ஞாயிறு, 30 மார்ச், 2014

தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! -காணொளி,

சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என அந்த விபரணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோர் தங்கள் விருப்பத்தை புரிந்து கொள்வதில்லை என்றும் தங்கள் பாரம்பரிய கலாசாரத்தை பேணுமாறும் திருமண விடயத்தில் தங்கள் விரும்பங்களை விட பெற்றோரின் விருப்பம் சில வேளையில் முக்கியத்துவம் பெற்று விடுவதாகவும் அவர்கள் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் தெரிவிக்கின்றனர். விபரணப் படம். (காணொளி, இணைப்பு)

 
வீட்டிற்குள் தமிழ் மொழியை தமிழ் கலாசாரத்தை பேண வேண்டிய நிலை, வீட்டை விட்டு வெளியில் வந்தால் வேறு ஒரு மொழி, வேறு ஒரு கலாசாரம், இந்த இரட்டை வாழ்க்கை பற்றி விபரிக்கிறது இந்த விபரணப்படம்.இந்த ஆவணப்படம், தமிழர்களின் பெற்றோர்களுடைய கலாச்சார பராம்பரிய கட்டுப்பாடு மற்றும் கட்டுக்கோப்புகளைக் காணும் தமிழ் பிள்ளைகள், வாலிப வயதினர் சுவிட்சர்லாந்தின் மேற்கத்திய முற்றிலும் சுதந்திரமான கலாச்சாரத்தைக் கண்டு வியந்து அதன்மேல் ஆவல் கொண்டுள்ளனர் என்று 22 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவி லாவண்யா சின்னத்துரை அவர்கள் கூறியுள்ளார், சுவிட்சர்லாந்தில் உள்ள புதிய தலைமுறை இளைஞர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எதிர்க்கின்றனர், ஜாதி, மதம், மொழி தொடர்பில் திருமணத்தை வெறுக்கின்றனர். இதனால் இளைய சமுதாய புதிய தலைமுறையினர் பெற்றோர்களை திருப்திபடுத்த கட்டுப்பாடான வாழ்க்கையையும், தங்களை தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள சுவிட்சர்லாந்தின் சுதந்திரமான மேற்கத்திய ஜரோப்பிய கலாச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்பதை இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது.

வெள்ளி, 28 மார்ச், 2014

புறப்படும் வேளையில் விபத்தை சந்தித்த விமானம்

 சுவிஸ் விமானம் தரையேற்றத்தில் விபத்து நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் விமான நிலையத்திலிருந்து சுவிஸ் தலைநகர் ஜெனிவாவிற்கு புறப்படும் சுவிஸ் சர்வதேச விமான ஏர்லைன்சின் Jet Avro-RJ-100 என்ற விமானம் மொத்தம் 74 பயணிகளுடன் பயணிக்க தயாராய் இருந்துள்ளது.
அப்போது திடீரென இன்ஜின் பழுதடைந்ததால் விமான தரையேற்றத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நான்கு பேர், உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனால் மூன்று மணிநேரம் லண்டன் விமான நிலையத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து மைக்(28) என்ற பயணி கூறுகையில், விமானத்தின் இன்ஜின் பழுது காரணமாக அதை புறப்படும்போது பெரும் சத்தத்துடன் நெருப்பு வந்தது என்றும் இச்சத்ததால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடத்தொடங்கினர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்ஜின் பழுதின்போது விமானத்தை வேகமாக இயக்கியதே இவ்விபத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
மேலும் இவ்விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது


வியாழன், 27 மார்ச், 2014

சுவிசில் இரயிலில் நிரம்பி வழியும் பயணிகள்

  நாளொன்றிற்கு மில்லியன் கணக்கான பயணிகள் இரயிலில் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிசில் மொத்தம் 1,002,000 பேர் ஒரு நாளில் மட்டும் இரயிலில் பயணிப்பது வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

இந்நிலையில் சூரிச் மாகாணத்தில் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் இரயில் விடப்படுகிறது.
மேலும் லுசென் மற்றும் ஜெனிவா மாகாணங்களின் இரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

