வெள்ளி, 28 டிசம்பர், 2018

பொது இடங்களில் சுவிட்சர்லாந்தில் பார்ட்டிகளுக்கு தடை

சுவிட்சர்லாந்தின் ஒன்பது கேன்டன்களில் மதம் சார்ந்த பண்டிகைகளின்போது நடனமாடுவதற்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Glarus பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த தடையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் 
இறங்கியுள்ளார்கள்.
பொலிசார், இந்த ஆண்டு, பண்டிகைகளின் போது மட்டுமல்லாமல், பண்டிகை நாட்களுக்கு முந்தின மாலைப் பொழுதுகளிலும் இந்த தடை நீடிக்கும் என கலை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ், புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுதல் பண்டிகைகளின்போது நடத்தப்படும் நடனம், இசை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இரவு விடுதிகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் பார்ட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது, அதுவும் அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில்.
 Glarus பகுதி மக்கள், 600 ஆண்டுகளாக ஆண்டுக்கொருமுறை பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் மக்கள் கூடுகைக்கு இந்த ஆண்டு அனுமதி கோரி நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>


செவ்வாய், 25 டிசம்பர், 2018

அகதி அந்தஸ்து சுவிசில பெற்றவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்

ஒருவர் பிறந்த தாய் நாட்டில்  தனக்கு உயிருக்கு ஆபத்து என்பதால் உயிர் தப்புவதற்காக உயிர்காப்பு கோரி சுவிட்சர்லாந்துக்கு
 வந்து அங்கு அரசியல் அகதிகளாக சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக் கோரி சுவிஸ் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால்  உங்களுக்கு அகதி அந்தஸ்து  ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள்.
அகதி அந்தஸ்து கிடைத்ததும் அவர்களுக்கு B அடையாள அட்டை  கொடுக்கப்பட்டு அவர்களது சுவிஸ் நாட்டில் வாழும் அனைத்து தேவைகளையும் சுவிஸ் அரசே ஏற்றுக்கொண்டு அவர்களுக்குத் தேவையான கல்வி இருப்பிடம் மருத்துவக் காப்புறுதி மற்றும் 
குடும்பத்தாரை அவர்களது தாய்நாட்டில் இருந்து வரவழைத்து குடும்ப சகிதமாக வாழவைத்து ஒரு தொழிலைத் தேடும்வரை 
அனைத்தையும் சுவிஸ் 
அரசே கவனிக்கும்.
இப்படி இருப்பவர்கள் தங்களை நிலை நிறுத்தியதும் இவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது சுவிட்சர்லாந்தில் சட்டதிட்டத்திட்க்கு அமைய  அமைய அவர்கள் தங்களது தாய் நாட்டிற்க்கு போகமுடியாதவாறு அவர்களுக்கு தடை செய்யப்பட்ட போக்குவரத்து அனுமதி 
பயனப்பத்திரம் வழங்கப்படும்.
 அதையும் மீறி மாற்று வழிகளிலோ அல்லது இலங்கை அரச அல்லது வேறு வழிகளில் தொடர்பு என நிரூபிக்கப்பட்டால் அவர்களது அகதி அந்தஸ்து என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழப்பார்கள் அத்துடன் அவர்களது அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அவர்கள் அவர்களது தாய் நாட்டிற்க்கு நாடுகடத்தப் படுவார்கள்  என்பது சட்டம்.
ஆனால் இப்போது  இந்த சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது சுவிஸ் அரசு.அதாவது, இனி தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லும் அகதிகள், தங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய 
கட்டாயம்  இருந்தால் அதன் அவசியத்தை விவரித்து தாங்கள் தாங்கள் 
தங்களது தாய் நாட்டிற்க்கு போகவண்டிய அவசியத்தை வெளிப்படுத்தி அவர்கள் போய் வந்தால் .அவர்களது அகதி என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழக்கமாட்டார்கள் என்னும் சட்ட மாற்றம் சுவிட்சர்லாந்தில்
 கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு அற்றுக் கொல்லப்பட்டு பாராளுமன்ற வாக்கெடுப்பில்  இந்த சட்டத்திற்கு ஆதரவாக 199 பேரும் எதிர்த்து 66 பேரும் வாக்களித்துள்ளனர்.எதிர்த்து வாக்களித்தவர்கள் conservative right Swiss People's Party என்னும் 
கட்சியினர் மட்டுமே.
அதிகளவான இலங்கையர்கள் அகதி என்னும் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்று அவர்களது அகதி அந்தஸ்து ஏற்றுக் கொல்லப்பட்டதும் அவர்களுக்கு B அடையாள அட்டை வழங்கப்பட்டு கடந்த ஆண்டுவரை 5 வருடங்களில் அவர்களுக்கு C அடையாள அட்டை வழங்கப்பட்டது அதாவது நிரந்தர வதிவுடமை  இவர்களுக்கு கிடைக்கும்.
இவர்களுக்கு நிரந்தர வதிவுடமை கிடைத்ததும் சுவிஸ் நாட்டின் நிரந்தர வதிவுடமை சட்டத்தினால் இவர்கள் உடனேயே தங்களது  அங்கீகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்தை நிராகரித்து மீண்டும் தங்களது தாய்நாட்டின் பாஸ்போர்டைப் பெற்று தங்களது தாய் நாட்டிற்க்கு
 அடிக்கடி போய் வருவார்கள்.
தற்போதைய இலங்கையின் சுமுகமன அரசியல் சூழ்நிலையால் அதனை மாற்றி சாதாரண சுவிட்சலாந்தின் வீ அனுமதி அட்டையைப் பெற்று பின்னர் இலங்கை கடவுச்சீட்டினையும் பெற்று இலங்கை சென்று வந்தனர்  இநத விடயம் சுவிஸ் குடி வரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்ததனால் சுவிஸ் அரசியல் வாதிகளால் இநத விடயம் பாராளுமன்றம் வரை சென்று இன்று சட்டரீதியானான்கீகாரம் கிடைத்துள்ளது.
இப்படியான  சட்டசிக்கல்களின் தயவால் அகதி அந்தஸ்து இழந்த பலருக்கு  Fவிசா வழங்கப்பட்டுள்ளது இனிமேல் இப்படிப்பட்ட நிலை இல்லாமல் போக பாராளுமன்றில் இநத சட்டம் இனிதே நிறைவேற்றப்பட்டுள்ளது உங்களுக்கு கிடைத்த ராஜ ஜோகம்.
இவ் அறிவிப்பின் சட்ட திட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்குமா  எனும் கேள்விகளிற்கு இன்னமும் வெளிப்படையாக தெளிவு படுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 20 டிசம்பர், 2018

