாதகமாக பயன்படுத்தி ஓட்டுநர் அத்துமீறி நடந்துள்ளார்.
உடனே விழித்துக்கொண்ட மாணவியிடம் தவறாக பேசவே, மாணவி ஓட்டுநரை தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஓட்டுநர் மாணவியை காரிலிருந்து தூக்கி எறிந்துள்ளார்.
குறித்த வழக்கின் விசாரணை சூரிச் நீதிமன்றத்தல் நடைபெற்றது, இதன் போது ஓட்டுநர் மாணவி தான் அடித்து காரை சேதப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
எனினும், விசாரணையின் முடிவில் ஓட்டுநர் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 3000 பிராங்குகள் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.