திங்கள், 9 மே, 2016

ஒரே வீட்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் 4 பேர் கொடூரக் கொலை

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரே வீட்டில் 4 பேர் கொடூரக் கொலை
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வீடு ஒன்றில் 4 பேர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீட்டை ஏலம் விட உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 48 வயதான தாய், அவருடைய 13 மற்றும் 19 வயதான இரண்டு மகன்கள் மற்றும் மூத்த மகனின் காதலியான 21 வயதான இளம்பெண் ஆகிய 4 பேரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் தந்தை வெளியே சென்றுருந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் 4 பேரின் உடல்களில் கேபில் கம்பிகளை சுற்றி கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளனர்.
பின்னர், இவர்கள் அனைவரும் விபத்தால் இறந்தது போல் வீட்டிற்கு தீயை வைத்துவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர்.
கொலையை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி பொலிசாருக்கு இதுவரை எந்த தகவலும் தெரியவரவில்லை.
இந்நிலையில், மரணத்திலிருந்து தப்பிய வீட்டு உரிமையாளர் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, ’எனது இரண்டு மகன்களை இழந்துவிட்டு இதே வீட்டில் என்னால் வசிக்க முடியவில்லை. மனைவி, மகன்களின் நினைவுகள் எனக்கு அன்றாடம் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, மோசமான நினைவுகளை சுமந்துள்ள இந்த வீட்டில் இனிமேல் வசிக்க விரும்பவில்லை என்றும், இதனை உடனடியாக ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் தான் அவர் வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்ததாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
‘என்னிடம் போதுமான பணம் இருக்கிறது. பணத்திற்காக வீட்டை நான் விற்பனை செய்யவில்லை’ என அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.