புதன், 24 ஜனவரி, 2018

சுவிசில் நாட்டில் உலகின் புதுமையான மின் நிலையம் !

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில்
 நிறுவியுள்ளது.
இந்த மின் நிறுவனம், இதுவரை இல்லாத புதுமையான வழியில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. வழக்கமான அனல்மின் நிலையங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உமிழும்.
ஆனால், இந்த மின் நிலையம் அதற்கு எதிர்மறையாக செயல்பட்டு, மின்னாற்றலை உற்பத்தி செய்கிறது.
இந்த மின்நிலையம், நிலத்தடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் உள்ள கருங்கல் பாறைகளில் இருந்து கார்பன் -டை-ஆக்ஸைடை உறிஞ்சி, குறைந்த வெப்பநிலைக்கு அதனை உட்படுத்தி மின்சாரமாக
 மாற்றுகிறது.
இந்த தொழில்நுட்பம் ‘கார்பிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை சுவிஸ் விஞ்ஞானிகள் குழு, 2 ஆண்டுகளின் முயற்சியின் பலனாக
 கண்டுபிடித்தது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘பூமி முழுவதும் இந்த பாறை அடுக்கு பரவலாக காணப்படுகிறது. எனவே, மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல், எந்த இடத்திலும் இந்த தொழில்நுட்பத்தில் 
மின் உற்பத்தி செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளனர்.எனினும், பூமிக்கு அடியில் உள்ள கார்பனை உறிஞ்சுவதன் மூலமாக ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் 
வெளியாகவில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 22 ஜனவரி, 2018

சுவிஸ் நோசத்தை (Neuchâtel) தமிழர் ஒன்றிய விழா சிறப்பாக நடந்தது

சுவிஸ் நோசத்தை   (Neuchâtel)  தமிழர் ஒன்றிய தமிழர் திருநாள் விழா 2018,மாநில உறவுகள் ஒன்று கூடி பொங்கல் கொண்டாட்டம்,இளம் சிறார்களுக்கான
 பண்பாட்டு விழா அமை
ந்திருந்தது தமிழர் திருநாளை நாடுதோறும் மட்டுமல்ல தமிழர்வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் கொண்டாடி நிற்பது தமிழ்  சிறப்புக்களில் ஒன்றாகும் மிக நன்றாகும் வாழ்கவாழ்க  தமிழ்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







திங்கள், 8 ஜனவரி, 2018

எவ்விதமான வரிகள் சுவிஸ்சில் குடியேறியவர்களுக்கு அறவிடப்படுகிறது?

சுவிஸ்சில் குடியேறிய   ஆண் மற்றும் பெண் சுவிஸ் மக்களைப் போன்று ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களுக்கும் வரி செலுத்த வேண்டிய கடமையுண்டு. இதை ஒருவர் வசிக்கும் உள்ளுராட்சிசபைக்கு செலுத்தும்
 வரி உள்ளுராட்சிசபை வரி என்றும்,மற்றும் மாநிலத்திற்கு செலுத்தும் வரி மாநில வரி என்றும், மத்திய அரசிற்குக் கொடுப்பது- இதை நேரடியான மத்திய அரசவரி என்றும் அழைப்பர்.
வரி பெறும் திட்டம் அதிகமான நபர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு வரி அறிவித்தலை நிரப்ப வேண்டியதாக ஒழுங்குபண்ணப்பட்டுள்ளது. இதில் நீங்கள், கடந்த வருடம் எவ்வளவு ஊதியம் 
பெற்றுள்ளீர்கள், எவ்வளவு சொத்துகள் உள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்த வரி அறிவித்தலை உள்ளுர் வரித் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். இது வரியின் அளவைக் கணிப்பதுடன் அதைப் பட்டியலிட்டுக் காட்டும்.
சுவிசில் குவெலென் வரி என ஒன்றுள்ளது. இது தொழில் வழங்குனரால் நேரடியாக வரி செலுத்தும் கடமையுள்ள நபரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும். அவர்கள் இந்த வரியை ஒவ்வொரு முறையும் ஊதியத்திலிருந்து கழித்து அதை வரித்திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் 
நிரந்தர வதிவிட அனுமதி c இல்லாத ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்கள், எவராவது நிரந்தர வதிவிட அனுமதி c உள்ளவரை அல்லது சுவிஸ் பிரஜாவுரிமை உள்ளவரைத் திருமணம் செய்திருந்தால் இது அவர்களுக்குப் பொருந்தாது. ஒவ்வொரு மாநிலங்களையும் பொறுத்து குவெலென் வரி வித்தியாசமான தொகையாக இருக்கும், இது வருடத்திற்கு
 வருடம் மாறுபடும்.
ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களிடமிருந்து இரு தடவைகள் வரி பெறுவதைத் தடுப்பதற்காக – சுவிசிலும் அவர்களின் தாய்நாட்டிலும்- சுவிஸ் 50 க்கு மேலான நாடுகளுடன் இரட்டை வரி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் வரி ஏய்ப்பு விடயங்களின்போது ஒரு
 முக்கிய பங்கை வகிக்கும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Blogger இயக்குவது.