வெள்ளி, 28 டிசம்பர், 2018

பொது இடங்களில் சுவிட்சர்லாந்தில் பார்ட்டிகளுக்கு தடை

சுவிட்சர்லாந்தின் ஒன்பது கேன்டன்களில் மதம் சார்ந்த பண்டிகைகளின்போது நடனமாடுவதற்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Glarus பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த தடையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் 
இறங்கியுள்ளார்கள்.
பொலிசார், இந்த ஆண்டு, பண்டிகைகளின் போது மட்டுமல்லாமல், பண்டிகை நாட்களுக்கு முந்தின மாலைப் பொழுதுகளிலும் இந்த தடை நீடிக்கும் என கலை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ், புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுதல் பண்டிகைகளின்போது நடத்தப்படும் நடனம், இசை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இரவு விடுதிகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் பார்ட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது, அதுவும் அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில்.
 Glarus பகுதி மக்கள், 600 ஆண்டுகளாக ஆண்டுக்கொருமுறை பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் மக்கள் கூடுகைக்கு இந்த ஆண்டு அனுமதி கோரி நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>


செவ்வாய், 25 டிசம்பர், 2018

அகதி அந்தஸ்து சுவிசில பெற்றவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்

ஒருவர் பிறந்த தாய் நாட்டில்  தனக்கு உயிருக்கு ஆபத்து என்பதால் உயிர் தப்புவதற்காக உயிர்காப்பு கோரி சுவிட்சர்லாந்துக்கு
 வந்து அங்கு அரசியல் அகதிகளாக சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக் கோரி சுவிஸ் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால்  உங்களுக்கு அகதி அந்தஸ்து  ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள்.
அகதி அந்தஸ்து கிடைத்ததும் அவர்களுக்கு B அடையாள அட்டை  கொடுக்கப்பட்டு அவர்களது சுவிஸ் நாட்டில் வாழும் அனைத்து தேவைகளையும் சுவிஸ் அரசே ஏற்றுக்கொண்டு அவர்களுக்குத் தேவையான கல்வி இருப்பிடம் மருத்துவக் காப்புறுதி மற்றும் 
குடும்பத்தாரை அவர்களது தாய்நாட்டில் இருந்து வரவழைத்து குடும்ப சகிதமாக வாழவைத்து ஒரு தொழிலைத் தேடும்வரை 
அனைத்தையும் சுவிஸ் 
அரசே கவனிக்கும்.
இப்படி இருப்பவர்கள் தங்களை நிலை நிறுத்தியதும் இவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது சுவிட்சர்லாந்தில் சட்டதிட்டத்திட்க்கு அமைய  அமைய அவர்கள் தங்களது தாய் நாட்டிற்க்கு போகமுடியாதவாறு அவர்களுக்கு தடை செய்யப்பட்ட போக்குவரத்து அனுமதி 
பயனப்பத்திரம் வழங்கப்படும்.
 அதையும் மீறி மாற்று வழிகளிலோ அல்லது இலங்கை அரச அல்லது வேறு வழிகளில் தொடர்பு என நிரூபிக்கப்பட்டால் அவர்களது அகதி அந்தஸ்து என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழப்பார்கள் அத்துடன் அவர்களது அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அவர்கள் அவர்களது தாய் நாட்டிற்க்கு நாடுகடத்தப் படுவார்கள்  என்பது சட்டம்.
ஆனால் இப்போது  இந்த சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது சுவிஸ் அரசு.அதாவது, இனி தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லும் அகதிகள், தங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய 
கட்டாயம்  இருந்தால் அதன் அவசியத்தை விவரித்து தாங்கள் தாங்கள் 
தங்களது தாய் நாட்டிற்க்கு போகவண்டிய அவசியத்தை வெளிப்படுத்தி அவர்கள் போய் வந்தால் .அவர்களது அகதி என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழக்கமாட்டார்கள் என்னும் சட்ட மாற்றம் சுவிட்சர்லாந்தில்
 கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு அற்றுக் கொல்லப்பட்டு பாராளுமன்ற வாக்கெடுப்பில்  இந்த சட்டத்திற்கு ஆதரவாக 199 பேரும் எதிர்த்து 66 பேரும் வாக்களித்துள்ளனர்.எதிர்த்து வாக்களித்தவர்கள் conservative right Swiss People's Party என்னும் 
கட்சியினர் மட்டுமே.
அதிகளவான இலங்கையர்கள் அகதி என்னும் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்று அவர்களது அகதி அந்தஸ்து ஏற்றுக் கொல்லப்பட்டதும் அவர்களுக்கு B அடையாள அட்டை வழங்கப்பட்டு கடந்த ஆண்டுவரை 5 வருடங்களில் அவர்களுக்கு C அடையாள அட்டை வழங்கப்பட்டது அதாவது நிரந்தர வதிவுடமை  இவர்களுக்கு கிடைக்கும்.
இவர்களுக்கு நிரந்தர வதிவுடமை கிடைத்ததும் சுவிஸ் நாட்டின் நிரந்தர வதிவுடமை சட்டத்தினால் இவர்கள் உடனேயே தங்களது  அங்கீகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்தை நிராகரித்து மீண்டும் தங்களது தாய்நாட்டின் பாஸ்போர்டைப் பெற்று தங்களது தாய் நாட்டிற்க்கு
 அடிக்கடி போய் வருவார்கள்.
தற்போதைய இலங்கையின் சுமுகமன அரசியல் சூழ்நிலையால் அதனை மாற்றி சாதாரண சுவிட்சலாந்தின் வீ அனுமதி அட்டையைப் பெற்று பின்னர் இலங்கை கடவுச்சீட்டினையும் பெற்று இலங்கை சென்று வந்தனர்  இநத விடயம் சுவிஸ் குடி வரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்ததனால் சுவிஸ் அரசியல் வாதிகளால் இநத விடயம் பாராளுமன்றம் வரை சென்று இன்று சட்டரீதியானான்கீகாரம் கிடைத்துள்ளது.
இப்படியான  சட்டசிக்கல்களின் தயவால் அகதி அந்தஸ்து இழந்த பலருக்கு  Fவிசா வழங்கப்பட்டுள்ளது இனிமேல் இப்படிப்பட்ட நிலை இல்லாமல் போக பாராளுமன்றில் இநத சட்டம் இனிதே நிறைவேற்றப்பட்டுள்ளது உங்களுக்கு கிடைத்த ராஜ ஜோகம்.
இவ் அறிவிப்பின் சட்ட திட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்குமா  எனும் கேள்விகளிற்கு இன்னமும் வெளிப்படையாக தெளிவு படுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 20 டிசம்பர், 2018