வரும் 2020க்குள் 400 அடுக்குமாடி குடியிருப்புகள், ஆடம்பர ஹோட்டல் மற்றும் 50 புதிய கடைக்களை திறப்பதற்கு சூரிச் இரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே சூரிச் மாகாணத்தில் தண்டவாளம் விரிவாக்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
 

புதன், 26 மார்ச், 2014

இதோ வருகிறது 'ராக்' ஷோ

சுவிசில் பிரபல மேற்கத்திய இசைக்குழுவினர் தங்களது இசை நிகழ்ச்சியை கோடை விடுமுறையில் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் 'The Rolling Stones' என்ற இசைக்குழுவினர் வரும் கோடை விடுமுறையில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
இதற்காக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவிருந்த தங்களது நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் நாளை முதல் கொடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மிக உயர்ந்த நுழைவுச்சீட்டின் விலை 360.70 பிராங்குகள் (417 டொலர்கள்) என கூறப்படுகிறது.
நான்கு பேரினை கொண்ட இவ்விசைக்குழு கடந்த 2007ம் ஆண்டு சுவிசில் அரங்கேற்றம் நடத்தி 12,000 ரசிகர்களை ஈர்த்தது குறிப்பிடதக்கது.
 

செவ்வாய், 25 மார்ச், 2014

திறனை வெளிப்படுத்திய ஹாக்கர்கள்

சுவிசின் ஜெனிவா மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் ஒன்றினால் ஹாக்கர்களுக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது.

ஆறாவது வருடாந்திர மாநாடான இதில் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கலந்துகொள்பவர்கள், தளம் ஒன்றை கண்டறிந்து அதன் பயனர் பெயர்(username) மற்றும் கடவுச்சொல்லினை கண்டுபிடிக்க வேண்டும்.

மேலும் வங்கி மற்றும் நிதி அலுவலங்களின் மென்பொருளில் சட்டவிரோதமாக ஊடுருவி ஹாக்கிங் செய்து பணத்தை கையாடல் செய்யும் திருடர்களை பிடிப்பதே இவர்களின் முக்கிய பொறுப்பாகும்.
இம்மாநாட்டில் மிக சிறந்த நன்னெறி ஹாக்கிங் நிபுணர்கள் பங்கேற்று கருத்து பறிமாற்றம் செய்தது மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளேயே போட்டிகளை வைத்துக்கொண்டு திறனை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிபுணர்களால் பிரபல சமூக வலைத்தளமான யாஹூ மற்றும் மென்பொருள் ஆரகிலில் சட்டவிரோதமாய் நிகழ்ந்த நெளிவு சுளிவுகள் கண்டறியப்பட்டன.

                                

சனி, 22 மார்ச், 2014

அயல்நாட்டு பாலாடை கட்டி மோகத்தில் சுவிஸ்

சுவிசில் பெருகி வரும் அயல்நாட்டு பாலாடைக்கட்டி விற்பனையால் உள்ளூர் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சுவிசின் வியாபார சரக்கான பாலாடைக்கட்டியின் விற்பனை கடந்தாண்டில் மிகவும் குறைந்துள்ளதாக புள்ளியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் அந்நாட்டு மக்கள், சராசரியாக உள்ளுர் பாலாடைக்கட்டியை மொத்தம் 14.7 கிலோ உட்கொண்டுள்ளனர் என்றும் வெளிநாட்டு பாலாடைக்கட்டிகளை உண்பவரின் எண்ணிக்கை 6.25 கிலோ ஆக அதிகரித்து 1.6 சதவீதத்தை அடைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

மேலும் வெளிநாட்டு பாலாடைக்கட்டிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதே உள்நாட்டு பாலடைக்கட்டிகள் பின் தள்ளப்படுவதற்கான முக்கிய காரணமாகும் என தெரியவந்துள்ளது.



