செவ்வாய், 25 ஜூலை, 2017

வாளால் சுவிட்சர்லாந்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்: 5 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் சவோகவுசன் (Schaffhausen) நகரின் மத்திய பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று வாளால் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜேர்மனி எல்லையில் அமைந்துள்ள சவோகவுசன் (Schaffhausen) நகரில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.(24.07.2017)?
உள்ளூர் நேரப்படி காலை 10.39 மணியளவில் பொலிசாருக்கு குறித்த தகவல் தொடர்பில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மட்டுமின்றி அப்பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் பொதுமக்கள் புழங்கும் பகுதிகளை
 மூட உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் செயல்பட்டுவரும் நபர் ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், நபர் ஒருவர் சாலையின் நடுவே நடந்து வந்ததாகவும், திடீரென்று chainsaw எனப்படும் ஆயுதத்தால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியதாக கூறியுள்ளார்.கண்மூடித்தனமான இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் இருவரது நிலை கவலைக்கிடம் எனவும் தெரிய வந்துள்ளது.
சம்பவயிடத்தில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குறித்த தாக்குதலானது பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும், மாயமான மர்ம நபரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மிகவும் ஆபத்தானவர் எனவும் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 20 ஜூலை, 2017

எஸ்.பி கட்சி கோரிக்கை சுவிஸில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை?:

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் சுவிஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி கட்சி
 முன் வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி அந்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை.
சுவிஸில் வசிக்கும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஆனால், இச்சட்டத்தை நீக்கிவிட்டு சுவிஸில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என SP கட்சியின் தேசிய கவுன்சிலரான Cedric Wermuth என்பவர் கோரிக்கை 
விடுத்துள்ளார்.
இதுக் குறித்து அவர் பேசியபோது, ‘அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் அந்நாடுகளின் குடியுரிமை தானாகவே கிடைக்கிறது.
பெற்றோர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைப்பதில் 
எவ்வித தடையும் இல்லை.
இதுபோன்ற ஒரு சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசும் பின்பற்ற வேண்டும்.
சுவிஸில் புகலிடம் பெற்ற அகதிகளாக இருந்தாலும், புகலிடத்திற்காக காத்திருக்கும் பெற்றோர்களாக இருந்தாலும், சுவிஸில் மண்ணில் இவர்களுக்கு குழந்தை பிறந்தால் சுவிஸ் குடியுரிமை தானாக கிடைக்கப்பெற வேண்டும்.
ஜனநாயகம் என்பது அனைத்து மக்களையும் ஒன்றாக இணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களின் ஒருமைப்பாட்டிற்கு முடிவாக இருக்க கூடாது’ என Cedric Wermuth கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும், இவரது கருத்திற்கு FDP மற்றும் SVP கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 11 ஜூலை, 2017

மனைவியின் பிரசவத்திற்கு கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் கூடிய 20 நாள் விடுமுறை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் வாக்கெடுப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், சுவீடன், போலந்து, பின்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கி
 வருகின்றன.
இந்த வரிசையில் போர்ச்சுகல் நாடு 100 சதவிகித ஊதியத்துடன் 5 வாரங்கள் கணவருக்கு விடுமுறை வழங்கி வருகிறது.
எனினும் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதை நிராகரித்து 
வருகிறது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Paternity Leave Now! என்ற பிரச்சார குழு இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் ஆதரவை திரட்டி வருகிறது.
சுமார் 1 லட்சம் மக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தால் இதுகுறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், எதிர்ப்பார்த்ததை விட தற்போது 1,30,000 பேர் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்து கையெழுத்திட்டுள்ளனர்.
இதுக் குறித்து பிரச்சார குழுவின் தலைவரான Adrian Wuthrich என்பவர் பேசியபோது, பொதுமக்களின் கோரிக்கை மனு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஒப்புதல் அளித்துள்ளதால் 6 மாதங்களுக்கு பிறகு அரசாங்கம் நடத்தவுள்ள பொதுவாக்கெடுப்பு வெற்றிப் பெற வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் ஆதரவை தொடர்ந்து இத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துவதில் தடை இருக்க முடியாது என Adrian Wuthrich தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 5 ஜூலை, 2017

சூரிச் நகரில் ட்ராம் மீது சிறுமி மோதி பலியான துயரச்சம்பவம்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகனம் மீது மோதி சிறுமி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள சூரிச் நகரில் தான் இத்துயர சம்பவம் 
நிகழ்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் சூரிச்சிற்கு அருகில் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின்னர் Glattalbahn என்ற இடத்திற்கு வந்தபோது ட்ராம் வாகனம் செல்லக்கூடிய பாதையை சிறுமி கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பாதையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வந்த ட்ராம் வாகனம் சிறுமியின் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் சைக்கிளுடன் சில மீற்றர் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தினால் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து பொலிசாருக்கு உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
ட்ராம் வாகனம் மீது மோதி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.