கடந்த சில ஆண்டுகளில் சுவிசில் புற்று நோயால் இறந்த பல ஆண்கள்

சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக டந்த சில ஆண்டுகளில் மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் இறந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 64,964 பேர் மரணமடைந்துள்ளனர். இது அதன் முந்தைய ஆண்டைவிடவும் 4 
விழுக்காடு குறைவாகும்.
ஆனால் இதில் முதன் முறையாக மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் இறந்துள்ளது ஆய்வில்
 தெரியவந்துள்ளது.
இருப்பினும் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் 17,808-ல் இருந்து 17,201 என சரிவடைந்துள்ளதாகவும் ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு பெரும்பாலான இறப்புகள் காய்ச்சல் மற்றும் வெப்பக்காற்று காரணமாக நிகழ்ந்துள்ளது.
மட்டுமின்றி சுவிஸில் இருதயம் தொடர்பான இறப்புகள் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள்
 சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் டிமென்ஷியா காரணமாக 3,975 பெண்களும் 1,789 ஆண்களும் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விடவும் 9 விழுக்காடு 
அதிகமாகும்.
சுவிட்சர்லாந்தில் ஆயிரம் குழந்தைகளில் 3.6 பேர் முதல் ஆண்டுக்குள் இறப்பதாகவும், 12,000 சிறார்களில் ஒருவர் தங்களது 16-வது வயதுக்குள் இறப்பதாகவும் ஆய்வறிக்கை 
சுட்டிக்காட்டியள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




