வியாழன், 19 அக்டோபர், 2017

சுவிஸ் மணமகளை திருமணம் செய்யவிருந்த இளைஞன் மரணம்!

இலங்கையின் தென்பகுதியான பேருவளையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது
வாகன விபத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இளைஞனின் கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகிய உடற் பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த இளைஞர் அடுத்த மாதம் சுவிஸ்ட்சர்லாந்து பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைய ஆயத்தமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பேருவளை, மொரகல்ல பகுதியை சேர்ந்த சுரேஷ் அபேகுணவர்தன என்ற இளைஞன் வாகன விபத்துக்குள்ளான நிலையில் அவர் மூளைச் சாவடைந்துள்ளார்.
இதனால் அவரது உடற்பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற மரண விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் தந்தை வாக்குமூலம் வழங்கிய போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
‘உயிரிழந்தவர் எனது மகன். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்மார்கள் உள்ளனர். உயிரிழந்த மகன் மொரகல்லவில பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான விடுதியை நடத்தினார்.
17ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் நான் உறங்கி கொண்டிருந்த போதுஇ மனைவி மற்றும் கடைசி மகன் சத்தமாக மூத்த மகன் விபத்துக்குள்ளாகியதாக கூறினர்.
மகனை பார்க்க சென்ற போது அவர் மூளைச் சாவடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைக்க முடியாதெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது உடற்பாகங்களை தானம் வழங்க விருப்பம் என கூறினோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





சுவிசில் பலியான இளைஞனின் குடும்பம் சுவிஸ் வர அழைப்பு

சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் அகதிகள் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் என்பவர் அண்மையில் சுவிஸ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். மரணமானவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அவரின் குடும்பத்தினருக்கு சுவிஸ் அரசாங்கம் அ
ழைப்பு விடுத்துள்ளது.
முல்லைத்தீவை சேர்ந்த சுப்பிரமணியம் கரனின் வீட்டிற்கு சென்றிருந்த சுவிஸ் தூதரக அதிகாரிகள், குடும்பத்தாரின் நிலையையும் பார்வையிட்டிருந்தனர்.இதனையடுத்து நேற்று முன்தினம் குடும்ப உறுப்பினர்கள் சுவிஸ் தூதரகத்தினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டு , மிக விரைவில் சுவிஸ் பயணத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவரின் மனைவி, இரு மகள்கள், மற்றும் சகோதரன் உள்ளிட்டவர்களை இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சுவிஸ் அரசின் செலவுடன் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சுவிஸ் பொலிஸார், குறித்த இலங்கையரை சுட்டுக்கொன்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.