புதன், 5 மார்ச், 2014

மாயமான காம கொடூரன் மாயமாகியுள்ளார்.

 சுவிசில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவளித்த நபர் திடீரென மாயமாகியுள்ளார்.
சுவிசின் பாசல் நகரில், எக்கர் என்ற 46 வயது மதிக்கதக்க நபர், 9 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.
இதற்கிடையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததால், பாசல் பல்கலைக்கழக மனநல சிகிச்சைமையத்தில் இரசாயன சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, லுக்ரின் (Lucrin) என்ற மருந்தை உட்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு இவர் முன்பு எக்கர் சிகிச்சை மையத்திலிருந்து தப்பியோடியதால், பாசல் பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.