ஞாயிறு, 17 நவம்பர், 2013

தேர்வில் சுறுசுறுப்பு வேண்டும்! மாத்திரைகளை பயன்படுத்தும் மாணவர்கள்


 சுவிட்சர்லாந்தில் ஏழு மாணவர்களில் ஒருவர் படிப்பதற்காக சுறுசுப்பை கொடுக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இந்த மாணவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் திறனை அதிகரிக்க செய்யும் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
சூரிச், பெசல் மற்றும் ஆஎச் பல்கலைக்கழங்களில் பயிலும் 6 ஆயிரத்து 725 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களில் 13.8 வீதமானவர்கள் தமது கல்வித் திறனை அதிகரிக்க செய்யும் மாத்திரைகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இவர்கள் ரிட்டாலின், தூக்க மாத்திரைகள், அம்பெட்டாமின்ஸ் ஆகிய மாத்திரைகளை பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் பரீட்சைகளின் போது இவற்றை பயன்படுத்துவதாக சூரிச் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சைகோஸ்டிமுலன்ட்ஸ் மருந்துகளை பயன்படுத்தும் மாணவர்களை ஆய்வு செய்த சூரிச் ஆய்வு நிலையம், 95 வீதமான மாணவர்கள் சுறுசுப்பு

மாத்திரைகள் அல்லது நியூசோஎன்சோன்ஸ்மென்ட் போன்ற மாத்திரைகள் பற்றி அறிந்திருந்தாலும் அவற்றை மிக குறைந்தளவிலேயே பயன்படுத்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.
 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.