புதன், 16 டிசம்பர், 2015

தமிழர் உள்ளிட்ட வெளிநாட்டவர்க்கு சுவிசில் நோக்கி வரும் பேராபத்து!!!

குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 28.02.2016 அன்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இதற்கான முன்மொழிவினை வெளிநாட்டவர்களை இனவாதத்தின் அடிப்படையில் எதிர்க்கும் வலதுசாரி கோட்பாட்டுக்
 கொள்கையை கடைப்பிடிக்கும் சுவிஸ் மக்கள் கட்சி (SVP) முன்னெடுத்து வருகின்றது.
இவ்முன்மொழிவு மக்கள் அங்கீகரமளித்து வாக்களிப்பின் மூலம் வெற்றி பெற்று சட்டரீதியாக அமுலாக்கப்படும்போது சுவிசில் வாழும் தமிழ்மக்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள
 நேரிடும்.
எதிர்வரும் 28 பெப்ரவரி 2016 அன்று மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் சட்டஅங்கீகாரத்துக்கான மக்கள்வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் கீழ்வரும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம். அவை-
* ஓர் வெளிநாட்டவர் சிறிய குற்றச்செயலில் ஈடுபட்டாலும் இனவாத ரீதியாக குற்றம்சாட்டப்பட்டு நாடுகடத்தப்படலாம்.
* சுவிஸ் நாட்டின் வதிவிடஉரிமைபெற்ற ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் இச்சட்டமூலத்தினூடாக நேரடியாக பாதிக்கப்படுவதோடு அவரது முழுக்குடும்பமும் தண்டனையை பெறும் ஓர் துர்ப்பாக்கியம் ஏற்படும். உதாரணமாக வதிவிட அனுமதியுடன் வாழும் கணவன்
 குற்றம்சாட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டால் சுவிஸ் குடியுரிமையுடன் வாழும் மனைவியும் சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நிற்பந்திக்கப்படுவார்.
* நீதிமன்ற அனுமதியின்றி காவற்துறையே முடிவெடுத்து நாடுகடத்தும் அதிகாரத்தை இச்சட்டம் அமுலாக்கவுள்ளது.
* பெற்றோர்கள் வதிவிட அனுமதியுடனும், பிள்ளைகள் சுவிஸ் குடியுரிமையுடனும் இருப்பின் பெற்றோர்கள் குற்றம்சுமத்தப்பட்டு நாடுகடத்தப்பட்டால் ஏதும்அறியாத குழந்தைகளும் சேர்த்து
 நாடுகடத்தப்படும் மனிதஅவலம் நடைபெறும். காரணம் சுவிஸ் சட்டத்தின் சமூகவாழ்வியல் மற்றும் குடும்ப உறவுமுறைக்கான 21 வது சட்டப்பிரிவின்  41வது  அறிவுறுத்தலின்படி 18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் பெற்றோருடனேயே இருக்கவேண்டும் என்பது நியதி.
இருப்பினும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது சுவிஸ் நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறது என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்சட்டம் ஐரோப்பிய மனிதஉரிமை உடன்படிக்கையை 
கவனத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சர்வதேச குழந்தைகள், சிறுவர்கள் பாதுகாப்புச்சட்டத்தை இப்புதிய வரைபு நிராகரிக்கும் பேராபத்தைக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐ.நா மனிதஉரிமைகள் சாசனத்தையும் இச்சட்ட அங்கீகாரம் நிரகரித்துள்ளது..
இனத்துவேசத்தின் எண்ணக்கருவில் முளைத்த இச்சட்ட அமுலாக்கங்களை எதிர்த்து வெளிநாட்டவர்களின் அனைத்து அமைப்புக்களுடனும் இணைந்து வெளிநாட்டவர்களை ஆதரிக்கும் சோசலிச ஜனநாயகக் கட்சி மாபெரும் வேலைத்திட்டம் ஒன்றை தேசியரீதியாக 
முன்னெடுக்கவுள்ளது.
இதற்கான தார்மீக ஆதரவை சுவிஸ் தமிழ் சமூகக் கட்டமைப்புக்கள் கவனத்தில் எடுத்து செயற்படுதல் அவசியமாகின்றது
வாழ்விட வதிவுரிமை பெற்ற ஒவ்வொருவருடைய வாக்குகளும் இச்சட்ட அமுலாக்கத்தை எதிர்த்து Nein என்று வாக்களிப்பதன் மூலம் இச்சட்டமூலத்தை தோற்கடிக்க
 முடியும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 8 டிசம்பர், 2015

