செவ்வாய், 12 நவம்பர், 2019

ஓடுதளத்தில் இருந்து விலகி சுவிட்சர்லாந்தில் பேருந்து ஒன்றில் மோதியது


சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதாக
 தகவல் வெளியானது.
மேலும், குறித்த விமானமானது ஓடுதளத்தில் இருந்து விலகி பேருந்து ஒன்றில் மோதி நின்றதாகவும் கூறப்பட்டது.
இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்ததாகவும், இருவர் மரணமடைந்தனர் என்றும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் 
தகவல் வெளியானது.
ஆனால் இச்சம்பவமானது பெர்ன் விமான நிலையத்தில் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விளக்கப்பட்டதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த அவசரகால மீட்பு பயிற்சியில் சுமார் 160 சிறப்பு படையினரும் 40 பொதுமக்களும் 15 பல்துறை நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி பெர்ன் மண்டல பொலிசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இதில் பங்கேற்றுள்ளன. ஐரோப்பிய விமான பாதுகாப்பு செயலாண்மை EASA இந்த பயிற்சியை முன்னெடுத்து
 நடத்தியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 14 அக்டோபர், 2019

சுவிசில் அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்,

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.
அந்த 14 வயது பெண், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகம் செல்ல அனுமதியுள்ள நெடுஞ்சாலையில் 150 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதையடுத்து பொலிசார் பொருத்தியுள்ள CCTV கமெராக்களில் 
சிக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Zofingen பகுதியில் அந்த பெண் கமெராவில் சிக்கினார்.
அந்த காரை தேடிச்சென்று அதன் உரிமையாளரை விசாரித்தபோதுதான் அந்த காரை அவரது பேத்தியான அந்த 14 வயது பெண் 
திருடிச் சென்றது தெரியவந்தது.
குற்றவாளிக்கு 14 வயது என்பதால், மேல் நடவடிக்கைக்காக அவரை மாகாண இளைஞர் விவகாரத்துறையிடம் 
பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 31 மார்ச், 2019

சுவிட்சர்லாந்து வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறது

சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை
 வெளிப்படுத்துகிறது.
வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என பெரும்பாலான சுவிஸ் நாட்டவர்கள் (64%) கருதுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மற்றவர்கள் செய்யாத வேலைகளையும் வெளிநாட்டவர்கள் செய்வார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது (66%).
அதே நேரத்தில், சமூக பாதுகாப்பு அமைப்பை வெளிநாட்டவர்கள் தவறாக பயன்படுத்துவதாக கிட்டத்தட்ட பாதிப்பேர்
 (47%) நினைக்கிறார்கள்
அதேபோல, வெளிநாட்டவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிப்பதாக சிலரும் (28%), சுவிட்சர்லாந்து குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நல்ல கல்வியை தட்டிப்பறிப்பதாக சிலரும் (28%), தெருக்களில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக சிலரும் (28%) கருதுகிறார்கள். இந்த ஆய்வில் 3,127 பேர் பங்கேற்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 24 மார்ச், 2019

சுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடங்கிய விமான நிலையம

சுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.
சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் 
ஒன்று இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்த பயணிகள் உடனடியாக விமான அதிகாரிகளுக்கு தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு அங்கிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றி சுமார் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதன் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ஆனால் அதில் என்ன இருந்தது? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த சோதனையின் காரணமாக 6 விமானங்கள் புறப்படுவதற்கு தாமதாக புறப்பட்டு சென்றுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 18 மார்ச், 2019

சூரிச் நகரில் காணாமல் போன 12 வயது சிறுமி

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மாயமான 12 வயது சிறுமி தொடர்பில் பொதுமக்களின் உதவியை மண்டல பொலிசார்
 நாடியுள்ளனர்.
சூரிச் மண்டலத்தின் Kreis 9 பகுதியில் பெற்றோருடன் 
குடியிருந்துவரும் 12 வயது Mebit என்பவரே பாடசாலையில் இருந்து திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், குறித்த சிறுமியை மீட்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சிறுமி 165 முதல் 167 செ.மீ உயரம் கொண்டவர் எனவும் மெலிந்த உடல்வாகு கொண்டவர் எனவும் பொலிசார் 
குறிப்பிட்டுள்ளனர்.
மாயமான அன்று கருப்பு ஜாக்கெட், வெளிர் நீல ஜீன்ஸ் அல்லது பழுப்பு நிற உடையை அவர் அணிந்திருந்துள்ளார்.
சிறுமி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் மண்டல பொலிசாரை அணுக வேண்டும் என கோரிக்கை
 வைத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 7 மார்ச், 2019