சுவிஸ் புகழ் பாடும் சாரா பெர்க்சன்

இங்கிலாந்து இளவரசரின் மனைவியான சாரா பெர்க்சன் தனது உடல் எடையை குறைத்ததற்காக வெர்பியர் ரிசார்டை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
சாரா பெர்க்சன் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியாவார்.
இவர்களுக்கு 1996ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துவிட்ட போதிலும் அவர்களது இரண்டு மகள்களுடன், குடும்பமாக வருடத்திற்கு ஒரு முறை சுவிட்சர்லாந்திலுள்ள வெர்பியர் (VERBIER) என்ற பெயருடைய மலைப்பிரதேச கோடை வாசஸ்த்தலத்திற்கு வந்து, தங்கள் விடுமுறையை இனிதே கழித்துவிட்டு செல்வார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தை கொண்டிருக்கும் இவர்கள் இந்த ஆண்டும் ரிசார்ட்டில் தங்கியிருக்கையில் பெர்க்சன் சுவிஸ் ஊடகவியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சுவிட்சர்லாந்து எனது இரண்டாவது தாயகம் என்றும் இங்குள்ள மக்கள் தன்னை மிகவும் வரவேற்று உபசரிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் நான் உலகசுகாதார கழகத்தின் தூதுவராக பணியாற்றுவதால், ஒரு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தினமும் நான்கு மணி நேரம் சுவிஸில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் இதனால் எனது உடல் எடை 20 கிலோ குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
 

சாதனை படைக்க துடிக்கும் உள்ளம் (காணொளி)

 சுவிசில் செயற்கை விமானத்தை உருவாக்கி அதை விண்வெளியின் முனையில் ஏவுவதற்கு பிரபல தொழில்நுட்ப வல்லுநர் ரபெல் திட்டமிட்டுள்ளார். சுவிசில் ஹைட்ரஜன் நிரப்பபட்ட செயற்கை விமானத்தை ரபெல் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாதாரண விமானத்தை காட்டிலும் பல மடங்கு தூரம் செல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. சுமார் 10,000 முதல் 15,000 மீற்றர் உயரத்தில் செல்லும் இவ்விமானத்தில் பயணிக்க எண்ணுவோர் 50,000 பிராங்குகள் செலுத்தி

பயணிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு தகுந்த சகாசக்காரர்கள் தேவைப்படுவதாக ரபெல் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் கமாண்டர் மற்றும் ஸ்பானிஷ் அமெரிக்க விண்வெளி வீரர் மைகில் லோப்ச, சுவிசை சேர்ந்த பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் கெரல்டைன் பாஸ்ச நெட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்முயற்சி வரும் 2017ம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. nbsp;

வெள்ளி, 21 மார்ச், 2014

வசந்தகாலத்தை இழக்கும் சுவிஸ்

சுவிசில் வெப்பநிலை மாற்றங்களால் வசந்தகாலம் வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை
சுவிசின் ஜெனிவா மாகாணத்தில் 22.5 டிகிரி வெப்பநிலை நேற்று பதிவாகியிருந்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், பெசல்,சூரிச்,ஆரு மற்றும் ஆல்ப்ஸின் வடக்கு பகுதியில் 20 டிகிரி வெப்பிநிலை பதிவாகியுள்ளது என்றும்

 இதற்கு அடுத்தப்படியாக அதிகப்பட்ச வெப்பநிலை டிசினோ மாகாணத்தில் 20 டிகிரியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட நகரங்கள் கடும் வெப்பத்தின் தாக்கத்தில் இருப்பதால் இந்த மாதத்தில் வசந்தகாலம் வருவதற்கான வாய்புகள் ஏதும் இல்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 

வியாழன், 20 மார்ச், 2014

பரிதாப நிலையில் சுவிஸ் வாக்காளர்கள்

சுவிசில் பெரும்பாலான வாக்காளர்கள் குறைந்தபட்ச மாத ஊதிய திட்டத்தை ஆதரித்துள்ளனர்.
சுவிசில் 3,30,000 தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு 4,000 பிராங்குகளுக்கும் குறைவான ஊதியத்தையே பெற்று வருகின்றனர்.
தற்போது சுவிஸ் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதால், ஊதியத்தையும், விலைவாசியையும் ஒப்பிட்டு பார்க்கையில் போதுமான ஊதியம் இல்லாததாக வாக்காளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் குறைந்தபட்சமாக 4000 பிராங்குகள் (4580 டொலர்கள்) மட்டுமே தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாய் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆதரித்துள்ளனர்.

