ஞாயிறு, 12 மார்ச், 2017

உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி..!!

சுவிட்சர்லாந்தின் பேசல் என்ற நகரில் ரோட்டின் மீது ஒரு உணவு விடுதி உள்ளது. நேற்று இரவு 8.15 மணியளவில் அங்கு அதிகம் பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். திடீரெனயாரும் எதிர்பார்க்காத போது தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் 
சரமாரியாக சுட்டனர்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் அதே இடத்தில் பரிதாபமாக
 உயிர் இழந்தனர்.
ஒருவருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது உயிர் ஊசலாடுவதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் அருகேயுள்ள ரெயில் நிலையம் நோக்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் நடப்பது 
மிகவும் அரிது.
அங்கு ராணுவத்தில் பணி புரிந்தவர்கள் மட்டுமே துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவே சில நேரங்களில் பாதகமாக அமைந்து விடுகிறது. எனவே முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 7 மார்ச், 2017

சுவைச் ( Schwyz )என்ற பகுதியில் சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம்!

சுவிட்சர்லாந்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக 
கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் முதல்கட்டத்தகவல் படி 4.7 ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கும் என்று 
கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் நாட்டின் முக்கிய நகரான Schwyz என்ற பகுதியில் இரவு 9.12 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது வடகிழக்கு பகுதியின் குலாஸ்பன்ஸ் பகுதிக்கு 6 கி.மீற்றர் தொலைவில் உள்ளதாக
 கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், எனினும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் பொலிசாருக்கு தொடர்ந்து தொலைபேசிகள் அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும், இதுவரை 20 முதல் 30 தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளதாகவும் 
கூறப்படுகிறது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், தற்போதைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும், ஆனால் இரவில் நிச்சயம் பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Blogger இயக்குவது.