ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஆடுகளம் இடைநிறுத்தப்பட்டுள்ளது!

 
சுவிசில் நடைபெறவிருந்த ஆடுகளம் மாபெரும் நடனப்போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது!

நடனத்திற்கு உலகமே அரங்கம் ஆகும். இதனை எடுத்துக் காட்டும் வகையில் 'உலகலாவிய தமிழ் இளையோர் அவை' 'ஆடுகளம்' என்னும் அனைத்துலக நடனப் போட்டியை மூன்றாவது முறையாக இவ்வாண்டு சுவிஸில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாளை நடைபெறவிருந்த இவ் ஆடுகளம் நடனப் போட்டி நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதனை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்வானது மீண்டும் எப்போது நடைபெறும் என்னும் விபரத்தினை லங்காசிறியினூடாக அறிவிக்கப்படும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.