வியாழன், 26 செப்டம்பர், 2013

தவளை கடத்திய மனிதருக்கு அபராதம்


அரிய வகை தவளைகளை கடத்திய பிரான்ஸ் நபர் ஒருவர் சுவிஸ் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்சி ஒட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் 35 வகையான தவளைகளை ஏற்றிக்கொண்டு செப்டம்பர் 14ம் திகதி ஜேர்மன் நாட்டை கடந்து சுவிஸ் நாட்டினை கடக்க முயலும் போது சுங்க அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளார்.

சுங்க அதிகாரிகள் இவரிடம் சோதனை நடத்தியதில், இவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஒட்டியதுடன் கலர் கலரான  ஒபோகா, எக்ஸிடோபேட்ஸ் மற்றும் ராணிடொமெயா போன்ற அரியவகை தவளை இனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவருக்கு 2,000 பிராங்க் அபராதம் விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் விலங்குகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்பவர்கள் முறையான சான்றிதழ்களை அந்தந்த அமைப்புகளிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.