வியாழன், 1 மே, 2014

தபால்களை பிரிப்பவர்கள் நடத்திய திருட்டு

 சுவிட்சர்லாந்தில் தபால்களை பிரிப்பவர்கள் 1,14,000 டாலர்கள் மதிப்புள்ள கருவிகளை திருடியுள்ளார்.
லுசேன் வாயூத் மண்டலத்தில் உள்ள சுவிஸ் தபால் அலுவலகத்தின் தேசிய அஞ்சலக ஆபரேட்டர்களாக பணிபுரியம் இரண்டு நபர்கள் 1.00,000 பிராங்குகள் (1,14,000) டொலர்கள் மதிப்புள்ள பொருட்களும், கருவிகளும் அடங்கிய பார்சல் பெட்டிகளை அபகரித்து திருடி சென்றுள்ளனர்.
இந்த இரண்டு திருடர்கரும் 40 வயது மிக்க எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் என்று NORD வாயூத்மண்டல நீதிமன்றம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் திருடிய பொருட்களை, அவர்களது குடியிருப்பில் பதுக்கி வைத்ததன் மூலம் பொலிசார் அவர்களை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.
இந்த திருடர்கள் இருவரும் நீதிமன்றத்தில் தங்களது திருட்டினை நியாயப்படுத்தும் வகையில், தாங்கள் பகுதி நேர ஊழியர்கள் என்றும், தங்களுக்கு சம்பளம் போதிய அளவு இல்லாததால் இவ்வாறு திருடியதாக கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் இவர்களுக்கு 18,000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.