கடந்த சில ஆண்டுகளில் சுவிசில் புற்று நோயால் இறந்த பல ஆண்கள்

சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக டந்த சில ஆண்டுகளில் மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் இறந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 64,964 பேர் மரணமடைந்துள்ளனர். இது அதன் முந்தைய ஆண்டைவிடவும் 4 
விழுக்காடு குறைவாகும்.
ஆனால் இதில் முதன் முறையாக மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் இறந்துள்ளது ஆய்வில்
 தெரியவந்துள்ளது.
இருப்பினும் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் 17,808-ல் இருந்து 17,201 என சரிவடைந்துள்ளதாகவும் ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு பெரும்பாலான இறப்புகள் காய்ச்சல் மற்றும் வெப்பக்காற்று காரணமாக நிகழ்ந்துள்ளது.
மட்டுமின்றி சுவிஸில் இருதயம் தொடர்பான இறப்புகள் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள்
 சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் டிமென்ஷியா காரணமாக 3,975 பெண்களும் 1,789 ஆண்களும் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விடவும் 9 விழுக்காடு 
அதிகமாகும்.
சுவிட்சர்லாந்தில் ஆயிரம் குழந்தைகளில் 3.6 பேர் முதல் ஆண்டுக்குள் இறப்பதாகவும், 12,000 சிறார்களில் ஒருவர் தங்களது 16-வது வயதுக்குள் இறப்பதாகவும் ஆய்வறிக்கை 
சுட்டிக்காட்டியள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




செவ்வாய், 18 டிசம்பர், 2018

சூரிச் நகரில் நெடுஞ்சாலையில் விபத்தில் ஒரு பெண் மரணம்

சூரிச் நகரின் A3 நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் பெண் ஒருவர் மரணமடைந்ததுடன் 45 பேர் 
காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பிய பயணிகளை அடுத்த பேருந்துக்காக நிர்வாகிகள் அந்த கடும் குளிரில் சுமார் 14 மணி நேரம் காக்கவைத்துள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
16.12.2018.ஞாயிறு காலை சுமார் 4.15 மணியளவில் A3 நெடுஞ்சாலையில் Genoa பகுதியில் இருந்து Dusseldorf செல்லும் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது.
இதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். எஞ்சிய 41 பேர் லேசான காயங்களுடன்
 தப்பியுள்ளனர்.
விபத்து காரணமாக Brunau மற்றும் Wiedikon பகுதி சாலை போக்குவரத்தை துண்டித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சூரிச் மண்டல பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் அரு
காமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு 
அனுப்பி வைத்துள்ளனர்.
சுவிஸ் நாட்டவர் ஒருவர், ஜேரமனி நாட்டவர் ஒருவர், இத்தாலியர் 13 பேர், அல்பேனியா நாட்டவர்கள் இருவர் என மொத்த 51 பேர் குறித்த பேருந்தில் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே லேசான காயங்களுடன் தப்பிய பயணிகளை அடுத்த பேருந்துக்காக நிர்வாகிகள் அந்த கடும் குளிரில் சுமார் 14 மணி நேரம் காக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 10 டிசம்பர், 2018

ஈழத்தமிழ் பெண் சுவிட்சர்லாந்தில் ஒரு கிலோ தங்க கிரீடத்தை வென்றர்

புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள IBC- தமிழ் தொலைக்காட்சியின் நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மிதுஜா அமிர்தலிங்கம்
 வெற்றி பெற்றார்.
சுவிட்சலாந்து போரம் பிரைபோர்க் மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐ.பீ.சி. தமிழா பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சர்வதேச நடுவர்கள் முன்நிலையில் தமது திறமைகளை நிரூபித்த ஐந்து போட்டியாளர்கள் மத்தியில் இருந்து மிதுஜா வெற்றியாளராகத் 
தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெற்றிப்பெற்ற மிதுஜாவிற்கு IBC தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் வைதேகி பாஸ்கரன் ஆகியோர் ஒரு கிலோ தங்கத்தினாலான கிரீடத்தை வெற்றியாளருக்கு 
சூடியிருந்தார்கள்.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பற்றிய மற்றைய நான்கு போட்டியாளர்களுக்கும் தங்கம் பரிசுகளாக வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பீ.சி தமிழா
 நிகழ்ச்சியானது 
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியின் ஒலி, ஒளி அமைப்புக்கள் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
புலம்பெயர் தமிர்களிடையே இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவற்றை உலகறியச் செய்யும் பாரிய பணியையும் ஐ.பீ.சி தமிழ் மேற்கொண்டு வருகின்றது.
ஐ.பீ.சி தமிழினால் முன்னெடுக்கப்படும் பல செயற்றிட்டங்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் ஊடாக தமது திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மேடை மட்டுமல்லாமல் தமது திறமைக்கான ஒரு அங்கீகாரத்தையும் போட்டியாளர்கள் பெற்றுக்கொள்கின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 6 டிசம்பர், 2018