இத்திட்டம் வரும் மே 18ம் திகதி அரசினால் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இத்திட்டதால் சிறிய நிறுவனங்கள், சில்லரை வணிக நிறுவனங்கள், உணவு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் விவசாய தொழில்களை பராமரிக்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த குறைந்த பட்ச ஊதியத்திட்டத்தை கண்டித்து சுவிஸ் அரசாங்கமும், நாடாளுமன்றமும் எதிர்ப்பு கொடிகளை ஏந்தியுள்ளன.
 

வெள்ளி, 14 மார்ச், 2014

கழிவு நீரில் கையாடல் செய்த அதிகாரி

சுவிட்சர்லாந்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு சங்கத்தில் நடைபெற்ற கையாடல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுவிசின் வாட் மாகாணத்தில் உள்ள மோர்க்ஸ் பகுதியில் நகராட்சி சங்கத்தின் கீழ் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு சங்கம் ஒன்று உள்ளது.

இதன் நிதி பொறுப்பாளராக கடந்த 1996ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார், இந்நிலையில் இவருடைய காலகட்டத்தில் சுமார் 770,000 பிராங்குகள் (880,000 டொலர்கள்) கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த அதிகாரி இறந்துவிட்ட நிலையில் தற்போது இந்த கையாடல் பற்றிய விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது புரியாத புதிராக உள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மோர்க்ஸ் பகுதி மேயர் வின்சன்ட் ஜாக்யூஸ் கூறுகையில், சமீபத்தில் அறியப்பட்ட இவ்விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது தனது நம்பிக்கையை உலுக்கும் வகையில் உள்ளது எனவும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
 

சுவிஸில் குதிரை இறைச்சிக்கு 'செக்'

சுவிசில் குதிரை இரைச்சியை விநியோகம் செய்வதை சூப்பர் மார்கெட் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
சுவிசில் தள்ளுபடி விலையில் குதிரை இரைச்சியை வியாபாரம் செய்யும் ‘Denner’ என்ற சூப்பர்மார்கெட் நிறுவனம் ஒன்று உள்ளது.
இந்நிறுவனம் காயமடைந்த மற்றும் உடல்நிலை சரியில்லாத குதிரைகளை பிற நாடுகளிலிருந்து, அழைத்து வந்து இரைச்சிகளாக்கி விற்பனை செய்வதாக விலங்கு உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் குற்றம் சாட்டப்பட்ட டெனர் நிறுவனம், தற்போது வியாபாரத்தை நிறுத்தியதுடன், இனி விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய சான்றிதழ் முறைகள் அறிமுகமான பின்பு வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி் விற்பனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுவிசில் ஆண்டு ஒன்றிற்கு இறக்குமதி செய்யப்படும் 5000 டன் குதிரை இரைச்சியில் சுமார் 50 சதவீதம் மட்டும் சுவிஸ் நாட்டு மக்களால் உட்கொள்ளப்படுகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
 

பனிச்சறுக்கில் உலக கிண்ணம் வென்ற லாரா (காணோளி இணைப்பு)

சுவிசில் பனிச்சறுக்கு விளையாட்டில் லாரா கட் என்ற 22 வயது பெண் உலக கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சுவிசில் கிராபுடன் என்ற பகுதியை சேர்ந்த லாரா கட் என்ற 22 வயது பெண் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்று, 32.32 நொடிகளில் இறுதி கோட்டை எட்டி பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து ஆஸ்திரியாவின் கார்கில் இரண்டாம் இடத்தையும், பிரான்சி மூன்றாவதாகவும் மற்றும் சுவிசின் பாபின் சட்டர் என்பவர் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார். இதுகுறித்து லாரா கூறுகையில், இப்போட்டியில் நான் முதலிடம் என அறிவித்த போது மிகுந்த

