சனி, 23 ஜனவரி, 2016

இலங்கைப் பிரதமர் சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியை சந்தித்தர் ?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி ஸ்னைடர் அம்மேனை (Schneider Ammann) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு டவோஸ் நகரில் உள்ள சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியின் சொந்த வீட்டில் இன்று இடம்பெற்றுள்ளது. 
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  
2016ம் ஆண்டுக்கான உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 19ம் திகதி சுவிட்ஸர்லாந்துக்கு பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 5 ஜனவரி, 2016

சுவிக்கு சிகிச்சை பெற வந்த மன்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டது !

கத்தார் நாட்டின் முன் நாள் மன்னரான ஆமீரானா, தனது பரிவாரங்களோடு சுவிஸ் நாட்டுக்குள் 9 விமானங்களில் சென்றுள்ளார். இவர் மொராக்கோ நாட்டிற்கு சுற்றுலா சென்றவேளை அங்கே காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சுவிஸ் நாட்டில் உள்ள சூரிச் விமான நிலையத்திற்கு செல்ல , உடனடியாக அனுமதி கோரப்பட்டது. இரவு 
நேரங்களில்
சூரிச் நகர் மீது விமானங்கள் பறக்க தடை உள்ளது. இன் நிலையில் அவசர சிகிச்சைக்காக ஒரு விமானத்தில் அவர் வருவார் என்று எதிர் பார்த்தால் , ஒன்றன் பின் ஒன்றாக 9 விமானங்கள் சுவிஸ் சூரிச் நகரை
 நெருங்கியுள்ளது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளார்கள். 
அதுபோக அத்தனை விமானங்களையும் இறக்க ஏதுவான , வசதிகள் கூட செய்யப்படாத நிலையில் , இந்த 9 விமானங்களும் தரையிறங்க 
முற்பட்டுள்ளது.
முதலில் 3 விமானத்தையே அதிகாரிகள் தரையிறங்க அனுமதித்துள்ளார்கள். சூரிச் நகரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் முன் நாள் மன்னர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இரவு நேரத்தில் 
விமனாத்தை கொண்டுவந்து பெரும் இரைச்சலை ஏற்படுத்தியது. மற்றும் விமான நிலைய 
அதிகாரிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது என்று காரணங்களைக் காட்டி , 13,000 பிராங்குகளை அபராதமாக விதித்துள்ளார்கள், சுவிஸ் அதிகாரிகள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 2 ஜனவரி, 2016

புதிய ஆண்டில் இருந்து சுவிஸ்சில்புதிய சட்டம் அமுல்???

 2016, ஜனவரி புத்தாண்டான 1-ம் திகதி முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு புதிய சட்டங்களை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2016ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஏற்கனவே புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதன் முதற்கட்டமாக 3 முக்கிய புதிய சட்டங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
ரயில், பேருந்துகளில் பயணச்சீட்டு அவசியம்
சுவிஸ் அரசின் பொது போக்குவரத்துகளான ரயில் மற்றும் பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 1ம் திகதி முதல் ரயில் மற்றும் பேருந்துகளில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை தேசிய தகவல் மையத்தில் பாதுகாக்கப்படும்.
இந்த தகவல்களை போக்குவரத்து நிறுவனங்கள் எளிதில் பெற்றுக்கொள்வதுடன், பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
நுகர்வோர்களுக்கு பயனளிக்கும் புதிய சட்டம்
சுவிட்சர்லாந்து நாட்டில் தொலைபேசி மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கே அனுப்புவைக்கும் நடைமுறை அதிகமாக புழக்கத்தில் இருந்து வருகிறது.
மேலும், திருப்தி இல்லாத பொருட்களை நிறுவனத்திற்கே திருப்பி அளிப்பதற்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இதில் ஒரு அதிரடி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் திகதி முதல் தொலைபேசி மூலமாக 100 பிராங்க் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்து, அதில் திருப்தி இல்லை என்றால், அதனை நிறுவனத்திற்கு திருப்பி அளிக்கும் கால அவகாசத்தை 2 வாரங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், இணையதளம் மூலமாக பொருட்களை வாங்குபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது.
மேலும், சிறிய அளவிலான கடனை பெறுவதற்கு அதிகப்படியான மற்றும் மிதமிஞ்சிய விளம்பரங்கள் செய்து பொதுமக்கள் மீது கடன் சுமை ஏற்றும் நடவடிக்கைக்கும் தற்போது முற்றுப்புள்ளி 
வைக்கப்பட்டுள்ளது.
பணமோசடியை தடுக்கும் நோக்கில், 1,00,000 பிராங்க் தொகைக்கு மேல் பணபரிவர்த்தனையை மேற்கொண்டால், அதற்கு கூடுதலான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தம் வாகனங்களுக்கு வரி அதிகரிப்பு
சுவிஸ் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் வெளியிடும் கார்பன் –டை –ஆக்ஸைடு வாயுவால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது.
எதிர்வரும் 2020ம் ஆண்டிற்குள் இவ்வாறான வாயுக்களை 
வெளியிடுவதை கடுமையாக குறைக்கப்படும் என சுவிஸ் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன் முதல் கட்டமாக, ஒரு டன் அளவிற்கு மிதமிஞ்சிய கார்பன் – டை –ஆக்ஸைடு வாயுவை வெளியிடும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை தற்போது 60 பிராங்கில் இருந்து 86 பிராங்காக அரசு உயர்த்தியுள்ளது.
இதன் மூலம், சுவிஸில் சுற்றுச்சூழல் வெகுவாக பாதுகாக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 23 டிசம்பர், 2015