நடைமுறை வருகிறது புதிய சட்டங்கள் சுவிஸ் நாட்டில்

சுவிஸ் நாட்டில் அகதி விண்ணப்பம் கோரும் நபர்கள் தொடர்பாக இம் மாதம் 01ஆம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக பேர்ண் மாவட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் நந்தினி முருகவேல்
 தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
 01.03.2019 இற்கு முன்னர் சுவிஸ் நாட்டில் ஏதிலி (அகதி) விண்ணப்பத்தை மேற்கொண்ட அனைவருக்கும் இதுவரை இருந்தது போலவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வழங்கப்படும்.
01.03.2019 இற்குப் பின்னர் அகதி விண்ணப்பம் கோருபவர்கள், அகதி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு என சுவிஸ் நாட்டில் 17 அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
இவ் 17 அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இடங்களில் ஏறக்குறைய 4000 நபர்கள் தங்கலாம்.
இவ் இடங்களில் தங்கி அகதி விண்ணப்பங்களை மேற்கொண்டவர்களுக்கு 140 நாட்களுக்குள் அகதி விண்ணப்பம் தொடர்பான முடிவுகள் வழங்கப்படும். 140 நாட்களுக்குப் பின் வழங்கப்படும் முடிவுகள் எதிர்மறையானதாக வரும் சந்தர்ப்பத்தில் அதற்கான மேன்முறையீடு செய்யும் காலப்பகுதி 7 நாட்கள் மட்டுமே ஆகும்.
சுவிஸ்நாட்டில் அகதி விண்ணப்பம் கோரிய ஒருவர், ஏற்கனவே அகதி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாட்டில் அகதி விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தால் சுவிஸ் நாட்டு அரசாங்கத்தால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, மேன்முறையீடு செய்வதற்கு 5 நாட்கள் மட்டுமே இதுவரையும் வழங்கப்படும்.
இவ் நடைமுறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம்

வரும் மே மாதம் முதல் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.ஏற்கனவே நடைமுறையில் இருந்த Gleis/Voie 7 பயண அட்டைக்கு பதிலாக, seven25 என்னும் புதிய பயண அட்டை
 பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இப்போதிருக்கும் பயண அட்டையைப் போலவே இந்த seven25 பயண அட்டையும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், சுவிஸ் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இரண்டாம் வகுப்பில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆண்டு கட்டணத்தில்
 பயணிக்க அனுமதிக்கிறது.
முன்பு போலவே இந்த புதிய அட்டை பயன்படுத்துபவர்களும் நகர போக்குவரத்து வாகனங்களில் சிறப்பு இரவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் சில சர்ப்ரைஸ்களும்
 இருக்கின்றன.
முதலாவது, புதிய seven25 பயண அட்டை மூலம் இளைஞர்கள் பயணிப்பதற்கு அதிக ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முன்பு சில பேருந்து சேவைகளுக்கு, தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் புதிய அட்டையைக்
 கொண்டு பயணிகள் ஒரே அட்டை மூலமாகவே பேருந்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.
இத்திட்டத்தில் ஒரே ஒரு குறை, ஆரம்ப கட்டணம் அதிகம் என்பதுதான். Gleis 7 அட்டையின் கட்டணம் ஆண்டொன்றிற்கு 129 சுவிஸ் ஃப்ராங்குகள்தான், புதிய seven25 அட்டையின் கட்டணமோ ஆண்டொன்றிற்கு 390 சுவிஸ் ஃப்ராங்குகள் (அல்லது மாதம் ஒன்றிற்கு 38 சுவிஸ்
 ஃப்ராங்குகள்) ஆகும்.
இந்த கட்டணம் அதிகம்தான் என்றாலும், இனி பயணிகள் புதிய இரவு பயண அட்டையை பெறுவதற்காக பாதி விலை பயண அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் பாதிவிலை அட்டை மற்றும் புதிய seven25 இரண்டிற்கும் சேர்த்து கட்டணம் 490 சுவிஸ் 
ஃப்ராங்குகள் ஆகிறது.
இன்னொரு விடயம், அடுத்த ஆண்டிலிருந்து இந்த புதிய அட்டை வைத்திருப்பவர்கள், ஜோக்கர் தினம் என்று அழைக்கப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தங்களுடன் இன்னொரு 16 முதல் 25 வயதுக்குட்பட்ட நபரையும் இலவசமாக 
அழைத்து வரலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 28 பிப்ரவரி, 2019

