திங்கள், 13 பிப்ரவரி, 2017

இனி வெளிநாட்டவர்களுக்குசுவிஸ்சில் வேலை வாய்ப்பு இல்லை ?

சுவிற்சர்லாந்தில் வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்ககூடாது என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.
சுவிஸ் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Toni Brunner அளித்துள்ள பேட்டியில், வெளிநாட்டவர்கள் சுவிஸ்க்கு வந்து குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அறிக்கையை மூன்று வருடங்களுக்கு முன்பே மக்கள் முன்பு தாக்கல் செய்தோம்.
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அதிலும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள் அதிகளவில் சுவிஸ்க்கு வருவது எரிச்சலாக உள்ளதாக கூறியுள்ளார்.
சுவிஸில் பணிகள் செய்ய போதுமான ஆட்கள் ஏற்கனவே உள்ளதாக கூறியுள்ள Toni மற்றவர்கள் இங்கு வருவதால் இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிறது.
சுவிஸில் வேலைக்கு ஆள் எடுக்கிறவர்கள் சுவிஸ் மக்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என
 தெரிவித்துள்ளார்.
தற்போது சுவிற்சர்லாந்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வசித்து வருகிறார்கள் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

எண்ணுற்றி என்பது நிலநடுக்கங்கள்:ஏற்பட்டதாக வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2016-ம் ஆண்டில் மட்டும் 880 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் நில அதிர்வுகளை பதிவு செய்யும் அலுவலகம் கடந்தாண்டில் நாடு முழுவதும் நிகழ்ந்த நிலநடுக்கங்களை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், நாடு முழுவதும் 880 நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இவற்றில் 31 நிலநடுக்கங்கள் ரிக்டாரில் 2.5 அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 24-ம் திகதி வாலைஸ் மாகாணத்தில் உள்ள Leukerbad பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டாரில் 4.1 என்ற அளவில் பதிவானது தான் நாட்டிலேயே மிக மோசமான நிலநடுக்கமாகும்.
எப்போதும் போல Valais மற்றும் Graubunden ஆகிய இரண்டு மாகாணங்கள் இந்த நிலநடுக்கங்களுக்காக அதிகம் பாதிப்பை
 சந்தித்துள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் ரிக்டாரில் 6 மற்றும் அதற்கு மேலான அளவில் நிலநடுக்கங்கள் 50 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.
கடந்த 1946-ம் ஆண்டு வாலைஸ் மாகாணத்தில் உள்ள Sierre என்ற பகுதியில் 6.2 என்ற ரிக்டார் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும், சுவிஸ் வரலாற்றில் கடந்த 1356-ம் ஆண்டு பேசல் நகரில் 6.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது தான் மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



தரையில் மோதவிருந்த விமானம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

 சுவிட்சர்லாந்து விமானம்  300 பயணிகளை ஏற்றிச் செல்லும்  விமானம் ஒன்று  இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக எந்த ஒரு பாதிப்பும் இன்றி கனடாவில் இறக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சுவிட்சர்லாந்தின் சர்வதேச விமானமான Boeing 777 என்ற விமானம் கடந்த புதன் கிழமை. Zurich பகுதியில் இருந்து கலிபோர்னியா பகுதிக்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது
வானில் சுமார் 36,000 அடிக்கு மேல் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக கனடாவின் Iqaluit விமான நிலையத்தில் எந்த ஒரு பாதிப்பும் இன்றி பத்திரமாக தரையிரக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதில் வேகமாக வரும் விமானம் அங்கு விமான நிலையத்தில் இருக்கும் பனிகளுக்கிடையே(சுமார் -6 டிகிரி) சீறி பாய்ந்து அதன் பின்னர் நிறுத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சுமார் 14 மணி நேரம் தாமதாமாக சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சுமார் 14 நேரம் தாமதமாக கொண்டு வந்து சேர்த்தால், குறித்த விமான நிறுவனத்தின் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி, அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



$
Blogger இயக்குவது.