சனி, 11 ஜனவரி, 2014

பிரம்மாண்ட ஹொட்டல் கேள்விக்குறியில்


சுவிஸில் கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட ஹொட்டல் கட்டுவதற்கான பணிகள் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு சுவிஸின் லுசேன் நகரத்தில் 27 மாடிகள் கொண்ட மிகப்பெரிய ஹொட்டலை உயரமான கோபுரத்துடன் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

இதில் 200 அறைகள், மாடியின் மேல் ரெஸ்டாரண்டுகள், 80 வீடுகள் மற்றும் வாடகை குடியிருப்புகள் போன்ற பல பிரத்யேகங்களுடன் கட்டப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு ஆதரவளித்துள்ள மேயர் லுசேனின் கூறுகையில், இந்த அடுக்குபாடி கோபுரத்தின் உச்சியில் கட்டப்படும் ரெஸ்டாரண்டுகளிலிருந்து பார்த்தால் நகரின் எல்லைகள் முழுவதையும் விமானத்திலிருந்து காண்பது போல் தோற்றத்தின் காட்சிகளை கண்டுகளிக்கலாம்.

மேலும் ஜெனிவா சூரிசையும், ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தையும் ரசிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
லுசேனில் முன்பே மூன்றாவது மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த பிரம்மாண்ட ஹொட்டலை கட்டுவதற்க்கு அனுமதி வழங்கப்படுவது மிகுந்த கேள்விகுறியாய் உள்ளது.
ஆதலால் வரும் ஏப்ரல் 13ம் திகதி இதற்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்பதை அறிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

இதற்கு மொத்தம் 10,700 பேர் கையெழுத்திட்ட எதிர்ப்புகளை சேகரித்து வைத்துள்ளனர்.
பொது வாக்கெடுப்பின் போது குறைந்தபட்சம் 8,443 வாக்குகள் இருந்தாலே அந்த தீர்மானத்தை நிறைவேற்ற இயலும்.
எனவே கூடிய விரைவில் இவ்விடயத்திற்கு தீர்வு கிடைத்துவிடும் என நம்பப்படுகின்றது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.