பேர்ண் மாநில இலங்கைத் தமிழ் பெண் நகரசபை தேர்தலில் வெற்றி

சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான “எஸ்.பி” கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிட்டு நேரடியாக வெற்றிவாகை சூட்டியுள்ளார். 2014 ஆண்டு 
நடந்த தேர்தலில் 2003 ஓட்டுகள் பெற்றார், நேற்று நடந்த தேர்தலில், 2916 ஓட்டுகள் பெற்று மிக வெற்றிவாகை சூடினார். சுவிஸ் தூண் நகரசபையில் முதன்முதலாக வெற்றியீட்டிய முதல் தமிழ்ப்பெண் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு சுவிஸில் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். யாழ். புங்குடுதீவில் பிறந்து சிறுவயதிலேயே சுவிஸ் வந்து இங்கு படித்து பட்டம் பெற்று,$
 தற்போது சுவிஸின் “எஸ்.பி” எனும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் தூண் மாநில நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 6 பிப்ரவரி, 2019

சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை விரும்பும் சுற்றுலாப்பயணிகள்

சுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.
2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் 
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்
வமற்ற செய்தி கூறுகிறது.
மொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.
சுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 2 பிப்ரவரி, 2019

தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு சுவிசில் வர உள்ள நெருக்கடி

.
சுவிற்சர்லாந்தில் கடந்த காலங்களில் பல மாநிலங் noகளில் வாடகைக்கு மண்டபம் எடுத்து கொண்டாட்டங்கள் செய்வது வழமையாக காணப்பட்டது.
எனினும் இவ்வாறு கொண்டாட்டங்களுக்காக மண்டபங்களை வாடகைக்கு எடுப்பவர்கள் சரியான வகையில் அதனை கையளிக்க தவறுவதால் மண்டப உரிமையார்கள் இலங்கை தமிழர்களின் நிகழ்வுகளுக்காக மண்டபம் கொடுப்பதில்லை 
என முடிவெடுத்துள்ளனர்.
சூரிச், வேர்ன், வாசல், லுட்சர்ன், செங்காலன், துர்கவ், ஜெனீவா, லவ்சார் மற்றும் இன்னும் பல பிற மாநிலங்களும் உள்ள மண்டப உரிமையாளர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
காரணம் என்னவெனில் நிகழ்விற்காக பெற்ப்படும் மண்டபங்கள் சரியான வகையில் மீள கையளிக்கப்படாமையே ஆகும்.
அத்துடன் மண்டபம் பெறுபவர்கள் மது போதையில் மண்டப மேற்பார்வையாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதுடம் இந்த தீர்மானம் எடுக்கப்படுவதற்கான ஒரு காரணம் என தெரியவருகிறது. தற்போது ஒரு சில மண்டபங்களே வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இவையும் எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் திரைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கு கூட பல மண்டபங்கள் தடை விதித்திருப்பமை குறிப்பிடத்தக்கது.
சில வேளை இப்படி எழுதுவது சுவிற்சர்லாந்தில் உள்ள இலங்கையர்களிற்கு பிடிக்காமல் இருக்கலாம் இது எல்லாம் ஏன் செய்தியாக்க வேண்டும் என என்ற கேள்விகளும் வரலாம் அப்படியான சந்தேகத்தை தவிர்ப்பதற்காக விபரங்களுடன் விரைவில்
 ஆதாரம் வெளியிடப்படும்
உலகில் பழக்க வழக்கம் மற்றும் கலாச்சாரங்களில் உயர்வாக பார்க்கும் தமிழ் இனம் இன்று இந்த விடயங்களில் மதிப்பும் மரியாதையும் இழந்து வருவது உணர்வுள்ள தமிழனுக்கு மரியாதைக் குறைவாக உள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள் அடுத்த தலைமுறையையும் சரியான பாதையில் இன்றுள்ள பெரியவர்கள் வழிநடத்த தவறியுள்ளனர் என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 17 ஜனவரி, 2019