சூரிச் அட்லிஸ்வில் பகுதியில் வங்கிக் கொள்ளை

சுவிட்சர்லாந்தில் சூரிச் அட்லிஸ்விலில் பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொண்டு, வங்கிக் கொள்ளையர்கள் இருவர் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை சூரிச் பகுதியிலுள்ள Adliswilஇல் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் நுழைந்த வங்கிக் கொள்ளையர்கள் இருவர் அந்த பெண் வங்கி ஊழியருக்கு கைவிலங்கிட்டு விட்டு கொள்ளைச் 
சம்பவத்தில் ஈடுபட்டனர்.
காலையில் தனியாக வந்த அந்த பெண் ழியர் வங்கியை திறந்தார்.முகத்தை மறைக்கும் வகையிலான குளிர் தொப்பி அணிந்திருந்த இருவர், 
அவ்வழியே வந்தனர்.
அவர்களில் ஒருவர் குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு வரும் தள்ளு வண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தார்.
சட்டென வங்கிக்குள் நுழைந்த அவர்கள், அந்த பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து, அவருக்கு கைவிலங்கு ஒன்றை மாட்டி, ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.
பின்னர் வங்கி லாக்கரைத் திறந்து ஆயிரக்கணக்கான ஃப்ராங்குகளை அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் 
பிடித்தனர்.
அவர்கள் குளிருக்கான தொப்பியும் வெளிர் வண்ண கால் சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவித்த பொலிசார், தள்ளு வண்டியில் குழந்தைக்கு பதில் பொம்மை ஒன்றை வைத்திருக்கலாம் 
என்று தெரிவித்தனர்.
அவர்கள் 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைபட்டவர்கள் என்றும் 180 சென்றிமீற்றர் உயரம் உடையவர்கள் என்றும் பொலிசார் 
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக அந்த பெண் வங்கி ஊழியருக்கு அந்த கொள்ளையர்கள் எந்த காயமும் ஏற்படுத்தவில்லை.கொள்ளையர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பெர்ன் மாநிலத்தில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதனன்று இரவு பாதிக்கப்பட்ட அந்த நபர் தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூவர் கும்பல் ஒன்று அவரது குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது.
 பின்னர் குறித்த நபரை தாக்கிய கும்பல் அவரை மிரட்டி அங்கிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு 
தப்பியுள்ளது.
கயிறால் பிணைக்கப்பட்டிருந்த அந்த நபர் தனது முயற்சியால் விடுவிக்கப்பட்டு, பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை புகா
ராக அளித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்குப் பதிந்து மாயமான மூவர் கும்பலை 
தேடி வருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 1 டிசம்பர், 2018

சுவிட்சர்லாந்தின் வெளியான பில்லியனர்கள் பட்டியல்

சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியலில் 51 பில்லியன் பிராங்குகளுடன் முதலிடத்தில் Family Kamprad உள்ளது.
சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 300 பேர் கொண்ட இந்த பட்டியலில் முதலிடத்தை IKEA குழுமத்தின் Kamprad சகோதரர்கள் தக்கவைத்துள்ளனர்.
கடந்த ஆண்டை விடவும் இந்த 300 பேரின் சொத்துமதிப்பு அதிகரித்திருந்தாலும் எதிர்பார்த்தபடி இல்லை என்றே கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இந்த 300 பில்லியனர்களின் சொத்துமதிப்பு 675 பில்லியன் பிராங்குகள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் 300 பேரும் தனித்தனியாக ஆண்டுக்கு சுமார் 2,251 மில்லியன் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டை விடவும் இந்த முறை சுவிஸ் செல்வந்தர் ஒருவர் சராசரியாக 1.7 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு வருவாயை அதிகரித்திருந்தாலும் அது குறைவாகவே கருதப்படுகிறது.
இந்த 300 பில்லியனர்களும் கூட்டாக தங்கள் சொத்துக்களை சுவிஸ் குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு எடுப்பார்கள் எனில், தனி மனிதர் ஒருவருக்கு சுமார் 79,400 பிராங்குகள் வரை கி8டைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் மொத்த உள்நாட்டுஉற்பத்தியை விடவும் இந்த 300 செல்வந்தர்களின் சொத்துமதிப்பு 3 மடங்கு வேகத்தில் வளர்ச்சியை எட்டுவதாக கூறப்படுகிறது.
சுவிஸின் டாப் 10 பில்லியனர்களின் மொத்த சொத்துமதிப்பு 203 பில்லியன் பிராங்குகள் எனவும், இந்த ஆண்டு மட்டும் இந்த 10 பேரும் 2 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 30 நவம்பர், 2018

தீப்பிடித்த்து சுவிட்சர்லாந்தில் ஆறு அகதிகள் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அகதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பற்றிய தீ, குழந்தைகள் உட்பட ஆறு பேரின் உயிரைக் குடித்த நிலையில், தீப்பிடித்ததற்கு காரணம் அணைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட ஒரு சிகரெட்டாக இருக்கலாம் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தீப்பிடித்த அந்த கட்டிடத்தில் இருபதுபேர் இருந்ததாகவும் பெரும்பாலோர் தீயணைப்புபடையினரால் மீட்கப்பட்டுவிட்டாலும் ஆறு பேரை மீட்க முடியாமல் போனதாகவும் பொலிசார்
 தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் தீப்பிடித்ததால் அந்த தளத்தில் இருந்தவர்களை மட்டும் காப்பாற்ற இயலாமல் 
போய்விட்டதாக தெரிகிறது.
அவர்கள் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் யார் என்றோ, எத்தனை குழந்தைகள் இறந்தனர் என்பதையோ பொலிஸ்
 செய்தி தொடர்பாளர் தெரிவிக்காவிட்டாலும், அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள், அந்த வீட்டில் வசித்தவர்கள் அகதிகள் என்றும், பெரும்பாலும் எரித்ரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் 
தெரிவித்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 22 நவம்பர், 2018