செவ்வாய், 18 டிசம்பர், 2018

சூரிச் நகரில் நெடுஞ்சாலையில் விபத்தில் ஒரு பெண் மரணம்

சூரிச் நகரின் A3 நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் பெண் ஒருவர் மரணமடைந்ததுடன் 45 பேர் 
காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பிய பயணிகளை அடுத்த பேருந்துக்காக நிர்வாகிகள் அந்த கடும் குளிரில் சுமார் 14 மணி நேரம் காக்கவைத்துள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
16.12.2018.ஞாயிறு காலை சுமார் 4.15 மணியளவில் A3 நெடுஞ்சாலையில் Genoa பகுதியில் இருந்து Dusseldorf செல்லும் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது.
இதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். எஞ்சிய 41 பேர் லேசான காயங்களுடன்
 தப்பியுள்ளனர்.
விபத்து காரணமாக Brunau மற்றும் Wiedikon பகுதி சாலை போக்குவரத்தை துண்டித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சூரிச் மண்டல பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் அரு
காமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு 
அனுப்பி வைத்துள்ளனர்.
சுவிஸ் நாட்டவர் ஒருவர், ஜேரமனி நாட்டவர் ஒருவர், இத்தாலியர் 13 பேர், அல்பேனியா நாட்டவர்கள் இருவர் என மொத்த 51 பேர் குறித்த பேருந்தில் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே லேசான காயங்களுடன் தப்பிய பயணிகளை அடுத்த பேருந்துக்காக நிர்வாகிகள் அந்த கடும் குளிரில் சுமார் 14 மணி நேரம் காக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 10 டிசம்பர், 2018

ஈழத்தமிழ் பெண் சுவிட்சர்லாந்தில் ஒரு கிலோ தங்க கிரீடத்தை வென்றர்

புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள IBC- தமிழ் தொலைக்காட்சியின் நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மிதுஜா அமிர்தலிங்கம்
 வெற்றி பெற்றார்.
சுவிட்சலாந்து போரம் பிரைபோர்க் மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐ.பீ.சி. தமிழா பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சர்வதேச நடுவர்கள் முன்நிலையில் தமது திறமைகளை நிரூபித்த ஐந்து போட்டியாளர்கள் மத்தியில் இருந்து மிதுஜா வெற்றியாளராகத் 
தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெற்றிப்பெற்ற மிதுஜாவிற்கு IBC தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் வைதேகி பாஸ்கரன் ஆகியோர் ஒரு கிலோ தங்கத்தினாலான கிரீடத்தை வெற்றியாளருக்கு 
சூடியிருந்தார்கள்.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பற்றிய மற்றைய நான்கு போட்டியாளர்களுக்கும் தங்கம் பரிசுகளாக வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பீ.சி தமிழா
 நிகழ்ச்சியானது 
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியின் ஒலி, ஒளி அமைப்புக்கள் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
புலம்பெயர் தமிர்களிடையே இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவற்றை உலகறியச் செய்யும் பாரிய பணியையும் ஐ.பீ.சி தமிழ் மேற்கொண்டு வருகின்றது.
ஐ.பீ.சி தமிழினால் முன்னெடுக்கப்படும் பல செயற்றிட்டங்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் ஊடாக தமது திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மேடை மட்டுமல்லாமல் தமது திறமைக்கான ஒரு அங்கீகாரத்தையும் போட்டியாளர்கள் பெற்றுக்கொள்கின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 6 டிசம்பர், 2018