ஈழத்தமிழ் பெண் சுவிட்ஸர்லாந்தில் வாகன விபத்தில் மரணம்

சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் பெண் ஒருவர்
 அகாலமரணம் 
தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச்Regensdorf தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப்பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான திருமதி சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16.01.2019 பிற்பகல் பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.
அன்னாரின் நல்லடக்க திகதி பின்பு அறியத்தரப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அவரின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திப்போம்
தகவல்: குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 4 ஜனவரி, 2019

இனி சுவிஸ்சில் டார்ஜிலிங் மலை ரயில் வாரத்தின் எல்லா நாட்களிலும் சேவை

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மலை ரயில் நிலையம் ஒன்று மூன்றாவது முறையாக மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Junfraujoch ரயில்பாதை 1912ஆம் ஆண்டு போடப்பட்டது.
அந்த பாதை போடப்பட்ட முதலாண்டிலேயே 42,000 சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான ரயில் நிலையமான Jungfraujoch ரயில் நிலையத்திற்கு 1,067,000 சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளார்கள்.
பொதுவாக பனிச்சறுக்கு விளையாட்டிற்காகவே சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம் என்பதால், இம்முறை பனி குறைவாக இருந்ததால் பிரச்சினை இருக்கும் என்பதற்காக செயற்கையாக பனி உருவாக்கப்பட்டு அங்கு கொட்டப்பட்டது.
பனி குறைவாக இருந்ததால் கடந்த ஆண்டு பனிச்சறுக்கு விளையாடுவதற்காக மட்டும் மலை ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.9 சதவிகிதம் குறைந்தது.
ஆனாலும் ஐரோப்பாவின் உயரமான ரயில் நிலையத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள் ரயில் போக்குவரத்தை விரும்பியதையடுத்து 2017ஆம் ஆண்டு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை 
2.4 சதவிகிதம் உயர்ந்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>









புதன், 2 ஜனவரி, 2019

ஜனவரி மாதம்.2019. முதல் சுவிஸில் புதிய சட்டம் நடைமுறை

சுவிஸர்லாந்தில் புதிய ஆண்டு முதல் போக்குவரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
சமஷ்டி பேரவை நிறைவேற்றிய வாகன போக்குவரத்து திருத்தச் சட்டங்கள் ஜனவரி 1 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 
அமுலுக்கு வரவுள்ளன.
இதனடிப்படையில், மருத்துவப் பரிசோதனை, அடிப்படையான சாரதி பயிற்சி மற்றும் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்லல் தொடர்பில் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் புதிய சாரதிகள் அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்ட முடியும் என்பதே முக்கியமான மாற்றம். ( Automaten-Fahrer dürfen ab Februar schalten)
சாரதி அனுமதிப்பத்திரத்தில் எந்த வரையறையும் உள்ளடக்கப்பட மாட்டாது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்போர், போக்குவரத்து வரம்புகளை நீக்குவது தொடர்பில் வீதி போக்குவரத்து அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
போக்குவரத்து மருத்துவ சோதனை
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி மருத்துவ சோதனைக்கான வயது வரம்பு அமலுக்கு வரும். 75 வயதிலிருந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதுவரை, இந்த கடமை ஏற்கனவே 70 ஆண்டுகள் இருந்தன.
இதேவேளை, சமஷ்டி புள்ளவிபர அலுவலகத்திற்கு அமைய, சூரிச் பிராந்தியத்தில் 2017 ஆம் ஆண்டு தானியங்கி மற்றும் கைமுறையான எரிசக்தி நிரப்பும் மையங்கள் இருந்தன. புதிய போக்குவரத்து நடைமுறைகள் தானியங்கி மின்சார வாகனங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.