கால்நடைகளின் கொம்புகளுக்காக ஒரு வித்தியாச வாக்கெடுப்பு சுவிசில்

சுவிட்சர்லாந்தில் கால்நடைகளின் கொம்புகள் தொடர்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு வித்தியாச வாக்கெடுப்பு 
நடத்தப்பட உள்ளது.
Armin Capaul (67) என்னும் ஒரு தனி மனிதன் தொடங்கிய ஒரு போராட்டம், இன்று நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தப்படும் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆடு மாடுகளின் கொம்புகள் 700 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடான இரும்பு ஆயுதம் ஒன்றால் 
அகற்றப்படுவது வழக்கம்.
ஆனால் இதை எதிர்ப்பவர்கள், விலங்குகளின் கொம்புகள், அவற்றின் வளர்சிதை மாற்றம், சுகாதாரம் மற்றும் தங்களுக்குள் தகவல் தொடர்பு கொள்ளுதல் ஆகிய முக்கிய விடயங்களுக்கு உதவுகின்றன எனவே அவற்றை அகற்றக்கூடாது என்கின்றனர்.
இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு அது பட்ஜெட்டை பாதிக்கும் ஒரு விடயம், ஏனெனில் கொம்புள்ள கால்நடைகளை வைத்திருப்பதற்கு கொட்டகையில் அதிக இடம்
 வேண்டும்.
எனவே அவர்கள் கால்நடைகளின் கொம்புகள் அகற்றப்படக்கூடாது என்பதோடு, அவற்றை பராமரிப்பதற்காக உதவித் தொகையும் அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
கொம்புகளை அகற்றாத கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக விவசாய பட்ஜெட்டிலிருந்து ஒரு தொகையை ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை
 விடுக்கின்றனர்.
ஆனால் அரசு இதை எதிர்க்கிறது; கொம்புள்ள கால்நடைகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்கின்றார் விவசாயத் துறை அமைச்சர்.

இந்நிலையில் இது தொடர்பான வாக்கெடுப்பு ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. வாக்கெடுப்பில் மக்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஈழத் தமிழ் பெண் சுவிஸில் மாநகரசபை தேர்தலில் போட்டி

சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற ஈழத் தமிழ் பெண் போட்டியிடுகின்றார்.
தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் 
செயற்பட்டு வருகின்றார்.
இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் மாநகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 15 நவம்பர், 2018

பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்திய சுவிஸ் விமானம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமான சுவிஸ் ஏர்பஸ் விமானம் ஒன்று நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
 ஜேர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து 103 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமாகியுள்ளது சுவிஸ்
 ஏர்பஸ் விமானம்.
சூரிச் விமான நிலையத்தின் 14-வது ஓடுதளம் நோக்கி விமானம் வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென்று ஆளில்லா விமானம் ஒன்று விமானியின் பார்வைக்கு 
தென்பட்டுள்ளது.
 சுதாரித்துக் கொண்ட விமானி உடனடியாக விமானத்தை திசை திருப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் விமான விபத்தானது தவிர்க்கப்பட்டுள்ளது. உடனடியாக சூரிச் விமான நிலைய அதிகாரிகள் சுவிஸ் விமான போக்குவரத்து அமைச்சகத்தை தொடர்பு கொண்டு 
தகவல் பகிர்ந்துள்ளது.
 குறித்த ஆளில்லா விமானத்தை இயக்கியவர் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை என கூறும் அதிகாரிகள், அது சட்டவிரோதமான செயற்பாடு எனவும், அனுமதி வழங்கப்படாத பகுதியில் ஆளில்லா விமானத்தை இயக்குவது சட்டப்படி குற்றமாகும் என 
தெரிவித்துள்ளனர்.
 இந்த ஆண்டு மட்டும் இதுவரை 5 முறை இதுபோன்ற ஆளில்லா விமான சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 மேலும், 500 கிராம் எடை கொண்ட ஒரு ஆளில்லா
 விமானத்தால் பயணிகள் விமானம் ஒன்றை
 தகர்க்க முடியும் எனவும், எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு உண்டு எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து சுவிசில் கண்டுபிடிப்பு

குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் 'நோவார்டிஸ்' நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் 'டைப்' ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள்
 பிறக்கின்றன.
இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடைகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் 'நோவார்டிஸ்' நிறுவனம் அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்தை ஒருமுறை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 13 ஆண்டுகள் மரணத்தை தள்ளிப் போட முடியும். இந்த மருந்தின் விலை 40 லட்சம் பிராங்குகள். ஆனால் சுவிட்சர்லாந்து அரசை
 பொறுத்தவரை எந்த வகை அரிய மருந்தாக இருந்தாலும் ஒரு லட்சம் பிராங்குகளாகவே இருக்க வேண்டும். எனவே இதற்கு அரசின் அனுமதி கிடைக்குமா? என்ற 
கேள்வி எழுந்துள்ளது