பயங்கர தீ விபத்து: குடியிருப்பில் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழப்பு !!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உள்பட பலர் பலியாகிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற நகரில் தான் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதே பகுதியில் உள்ள பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இன்று காலை 11.20 மணியளவில் ஒரு அவசர தகவல் வந்துள்ளது.
தகவல் பெற்று அதிர்ச்சி அடைந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதே சமயம் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள குடியிருப்பிற்குள் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியாகி கொண்டிருப்பதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு, தீயை கட்டுபடுத்தியும் உள்ளே நுழைய முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அருகில் இருந்த குடியிருப்புவாசிகளிடம் விசாரணை நடத்தியதில், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் ஒரு தாய், அவரது இரண்டு மகன்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் வசித்ததாக தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலில், வீட்டிற்குள்ளே பல உடல்கள் கிடப்பதாகவும், ஆனால், உள்ளே நுழைய முடியாததால் அவற்றை அடையாளம் காண இயலவில்லை என பொலிசாரிடம்
 தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் அந்த வீட்டில் உள்ள நண்பர்களை பார்க்க வந்ததாக கூறப்படுவதால், அவர்களும் தீவிபத்தில் சிக்கி இருப்பார்களா என்ற அச்சம்
 ஏற்பட்டுள்ளது.
தற்போது தடவியல் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாவும், இந்த தீவிபத்து பற்றி சில மணி நேரங்களுக்கு பிறகு முழு விபரம் தெரியவரலாம் என பொலிசார் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






சனி, 19 டிசம்பர், 2015

வாலிபர்கள்: மாற்றான் மனைவியை கற்பழிக்க முயன்றனர் பொலிசார் நூதனமாக கைது செய்தனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் மாற்றான் மனைவி ஒருவரை கற்பழிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பெயர் வெளியிடப்படாத கணவன் மனைவி என இருவர் வசித்து
 வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் அந்த பெண் தனியாக பெர்ன் நகர ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது பெண் தனியாக செல்வதை அறிந்த இரண்டு வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இருவரும் பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசியவாறு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் Grosse Schanze என்ற பகுதியை அடைந்ததும் அங்கு ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த வாலிபர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
வாலிபர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னுடைய பலம் முழுவதையும் திரட்டி வாலிபர்களுக்கு எதிராக போராடியுள்ளார்.
சிறிது நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த பெண் கத்தி கூச்சல் எழுப்ப அவர்கள் இருவரும் அஞ்சியவாரு அங்கிருந்து தப்பி 
ஓடியுள்ளனர்.
நள்ளிரவில் தன்னை கற்பழிக்க முயன்ற சம்பவம் குறித்து அந்த பெண் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் வாலிபர்களின் உடை மற்றும் அங்க அடையாளங்களை சேகரித்துக்கொண்டு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிசாருக்கு அந்த தகவல்களை 
அளித்துள்ளனர்.
அடையாளங்களை சேகரித்துக்கொண்ட பொலிசார், அப்பகுதி முழுவதையும் சல்லடையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் இருவர் தான் பெண்ணை கற்பழிக்க முயன்றது தெரியவர உடனடியாக இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டு வாலிபர்களுக்கும் மற்ற குற்றங்களிலும் தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அடுத்தடுத்து மீட்கப்பட்ட 2 சடலங்கள் :பொலிசார் அதிர்ச்சியில்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு வாகனம் பழுதுப்பார்க்கும் இடத்தில் 2 வாலிபரின் சடலங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதே பெர்ன் மாகாணத்தில் உள்ள Laupen என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று இரவு வேளையில், Laupen பகுதி மக்களுக்கு அவசர தகவல் ஒன்றை அளித்துள்ளனர்.
தகவலை பெற்று வந்த பொலிசார், அங்குள்ள ஒரு குடியிருப்பில் 2 சடலங்களை உயிரற்ற நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
சடலங்களை மீட்ட பொலிசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Langenthal நகரில் கண்டுபிடிக்கப்பட்ட மரணம் கொலையா தற்கொலையா என விசாரணை நிறைவு பெறாத நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் 
அடைந்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கும் புதன் கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை உடனடியாக தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
பெர்ன் மாகாணத்தில் 2 நாட்களுக்குள் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 16 டிசம்பர், 2015

காதலன் காதலியை ஈர்க்க செய்த முயற்சிக்கு 150 பிராங்குகள் அபராதம்!!!

சுவிசில் காதலன் ஓருவர் தனது காதலியை ஈர்க்கும் பொருட்டு நடத்திய நிகழ்வால் பொதுமக்கள் பாதித்துள்ளதாக கூறி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
Winterthur பகுதியில் உள்ள 26 வயதான அந்த காதலன் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு அவரிடம் சம்மதம் பெற முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கிலோக்கணக்கில் ரோஜா பூக்கள், வாசனை மெழுகுவர்த்திகள், Champagne பானம், கோப்பைகள் என அவரது காதலியை மகிழ்விக்கும் பொருட்டு அனைத்தையும் எடுத்து 
சென்றுள்ளார்.
காதலியின் வீட்டில் சென்ற இந்த நபர் திருமண சம்மதம் கேட்க அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தம்முடன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களையும் அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.
இந்த குப்பைகள் அப்பகுதி மக்களை பாதிப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கு குறித்து விசாரித்த winterthur அமர்வு நீதிமன்றம் சம்பந்தபட்ட நபருக்கு 150 பிராங்குகள் அபராதம் 
விதித்துள்ளது.
சம்பவத்தின்போது அப்பகுதியில் கடந்து சென்ற நபர் ஒருவர் பூக்கள் மற்றும் பொருட்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதாகவும் அதை அப்படியே விட்டுச்செல்லுமாறு தம்மை கேட்டதாகவும் விளக்கமளித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



Blogger இயக்குவது.