இராணுவ சேவையில் சுவிஸ் தோற்றுவிட்டது கிறிஸ்டோப் ப்ருங்நேர்

சுவிஸ் இராணுவத்தினர் தங்களது பாதுகாப்பு சேவையில் தோற்றுவிட்டதாக சுவிஸ் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோப் ப்ருங்நேர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2014ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு சேவையில் இடம்பெற்ற 1,213பேருக்கும் வன்முறையினுடனாக ஆபத்து நிறைந்து காணப்பட்டமையே இதற்கு காரணம் என ஜெர்மன் மொழி செய்தித்தாள் சுவிஸ் ஏம் சொன்டெக்குக்க தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு வறுமை நிலையை பாதுகாப்பபு தொடர்பில் 965 மதிப்பீடு செயய்ப்பட்டது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. மேலும் இது தொடபிலான நுழைவுக்கு முன் இதற்கு சாத்தியமான வீரர்கள் வேண்டும் 2011ஆம் ஆண்டே அழைத்துக் கொண்டனர்.
வன்முறை அபாயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள போதும் இராணுவத்தில் இளைஞர்கள் என்பது தொடர்பில் சுவிட்சர்லாந்து தான் கட்டாய இராணுவ சேவையை தொடர அனுமதி இல்லை என தெரிவித்தது.
அவர்கள் இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தாலும் சேவையில் ஈடுபட தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் ஒருவர் தனிப்பிட்ட துப்பாக்கி பெறுவதிலும் சிரமம் காணப்பட்டது.
குறிப்பாக அவர்கள் சிறுபான்மையினர் மீது தீவிர அல்லது ஜிஹாத்திச தொடர்பான வன்முறை ஆபத்து இருக்கலாம் என கருதப்படும்போது, வறுமை நிலையை மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸ் இராணுவம் இருந்து விலக்கப்பட்ட போதிலும் இது கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம் என்றார். 
தனடிப்படையில், சிறப்பு இராணுவ சேவை "இராணுவத்தில் தீவிரவாதம்", கடந்த ஆண்டுகளாக 41 வழக்குகள் காணப்பட்டன. 

தில் மிக தீவிர வலதுசாரி அரசியல் தொடர்பான தொடர்புகள் இருந்தன. ப்ருஙநேர், இந்த வழக்குகளில் எதுவும் குற்றவியல் நடவடிக்கைகள் விளைவாக அமையவில்லை எனவும் வன்முறை செயல்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல விடயங்கள் இருந்தனஎன
 தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>>



ஞாயிறு, 6 டிசம்பர், 2015

பொலிஸ்சார் 24 மணிநேர பாதுகாப்பு விமான சேவையில் ???

சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டத்திற்கமைய 24 மணிநேர விமான பொலிஸ் சேவையை 30 மில்லியன் ($29 மில்லியன்) ரூபா செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
இதற்காக முக்கிய விமான தளங்களில் ஒன்றான வோட் பியேமி என்ற விமான தளத்திலேயே இத்திட்டத்தை 
ஆரம்பிக்கவுள்ளது.
இது தொடர்பில், விமான பொலிஸ் சேவை இரண்டு முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
அதாவது, தீவிரமான போக்குவரத்து சட்டங்கள் அல்லது சுவிஸ் வான்வெளி இறையாண்மையை மீறும் வகையில் ஏனைய விமானம் தலையிடுவதற்கு தடைவிதித்தல், வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் கவனமாக கண்காணிக்கவும் இராஜதந்திரம் ஒழிக்கப்படவும் வேண்டும் எனவும் கோரியுள்ளனர். 
இத்திட்டம் 2016ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் எனவும் முதலில் இரண்டு விமானங்கள் செயற்படத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06:00 மணிமுதல் மாலை 08:00 மணிவரை இடம்பெறும். 
இதன்மூலம் இவை ஆண்டுக்கு 50 வாரங்கள் செயற்படும். மேலும் 2017ஆம் ஆண்டளவில் இது நாளாந்த சேவையாக மாற்றப்படும் . இத்திட்டம் 2019ஆம் ஆண்டளவில் வெற்றியடையம் பட்சத்தில் காலை 06.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இடம்பெறவும் திடடமிடப்பட்டுள்ளது. 
இறுதியாக, 2020இல், இத்திட்டமானது காற்று ரோந்து வருவதிலும் சேவை 24 மணித்தியாலங்களாக, வாரம், வருடம் முழுவதும் சேவையில் இருக்கக்ககூடியதாக அமையும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 2 டிசம்பர், 2015