செவ்வாய், 13 நவம்பர், 2018

ஈழத் தமிழ் அகதிகளுக்கு சுவிஸில் இலங்கை அரசியல் சூழலால் நிம்மதி

சுவிஸ் நாட்டில் அரசியல் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சை விடும் சூழ்நிலையை இலங்கை அரசின் தற்போதைய சூழல் ஏற்ப்பாடு 
செய்து கொடுத்துள்ளது.
அண்மைய  காலங்களில் அகதிகள் தொடர்பான மிகவும் கடுமையான கொள்கையைக் கடைப்பிடிக்கும் சுவிஸ் நாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான குடியேற்றவாசிகளின் நிலை தொடர்பில் சுவிஸ் நாடு சில தளர்ச்சிகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிய 
வருகின்றது.
இலங்கையில் உள்ள அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதை ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைச் சபை. மற்றும் அமெரிக்கா பல உலக நாடுகள் மிகவும் கடுமையாக இலங்கை அதிபர் மைத்திரிபால ஸ்ரிசெனவுக்கு கடும் எச்சரிக்கை செய்ததுடன். லண்டன் தனது நாட்டுப் பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம்
 என்று கூடஅறிவித்தது.
இந்நிலையில் சுவிஸ் அரசும் இலங்கை அதிபருக்கு சிலவிடயங்களை எடுத்துக் கூறியதுடன் தொடர்ந்தும் இலங்கையில் நிம்மதியற்ற சூழலும் தொடர்ந்து பதற்ற நிலையிலேயே இலங்கையில் சூழ்நிலை உள்ளதால் சுவிஸ் நாட்டில் அகதி தஞ்சம் கோரியவர்களில் நிராகரிக்கப்பட்டவர்களது நாடுகடத்தல் விடயம் தொய்வு நிலையில் 
உள்ளதாக தெரிகின்றது.
ஐரோப்பிய இன்றியத்தின் பேச்சையும் கேட்காமல் சுவிஸ் அரசு ஆயிரக்கணக்கானோரை நாடுகடத்தியதுடன் பலரை டப்ளின் சட்டப்படி நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டுள்ளதுடன் பலரை வெளியேற்றியும் வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்க அரசு கலைக்கப்பட்டு மனித உரிமைச் சபையால் யுத்தக் குற்றவாளி என கூறப்பட்ட இனப்படுகொலையாளி மகிந்தவை  ஜனாதிபதி சட்டவிரோதமாக பிரதம மந்திரியாக  பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டதுடன் பாராளுமன்றை கால வரையறை  இன்றி ஒத்தி வைத்ததுடன் நல்லிணக்க அரசின் பாராளுமன்றைக் கலைத்து அறிக்கை
 வெளியிட்டார்.
இப்படியான இலங்கை அரசின் சர்வாதிகார நடவடிக்கையால் இலங்கை வாழுகின்ற தமிழர்களுக்கு மேலும் அச்சறுத்தல்கள் ஏற்ப்படலாம் என்னும் அடிப்படையில் சர்வதேசத்தின் அறிக்கைகளும் மனித உரிமைச் சபையின் அறிக்கைகளும் இலங்கையில் சுமுக நிலை இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளதால் சுவிஸ் அரசின் எல்லாத்தமிழ் அகதிகள் தொடர்பான விடயம் தற்காலிகமாக கிடப்பில் இருக்கக் கூடிய
 சூழ்நிலையே உள்ளதாக தெரிகிறது.
எனவே சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு சற்று நிம்மதியான சூழலே நிலவுகின்றது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 9 நவம்பர், 2018

சுவிசில வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உணவகம்

சுவிஸ் மெக்டொனால்ட் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர்கள் பலர் தொலைக்காட்சியில் ஆபாச படம் ஒளிபரப்பானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். Schwyz பகுதியில் அமைந்துள்ள மெக் டொனால்ட் உணவகம் ஒன்றில் சுமார் 30 பேர் உணவருந்திக்
 கொண்டிருந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் தொடர்ந்து ஆபாச இணைய தளங்கள் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதோடு ஒரு ஆபாச சினிமாவும் காட்டப்பட்டது. உணவக ஊழியர்களிடம் ஒரு சில வாடிக்கையாளர்கள் இது குறித்து தெரிவித்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
பல வாடிக்கையாளர்கள் அசௌகரியமாக உணர்ந்ததால் அதை கவனிக்காதது போல திரும்பி உட்கார்ந்து கொண்டனர்.
சுவிஸ் மெக் டொனால்ட் உணவகத்தில் ஆபாச படம் காட்டப்பட்டது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2014ஆம் ஆண்டு Solothurn பகுதியில் ஒரு உணவகத்தில் ஆபாச படம் காட்டப்பட்டதோடு, சர்வதேச ஊடகங்கள் அதை செய்தியாக்கியதால் உலகம் முழுவதும் அந்த 
சம்பவம் பேசப்பட்டது.
தடுப்பதற்காக மெக் டொனால்ட் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Eurosport உள்ளிட்ட சில குறிப்பிட்ட சேனல்களை மட்டுமே தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனென்றால் அவற்றில் எந்த ஆபாச காட்சிகளும் ஒளிபரப்பப்படுவதில்லை. இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மெக் டொனால்ட் செய்தி தொடர்பாளர் ஒருவர், மீண்டும் ஒரு முறை ஊழியர்களுக்கு விதிகள் குறித்து அறிவுறுத்தப்படும்
 என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பாரிய விபத்த்தில் சுவிஸில் ஆபத்தான நிலையில் யாழ். இளைஞன்

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் நேற்றைய தினம் சுவிட்சர்லாந்தில் வைத்து பாதசாரிகள் நடப்பதற்கான மஞ்சள் கோட்டில் செல்லும்போது விபத்திற்குள்ளாகி
 படுகாயமடைந்துள்ளார்.
சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தற்போது வசிக்கும் கவிஞர்பூவதி என்ற புனைப்பெயருடன் பூவதியின்புலம்பல்கள் எனும் கவிதை தொகுப்பினை வெளியிட்டு புகழ்பெற்ற கஜன் என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
நேற்று அதிகாலை இவர் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட வேளை பாரிய வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 3 நவம்பர், 2018