சூரிச் அட்லிஸ்வில் பகுதியில் வங்கிக் கொள்ளை

சுவிட்சர்லாந்தில் சூரிச் அட்லிஸ்விலில் பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொண்டு, வங்கிக் கொள்ளையர்கள் இருவர் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை சூரிச் பகுதியிலுள்ள Adliswilஇல் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் நுழைந்த வங்கிக் கொள்ளையர்கள் இருவர் அந்த பெண் வங்கி ஊழியருக்கு கைவிலங்கிட்டு விட்டு கொள்ளைச் 
சம்பவத்தில் ஈடுபட்டனர்.
காலையில் தனியாக வந்த அந்த பெண் ழியர் வங்கியை திறந்தார்.முகத்தை மறைக்கும் வகையிலான குளிர் தொப்பி அணிந்திருந்த இருவர், 
அவ்வழியே வந்தனர்.
அவர்களில் ஒருவர் குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு வரும் தள்ளு வண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தார்.
சட்டென வங்கிக்குள் நுழைந்த அவர்கள், அந்த பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து, அவருக்கு கைவிலங்கு ஒன்றை மாட்டி, ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.
பின்னர் வங்கி லாக்கரைத் திறந்து ஆயிரக்கணக்கான ஃப்ராங்குகளை அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் 
பிடித்தனர்.
அவர்கள் குளிருக்கான தொப்பியும் வெளிர் வண்ண கால் சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவித்த பொலிசார், தள்ளு வண்டியில் குழந்தைக்கு பதில் பொம்மை ஒன்றை வைத்திருக்கலாம் 
என்று தெரிவித்தனர்.
அவர்கள் 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைபட்டவர்கள் என்றும் 180 சென்றிமீற்றர் உயரம் உடையவர்கள் என்றும் பொலிசார் 
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக அந்த பெண் வங்கி ஊழியருக்கு அந்த கொள்ளையர்கள் எந்த காயமும் ஏற்படுத்தவில்லை.கொள்ளையர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பெர்ன் மாநிலத்தில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதனன்று இரவு பாதிக்கப்பட்ட அந்த நபர் தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூவர் கும்பல் ஒன்று அவரது குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது.
 பின்னர் குறித்த நபரை தாக்கிய கும்பல் அவரை மிரட்டி அங்கிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு 
தப்பியுள்ளது.
கயிறால் பிணைக்கப்பட்டிருந்த அந்த நபர் தனது முயற்சியால் விடுவிக்கப்பட்டு, பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை புகா
ராக அளித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்குப் பதிந்து மாயமான மூவர் கும்பலை 
தேடி வருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 1 டிசம்பர், 2018

சுவிட்சர்லாந்தின் வெளியான பில்லியனர்கள் பட்டியல்

சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியலில் 51 பில்லியன் பிராங்குகளுடன் முதலிடத்தில் Family Kamprad உள்ளது.
சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 300 பேர் கொண்ட இந்த பட்டியலில் முதலிடத்தை IKEA குழுமத்தின் Kamprad சகோதரர்கள் தக்கவைத்துள்ளனர்.
கடந்த ஆண்டை விடவும் இந்த 300 பேரின் சொத்துமதிப்பு அதிகரித்திருந்தாலும் எதிர்பார்த்தபடி இல்லை என்றே கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இந்த 300 பில்லியனர்களின் சொத்துமதிப்பு 675 பில்லியன் பிராங்குகள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் 300 பேரும் தனித்தனியாக ஆண்டுக்கு சுமார் 2,251 மில்லியன் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டை விடவும் இந்த முறை சுவிஸ் செல்வந்தர் ஒருவர் சராசரியாக 1.7 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு வருவாயை அதிகரித்திருந்தாலும் அது குறைவாகவே கருதப்படுகிறது.
இந்த 300 பில்லியனர்களும் கூட்டாக தங்கள் சொத்துக்களை சுவிஸ் குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு எடுப்பார்கள் எனில், தனி மனிதர் ஒருவருக்கு சுமார் 79,400 பிராங்குகள் வரை கி8டைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் மொத்த உள்நாட்டுஉற்பத்தியை விடவும் இந்த 300 செல்வந்தர்களின் சொத்துமதிப்பு 3 மடங்கு வேகத்தில் வளர்ச்சியை எட்டுவதாக கூறப்படுகிறது.
சுவிஸின் டாப் 10 பில்லியனர்களின் மொத்த சொத்துமதிப்பு 203 பில்லியன் பிராங்குகள் எனவும், இந்த ஆண்டு மட்டும் இந்த 10 பேரும் 2 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.