இருபது கார்களை நொறுக்கிய மர்ம நபர்கள் பொலிசார் தீவிர தேடுதல்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் பார்கிங் செய்திருந்த சுமார் 20 கார்களை உடைத்து சேதாரப்படுத்திய மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Reinach என்ற நகரில் தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று நள்ளிரவு வேளையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வெளியே பல கார்கள் பார்கிங் செய்யப்பட்டிருந்துள்ளன.
இந்நிலையில், திட்டம் போட்டு வந்த சில மர்ம நபர்கள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை கண்மூடித்தனமாக உடைத்து சேதாரப்படுத்தியுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள சுமார் 20 கார்களின் மீதும் இந்த தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இன்று காலையில் சேதாரம் அடைந்துள்ள கார்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்கள் உடனடியாக பேசல் நகர பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்து கார்களை ஆய்வு செய்த பொலிசார், Tatnacht Hollenweg, Brunngasse, மற்றும் Lindenweg Rebbergweg உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்று தாக்குதலை மர்ம நபர்கள் நடத்தியுள்ளதை 
கண்டுபிடித்துள்ளனர்.
நள்ளிரவில் நிகழ்ந்துள்ள அட்டூழியம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மர்ம நபர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே இரவில் மர்ம நபர்கள் 20 கார்களை அடித்து நொருக்கியுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 26 நவம்பர், 2015

பர்தா அணிவதற்கு சுவிட்சர்லாந்தில் தடை!!!

தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும்படி பர்தா அல்லது நிகாப் அணிந்து வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த தடையை மீறி பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு 6500 ஸ்ரேலிங் பவுன் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசு
 தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: பரிதாபமாக பலியான 100 பசுமாடுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கால்நடைகள் பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 100க்கும் அதிகமான பசுமாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Kriessern என்ற நகரில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Lehenstrasse என்ற பகுதில் கால்நடைகள் பண்ணை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த பண்ணையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பண்ணையில் பற்றிய தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கு பரவியதால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்துள்ளது.
தகவல் பெற்று வந்த தீயணைப்பு வீரர்கள் பண்ணையில் இருந்து 8 பசுமாடுகள் மற்றும் 19 கன்றுகளை மட்டுமே உயிருடன் மீட்க 
முடிந்துள்ளது.
எஞ்சிய 100க்கும் அதிகமான பசுமாடுகள் தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
தீவிபத்தில் ஒட்டுமொத்த பண்ணையும் எரிந்து சாம்பலாகி போயுள்ளதால் சுமார் 1 மில்லியன் பிராங்குகள் வரை சேதாரம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு அப்பகுதி பொதுமக்களிடம் பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>




வெள்ளி, 20 நவம்பர், 2015

அடிபட்டு சாலையில் உயிருக்கு போராடிய சிறுமிகளை செல்பியில் புகைப்படம் எடுத்த நபர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 3 சிறுமிகளை காப்பாற்றாமல் அவர்கள் அருகில் நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்ட நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Aigle என்ற நகரில் தான் இந்த கொடூர காட்சி அரங்கேறியுள்ளது.
நகரன் மையத்தில் இருந்த சாலை ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை அன்று 10 மற்றும் 11 வயதுடைய சிறுமிகள் 3 பேர் தங்கள் பெற்றோர்களுடன் நடந்து சென்றுள்ளனர்.
சாலையின் ஓரத்தில் இருந்த நடைமேடையில் நடந்து சென்ற சிறுமிகளை நோக்கி வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று திடீரென
 மோதியுள்ளது.
விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த 50 வயதான கார் ஓட்டுனர் உடனடியாக காரை விட்டு இறங்கி வந்துள்ளார்.
அப்போது, விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களுக்கும் ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் 
ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பதில், விபத்தில் அடிப்பட்டு கீழே கிடந்த சிறுமிகளை கான கூட்டம் கூடியுள்ளது.
கூடிய கூட்டத்தில் இருந்த மக்கள் சிறுமிகளை காப்பாற்றுவதற்கு பதிலாக, அவர்களை புகைப்படம் எடுக்க தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர், கீழே குணிந்து அடிப்பட்ட சிறுமியுடன் செல்பி எடுத்துக்கொண்டது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறிது நேரத்தில் தகவல் அறிந்து பொலிசார் வந்தபோது, எவ்வித காரணமின்றி பொலிசாரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
நிலமையை உணர்ந்து அதிக எண்ணிக்கையில் பொலிசாரை வரவழைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி அடிப்பட்ட சிறுமிகளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
3 சிறுமிகளில் இருவர் சிகிச்சை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், Eglantina(11) என்ற சிறுமி கடந்த புதன் கிழமை முழுவதிலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
சாலையில் சிறுமிகள் 3 பேர் அடிப்பட்டுள்ள நிலையில், அவர்களை காப்பாற்றாமல் புகைப்படும் எடுத்துக்கொண்டு சிலரின் நடவடிக்கைகள் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.