மகிழ்ச்சியாகவும், பெரும் வியப்பாகவும் இருந்தது என தெரிவித்துள்ளார். இதற்கிடையே உலக கிண்ணத்தை கைபற்றவிருந்த ஜேர்மனியை சேர்ந்த மரியா ஹொபுல் போட்டியின் போது எதிர்பாரதவிதமாக கீழே விழுந்து பலத்த காயமடைந்ததால் மருத்துவமனையில்


சுவிஸின் கடிகாரத்தை காப்பி அடித்த அமெரிக்கா


சுவிசின் ஸ்வாச் நிறுவன கடிகாரம் போலவே போலி கடிகாரத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. சுவிசின் பிரபல கடிகார நிறுவனமான ஸ்வாட்ச் நிறுவனம் பிளாஸ்டிக்கில் “zebra” என்ற வரிக்குதிரை மாடல் கடிகாரமும் மற்றும் பல நிற மாடல் கடிகாரங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இதே போன்ற பிளாஸ்டிக் கடிகாரங்களை அமெரிக்காவில் இரண்டாம் இடம்

வகிக்கும் பிரம்மாண்ட நிறுவனமான ‘Target’ தரக்குறைவான பிளாஸ்டிக்கை கொண்டு வாட்சுகளை தயாரித்து விற்பனை செய்கின்றது. இ்தையறிந்த ஸ்வாட்ச் தங்களின் நிறுவனத்தின் மதிப்பீடு குறைந்துவிடும் என உணர்ந்ததால் டார்கேட் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து டார்கேட் நிறுவனத்தின் பேச்சாளரான ஈவான் லாப்சிகா மற்ற நிறுவனத்தின் அறிவுசார்ந்த சொத்துரிமைகளை தாங்கள் மதிப்பதாக கூறி மறைமுகமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.


புதன், 12 மார்ச், 2014

எம்.பி.யின் இருப்பிடத்தை திருடிய ஆசாமிகள்


சுவிட்சர்லாந்தில் எம்.பி ஒருவரின் நாற்காலியை திருடிய குற்றத்திற்காக நான்கு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுவிசின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் எம்.பியாக இருப்பவர் லொஹர் (52). இரண்டு கைகளையும் இழந்த இவர் நாற்காலியின் உதவியோடு தன்னுடைய அடிப்படை செயல்களை செய்துவந்தார்.
அந்த நாற்காலியானது 12,000 பிராங்குகள் விலையாகும், இந்நிலையில் இந்த நாற்காலி காணாமல்

போய்விட்டது, இதுகுறித்து தேடுதல் வேட்டை நடத்திய பொலிசார்,சுவிஸ் நபர்(16) மற்றும் போச்சுகீஸ் நபர்(17), ஜேர்மன் நபர் (20) மற்றும் துருக்கி நபர் (16) ஆகிய நான்கு பேர் சேர்ந்து இந்த நாற்காலியை திருடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களை கைதுசெய்து செய்யப்பட்ட விசாரணையில், இச்சக்கர நாற்காலியை விற்கும் நோக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருடியதாகவும் பின்பு வேறு வழியின்றி வீதியில் விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

ஞாயிறு, 9 மார்ச், 2014

சொக்க வைக்கும் தங்க கார்! (காணொளி, )


ஜெனிவாவில் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள கார் கண்காட்சி நடைபெற்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள கார்ல்சன் என்ற கம்பெனியானது பென்ஸ் ரக காரில் தங்க வேலைப்பாடுகளை செய்துள்ளது. இதில், வீல், டாஸ்போர்டு, நாப்ஸ் மற்றும் பட்டன் போன்றவை தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதில் 25 கார்களை அரேபிய நாட்டைச் சேர்ந்த ஷேக்குகள் வாங்குவதற்கு

 விலைபேசியுள்ளனர். மேலும் 10 கார்கள் விற்பனையாகியுள்ளன. தங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை 359,000 யூரோவாகும் (498,000 டொலர்கள்). இந்த வேலைப்பாடுகளை செய்வதற்கு மட்டும் 12,000 யூரோ செலவாகியுள்ளது.


