ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

வாட்ச் விலையுயர்ந்ததல்ல: வாதாடும் அதிகாரி ?

இந்தோனேசிய இராணுவ தலைமை அதிகாரி சுவிஸின் விலைமதிப்புள்ள கடிகாரம் அணிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த இராணுவ தலைமை அதிகாரி மோல்டோகோ என்பவர், சுவிஸில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த கடிகாரத்தை கையில் அணிந்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது.
ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார், இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த கடிகாரத்தை எடுத்து உடைத்துகாட்டி, மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை யாராவது இப்படி உடைப்பார்களா? இது சீனாவில் 430 டொலர்களுக்கு வாங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
இருப்பினும், அந்நாட்டு மக்கள் வறுமையில் வாடும்போது, உயர் அதிகாரிகள் விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.