இளைஞர்களிடையே சுவிஸ்சில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்


சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்றாலும் இளம் பெண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள்.
சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்றாலும் இளம் பெண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வுமுடிவுகள் 
வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் தினசரி அருந்திய மதுவின் அளவைவிடவும் தற்போது மிகவும் குறைவாக பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை சுவிஸில் மதுப்பழக்கம் தொடர்பான ஆய்வுகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் 20 சதவிகிதமாக இருந்த மது அருந்துவோர்களின் எண்ணிக்கை தற்போது 11 சதவிகிதமாக குறைந்துள்ளது
 என தெரியவந்துள்ளது.
இருப்பினும் சுவிஸ் மக்களில் 82 சதவிகிதம் பேர் தினசரி ஒரு கிண்ணமேனும் மது அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 26 சதவிகிதம் பேர் தினசரி மது அருந்துவதாக
 குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் 1992 ஆம் ஆண்டு இது 29 விழுக்காடாக இருந்தது. மட்டுமின்றி 34 வயதுக்கு உட்பட்டவர்களின் மதுப்பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக இளம் பெண்கள் மது அருந்துவதை வாடிக்கையாக
 வைத்துள்ளனர் எனவும்,
சில மணி நேரங்களில் பெண்கள் 4 கிண்ணம் வரையிலும், ஆண்கள் 5 கிண்ணம் வரையிலும் மது அருந்தும் அளவுக்கு அடிமையாக உள்ளதும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு 19 விழுக்காடாக இருந்த மது அருந்தும் இளைஞர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு 24 விழுக்காடாக
 அதிகரித்துள்ளது.



வாடகை கட்டணங்கள் சுவிட்சர்லாந்தில் அதிரடியாக சரிவு

சுவிட்சர்லாந்தில் வாடகை கட்டணங்கள் அதிரடியாக சரிந்துள்ளதால் வாடகை குடியிருப்புகளை நாடுவோர்களுக்கு இது
 அரிய வாய்ப்பாக.
சுவிட்சர்லாந்தில் வடகை கட்டணங்கள் அதிரடியாக சரிந்துள்ளதால் வாடகை குடியிருப்புகளை நாடுவோர்களுக்கு இது அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சுவிஸில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாடகை கட்டணங்களில் சுமார் 0.5 சதவிகிதம் அளவுக்கு அதிரடியாக
 குறைக்கப்பட்டது.
இதே நிலை அக்டோபர் மாதத்திலும் நீடித்த நிலையில், இதுவரை நான்கு முறை வாடகை கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளதும் சாதாரண பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பாக
 பார்க்கப்படுகிறது.
100 சதுர மீற்றர் கொண்ட ஒரு குடியிருப்புக்கு தற்போது மாத வாடகையாக சுமார் 2165 பிராங்குகள் வசூலிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க டிசினோ மாகாணத்தில் வாடகை கட்டணங்கள் 1.1 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.
சூரிச் மாகாணத்தில் 100 சதுர மீற்றர் கொண்ட ஒரு குடியிருப்புக்கு மாத வாடகையாக 2,610 பிராங்குகள் கட்டணமாக 
வசூலிக்கப்பட்டுகிறது
ஆனால் டிசினோ மாகாணத்தில் இதே குடியிருப்புக்கு 1894 பிராங்குகள் வாடகை கட்டணம் என கூறப்படுகிறது.
ஜெனிவா பகுதியிலும் வடமேற்கு சுவிட்சர்லாந்திலும் வாடகை கட்டணம் மிகவும் குறைவு என கூறப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 31 அக்டோபர், 2018

ஈழத்தமிழன் சுவிஸ் அணி சார்பாக சர்வதேச போட்டியில் சாதித்து காட்டிநார்

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரர் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.
ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சோமசுந்தரம் சுகந்தன் Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் 
கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் இடம் பிடித்துள்ளார்.
இங்குஅழுத்தவு ம் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு சுவிஸில் அடையாள அட்டை

சுவிஸ் செய்திகள்:சுவிற்சர்லாந்தில் அகதி அந்தஸ்து இல்லாமல் வாழ்ந்து வருபவர்களுக்கு நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் நகரப்பகுதியில்தான் இவர்கள் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் ஓர் அடையாள அட்டையை வழங்குவதற்கு பேர்ண் நகர நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். இந்த தீர்மானம் பேர்ண் நகரில் வாழ்பவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று பேர்ண் நகரத்தின் மேற்குப்பகுதியின் ஒரு பிரிவான பெத்லகேமில் நடைபெற்றது.
பேர்ண் நகரில் வாழும் ஒருவர் எந்த வகையான வதிவிட அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தாலும், வதிவிட
 அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டாலும் இந்த அடையாள அட்டையானது அவர்களுக்கு வழங்கப்படும் போது வதிவிட அனுமதிப்பத்திரங்கள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. இதற்கமைய பேர்ண் நகரில் வாழும் அனைவரிற்கும் இந்த நன்மை கிடைக்கவுள்ளது.
அத்துடன் இந்த நகரில் புலம்பெயர்வாழ் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர்.இந்த அடையாள அட்டைகளைப் பயனபடுத்தி அனைவரும் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் வங்கிக்கணக்குகளை ஆரம்பிக்கலாம். தொலைபேசி ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கும் ஏனைய தேவைகளுக்கும்
 பயன்படுத்தலாம்.
அடையாள அட்டை தொடர்பாக கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் எப்போது எங்கே வழங்கப்படும் என்ற தகவல்கள் அறிவிக்கப்படும்.
இவ் அடையாள அட்டைகளுக்கு பேர்ண் நகரப்பகுதி நிர்வாகம் பொறுப்பாக இருக்கும். இது சுவிற்சர்லாந்தில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட 
உள்ள திட்டமாகும்.
இதன்மூலம் சுவிஸில் அகதி அந்தஸ்து கிடைக்காதவர்களுக்கு இந்த அட்டைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக 
காணப்படுகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடு கடத்திய சுவிட்சர்லாந்து

:புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவரங்கள் 
அலுவலகம்.
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 1,039 வெளிநாட்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டதாக சுவிஸ் ஃபெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் அதிகம்பேர், அதாவது 348 பேர் Balkans நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.நாடு கடத்தப்பட்டவர்களில் 250 பேர் ஆப்பிரிக்கர்கள், 157 பேர் வட ஆப்பிரிக்காவையும் 93 பேர் மேற்கு ஆப்பிரிக்காவையும் 
சேர்ந்தவர்கள்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 279 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இது Schengen ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்படலாம்.
ஆனால் உண்மையில் சுவிஸ் குற்றவியல் விதிகளின் கீழ் குற்றவாளிகள் என தீர்க்கப்பட்ட, வயது வந்த வெளிநாட்டவர்களில், ஒரு சிறு பகுதியினர் மட்டுமே 2017ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2017இல் சுவிட்சர்லாந்தில், கொலை முதல் பாலியல் ரீதியான தாக்குதல்கள் வரையான தீவிர குற்றங்கள் செய்தவர்களை நாடு கடத்தும் உரிமையை நீதிமன்றத்திற்கு வழங்கும் சட்டம்
 இயற்றப்பட்டது.
அந்த சட்டம், முதல் முறை குற்றம் புரிவோரை 15 ஆண்டுகள் வரை சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்க தடை செய்யும் உரிமையையும், திரும்பத் திரும்ப குற்றம் செய்வோரை ஆயுட்காலம் முழுமைக்கும் தடை செய்யும் உரிமையையும் நீதிபதிகளுக்கு வழங்குகிறது.
கடந்த ஆண்டில் ஏராளமான அகதிகள் தலைமறைவானதாலும், சிலர் மருத்துவ சான்றிதழ்கள் பெற்று நாடு கடத்தப்படுவதிலிருந்து விலக்கு பெற்றதாலும், சில சம்பவங்களில் விமானிகள் நாடு கடத்தப்படுபவர்களை அவர்களது நாடுகளுக்கு கொண்டு செல்ல 
மறுத்ததாலும்,
ஜேர்மனி முதலான பல ஐரோப்பிய நாடுகளுக்கு வட ஆப்பிரிக்கா பொன்ற பகுதிகளுக்கு குற்றம் புரிந்த புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது இன்னமும் கடினமாகவே உள்ள நிலையில் சுவிட்சர்லாந்து ஆயிரத்திற்கும் மேலானோரை நாடு கடத்தியுள்ளது
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 5 அக்டோபர், 2018

சுவிஸ் ஜனாதிபதியின் வினோதமான செயற்பாட்டினால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்

நாடுகளின் தலைவர்கள் கருப்புப்பூனை படை சூழ வெளியே தலை காட்டாமலே பயணிக்கும் நேரத்தில், ஆச்சரியவிதமாக, சுவிஸ் ஜனாதிபதி சாலையோரம் தரையில் அமர்ந்து ஆவணம் ஒன்றை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி 
உலகையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.அதுவும் சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset, சுவிட்சர்லாந்தில் அல்ல, நியூயார்க்கில் உள்ள ஒரு சாலையின் அருகே அமர்ந்திருந்தார்.நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சந்திப்புக்காக 
அமெரிக்கா சென்றிருந்தபோதுதான் சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset இப்படி சாலையோரம் அமர்ந்திருந்தார்.
சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்த, சுவிஸ் தலைவர்களோ தங்கள் நாட்டில் இது சர்வசாதாரணம் என்கிறார்கள்.இந்த சம்பவம் முக்கியமாக ஆப்பிரிக்க மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர், உகாண்டா அதிபர் பாதுகாவலர்களின் வாகனங்களின் படை சூழ, சாலையோரத்தில் கூட சொகுசுச் சேரில் அமர்ந்திருக்கும் படத்தையும், அதன் பக்கத்திலேயே சுவிஸ் ஜனாதிபதி தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும் முகநூலில் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய மனப்பான்மை கொண்ட ஆப்பிரிக்கத் தலைவர்கள்தான் தங்கள் நாட்டு மக்களை ஏழ்மையாக வைத்திருப்பதற்குக் காரணம் என்று செய்தி பதிட்டுள்ள அவர், ஒரு போன் காலுக்காக உகாண்டா அதிபர் பிஸியான போக்குவரத்துக்கே இடைஞ்சல் ஏற்படுத்தியதாக
 தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், நேரெதிராக சுவிஸ் ஜனாதிபதியோ அமெரிக்காவில் சாலையோரம் அமர்ந்து தனது நோட்ஸை படித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
சுவிஸ் ஜனாதிபதி மட்டுமல்ல, வேறு பல சுவிஸ் தலைவர்களும் மிகவும் எளிமையாகவே இருக்கிறார்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் ஃபெடரல் 
கவுன்சிலரான Doris Leuthard ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.Micheline Calmy-Rey என்பவர் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சராக இருந்தபோது கேக் ஒன்றினால் ஒருவன் அவரது முகத்தில் தாக்கினான்.
இத்தகைய சம்பவங்கள் அபூர்வமாக நடைபெற்றாலும்கூட சுவிஸ் தலைவர்கள் சைக்கிளிலும் ரயிலிலும் பயணம் செய்வதையும் பாதுகாவலர்கள் இல்லாமல் பொது இடங்களில் நடமாடுவதையும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல 
பாராட்டத்தக்கதுமாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