 
)

வெள்ளி, 7 மார்ச், 2014

குடிதண்ணீரை வீணடிக்கும் சுவிஸ்

சுவிசில் அதிகமாக குடிதண்ணீர் வீணாக்கப்படுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
நவீன உள்கட்டமைப்பில் தலைசிறந்து விளங்குவதாய் மார்தட்டி கொள்ளும் சுவிஸ், குடித்தண்ணீரை அதிகளவில் வீணாக்குகின்றனது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பழுதான குழாய்களினால் 14 சதவீத குடிதண்ணீரும், நொடி ஒன்றிற்கு 4,000 லிட்டர் தண்ணீரும் வீணாக்கப்படுகின்றது.

இதுகுறித்து குடிநீர் வாரியத்தின் அதிகாரி பிலிபைன் கோலட் கூறுகையில், சிறிய குழாய்களுக்கு தண்ணீரை கொடுக்கும் ராட்சத குழாய்கள் பழமையாகி பழுதடைந்து விடுகின்றது என்றும் புதிய குழாய்களை பொருத்துவதற்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

வியாழன், 6 மார்ச், 2014

ஏல நிறுவனத்திற்கு திரும்பும் ”பின்க் ஸ்டார்” வைரம்

சுவிசில் ரோஜா நிற வைரத்தை விற்பனை செய்த ஏல நிறுவனம், அந்த வைரத்தை விற்றவரிடமிருந்து திரும்ப வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
சுவிசில் சோதிபை என்ற பிரபல ஏல நிறுவனம், 60 காரட் மதிப்புடைய ரோஜாப்பூ நிறம் கொண்ட வைரத்தை கடந்த 2013ம் ஆண்டு 83 மில்லியனிற்கு நபர் ஒருவருக்கு விற்பனை செய்தது.
இந்நிலையில், இதனை வாங்கிய நபர் மொத்த பணத்தையும் திருப்பி செலுத்த முடியாத நிலையில்

இருப்பதால், இவரிடமிருந்து மீண்டும் வைரத்தை பெறுவதற்கு இந்த ஏல நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1999ம் ஆண்டில் ஆப்ரிக்காவின் வைரச்சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட 'De Beers' என்று அழைக்கப்படும் இந்த ”பின்க் ஸ்டார்” வைரம், தற்போது அந்த நபரிடம் இருந்து திரும்ப பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

புதன், 5 மார்ச், 2014

மாயமான காம கொடூரன் மாயமாகியுள்ளார்.

 சுவிசில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவளித்த நபர் திடீரென மாயமாகியுள்ளார்.
சுவிசின் பாசல் நகரில், எக்கர் என்ற 46 வயது மதிக்கதக்க நபர், 9 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.
இதற்கிடையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததால், பாசல் பல்கலைக்கழக மனநல சிகிச்சைமையத்தில் இரசாயன சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, லுக்ரின் (Lucrin) என்ற மருந்தை உட்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு இவர் முன்பு எக்கர் சிகிச்சை மையத்திலிருந்து தப்பியோடியதால், பாசல் பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
 

செவ்வாய், 4 மார்ச், 2014

சுவிஸ் ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையில்

ஐரோப்பிய ஒன்றியம் தனது புதிய உடன் படிக்கையில் சுவிட்சர்லாந்தை இணைக்க தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் கடந்த சுவிட்சர்லாந்தில் கடந்த 9ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து குடிபுகுவோருக்கு தடை விதித்துள்ளது.

இதுபோன்ற குடிபுகுவோர் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதற்காக, கடந்த 2011ம் ஆண்டு ஐரோப்பிய புகலிட ஆதரவு அலுவலகம் உருவாக்கப்பட்டது.