சுவிசில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பள்ளிக்குழந்தைகள்,

சுவிட்சர்லாந்தில் பள்ளிக்குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு பள்ளிகள் காரணமாக அமைவதில்லை, பெற்றோரே காரணமாக உள்ளனர் என்று சிறுவர் நல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையம் 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் 11 வயதுள்ள குழந்தைகளில் 27 சதவிகிதம்பேர் தூக்கமின்மை பிரச்சினைகளால் அவதியுறுவதாகவும், 15 சதவிகிதம்பேர் தொடர் மன அழுத்தத்திற்குள்ளாவதாகவும் கண்
டறியப்பட்டுள்ளது.
இதுபோக 12 சதவிகிதம்பேர் அடிக்கடி தலைவலியால் பாதிக்கப்படுவதாக சுவிஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும்போது, 30 ஆண்டுகளாக Basel நகரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்தவரும்
, Pro Juventute Foundation என்னும் அமைப்பின் தலைவருமான Katja Wiesendanger, இந்த அழுத்தத்திற்கு காரணம் பள்ளிகள் அல்ல பிள்ளைகளின் பெற்றோரே என்று கூறுகிறார்.
வர வர பள்ளிகள் பிள்ளைகளின் பிரச்சினைகளை உணர்ந்து வருவதாக கூறும் அவர், “ஆரம்பப் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது என்பதை அடிக்கடி கேள்விப்படுகிறேன், ஆனால் இந்தப் பிரச்சினை எங்கிருந்து வருகிறது என்பதை உங்களையே 
கேட்டுப் பாருங்கள்.
பெரும்பாலும் பள்ளிகளே இவ்விடயத்திற்காக குற்றம் சாட்டப்படுகின்றன. ஆனால் உண்மையான பிரச்சினை பள்ளிகளா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
பிள்ளைகளின் இந்தப் பிரச்சினைக்கு பெற்றோர்கள்தான் காரணம் என்னும் அவர், பல பெற்றோர் படிப்புக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுவே பிள்ளைகள் மீதும் 
திணிக்கப்படுகிறது.
பிள்ளைகள் சரியாக படிக்காவிட்டால் ஒதுக்கப்படுவார்களோ என்னும் பயம் பெற்றோருக்கு இருக்கிறது. அந்த பயத்தை அவர்கள் பிள்ளைகளுக்கு கடத்துகிறார்கள் என்று கூறுகிறார்.
அக்டோபர் மாதம் Pro Juventute Foundation என்னும் அமைப்பு பிள்ளைகளின் விருப்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக ஓய்வு நேரம்கொடுக்க வேண்டும்என்பதை வலியுறுத்தும் “அழுத்தத்தைக் குறைப்போம், அதிக முக்கியத்துவம் குழந்தைக்கு கொடுப்போம்” என்னும் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
சமீப காலமாக குழந்தைகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை கேட்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>


திங்கள், 20 ஆகஸ்ட், 2018

சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை பொலிஸ் குவிப்பு:

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திரளான பொலிசாரும் மீட்பு குழுவினரும் திடீரென்று குவிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை அடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதில் ஒரு இளம் பெண் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே அப்பகுதியில் குவிந்த மக்கள் மீதும் அடிதடி நடத்தப்பட்டுள்ளதால் பொலிஸார் ஒருகட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி, பின்னர் ரப்பர் குண்டுகளையும் அங்கு கூடிய பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளனர்.
சிட்டி சென்டர் அருகே பொலிஸ் குவிக்கப்பட்டதற்கும் குவிந்த பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கும் பொலிசார் இதுவரை விளக்கமளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும் சூரிச் அறோ பகுதியில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையால் குடும்பத்தில்
 இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியதாகவும் மேலும் குடும்ப உறுப்பினர் அடி காயங்களுக்கு உள்ளாகியதாகவும் இதனைத் தடுக்க வந்த சுவிஸ் பிரஜை ஒருவரையும் தாக்கியதாலும் மேலும் குடும்பக் கலவரம் வீதிக்கு வந்ததாலும் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 28 ஜூலை, 2018

நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞர்

சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்தில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞரை 27 மீற்றர் உயரத்தில் இருந்து குதித்து காப்பாற்றிய அமெரிக்கருக்கு பாராட்டுகள் 
குவிந்து வருகிறது.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஜூரா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள Saut-du-Doubs அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு வந்த சுவிஸ் இளைஞர் ஒருவர் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர்
 தமது உயிரை துச்சமாக கருதி விபத்துக்குள்ளான நபரை காப்பாற்ற குதித்துள்ளார்.
இதனிடையே இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் உடனடியாக அவசர உதவிக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து 3 ஹெலிகொப்டரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் தண்ணீரில் தத்தளித்தபடி இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
27 மீற்றர் உயரத்தில் இருந்து தடுமாறி விழுந்ததால் சுவிஸ் இளைஞரின் கை உடைந்துள்ளது.
இதனிடையே தண்னீரில் தத்தளித்த சுவிஸ் இளைஞரை காப்பாற்றிய நபர் அமெரிக்க முன்னாள் மீட்பு குழு உறுப்பினர் எனவும், கடலில் விபத்துக்குள்ளானவர்களை மீட்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது


Blogger இயக்குவது.