தற்போது சுவிசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்திற்கு ஐரோப்பிய கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

இதில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடிபுகுவோர் தொடர்பான ஆபத்துகளை சரிசெய்ய உதவுவதே சுவிசின் பங்களிப்பாகும்.

ரிவர்ஸ்சில் எமனாக மாறிய கார்

சுவிசில் காரை பின்னோக்கி ஓட்டி சென்ற நபர் ஒருவர் எதிர்பாரதவிதமாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுவிசின் கிராவுபண்டன்(Graubünden) மாகாணத்தில் உள்ள ஷீயீட்(Scheid) என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் 41 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது குடியிருப்பின் கார் நிறுத்தத்திலிருந்து காரை பின்னோக்கி(Reverse) எடுத்துள்ளார்.

அப்போது திடீரென 20 மீற்றர் வேகத்தில் புறப்பட்ட கார் பலமுறை தலைகீழாய் சுழன்று அருகிலிருந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் வந்து நின்றது.

இச்சம்பவத்தை நேரடியாக பார்த்த நபர் ஒருவர் இவரை விரைவாக மருத்துவமனையில் அனுமதித்த போதும், விபத்து நேர்ந்த கணமே இவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பொலிசார் கூறுகையில், கார் ஜன்னல் வாயிலாக இந்நபர் வெளியே தள்ளப்பட்டதன் விளைவாக அவர் இறந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

பயிர்களை நாசமாக்கும் காட்டுபன்றிகள்

சுவிசில் காட்டு பன்றிகள் பயிர்களை பெருமளவில் சேதப்படுத்தியுள்ளது.
சுவிசின் ஆர்கூ பகுதியில் Wild boars என்ற காட்டு பன்றிகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசமாக்கியுள்ளது.

இக்காட்டு பன்றிகள் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் பனியினால் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் வரத்தொடங்கியது என சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 7,80,000 பிராங்குகள் (8,77,000 டொலர்கள்) மதிப்புடைய பயிர்களை சேதப்படுத்தியதால், பன்றிகளை வேட்டையாடக்கூடாது என இரு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த சட்டம் மாறி, அவைகளை சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்பேரில் கடந்த 2012ம் ஆண்டு 1,600 பன்றிகளும் 2013ம் ஆண்டில் 1200 பன்றிகளும் வேட்டைகாரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டன.
மேலும் இரவு நேரங்களில் பன்றிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அகச்சிவப்பு கண்காணிப்பு சாதனங்களை (infrared tracking devices) ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
 

ஆபாச படம் பார்த்த ஆசிரியர்: அதிர்ச்சியில் மாணவர்கள்

சுவிசில் ஆசிரியர் ஒருவர் ஆபாச படங்களை வகுப்பறையில் பார்த்த குற்றத்திற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள வர்த்தக மேலாண்மை பள்ளியில் கடந்த 24ம் திகதி ஆசிரியர் ஒருவர், வகுப்பறையில் ஆபாச படங்கள் மற்றும் கை, கால் வெட்டப்பட்டு நிர்வாண நிலையிருந்த பெண்ணின் புகைப்படத்தையும் தனது கணணியில் பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இப்படங்கள் புரொஜக்டரின் மூலம் வகுப்பறையிலிருந்த கரும்பலகையில்(Black board) ஒளிப்பரப்பாகியதை கண்ட மாணவர்கள் திகைத்து போயினர்.

இதுகுறித்து நிர்வாகி ரெனி போர்டினீர் கூறுகையில், இச்செயலை ஆசிரியரே செய்ததாக ஒப்புக்கொண்டது தனக்கு பேரதிர்ச்சியாய் உள்ளது.
மேலும் இக்குற்றத்திற்காக தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஆசிரியர் தன் 40 வருட பள்ளி வாழ்க்கையில் தவறு ஏதும் புரியாததால், நடவடிக்கை எடுப்பது பற்றி மாணவர்களும், துணைத்தலைவரும் கலந்து ஆலோசிக்க உள்ளனர் என கூறியுள்ளார்.
 
Blogger இயக்குவது.