வியாழன், 20 நவம்பர், 2014

சுவிட்சர்லாந்தில் காணாமல் போன போலந்து இளைஞர் சடலமாக மீட்பு

 கடந்த மாதம் காணாமல் போன போலந்து நாட்டு இளைஞரின் சடலம் பல நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளது.
சுவிஸின் வாட் மாகாணத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் நவம்பர் மாதம் 4ம் திகதி அன்று ஜூரா - நார்ட் வடியோஸ் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 15 தினங்களாக 70க்கும் மேற்பட்ட நபர்கள், மோப்ப நாய் மற்றும் ஹெலிகாப்டரின் உதவியுடன் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன அந்த இளைஞரின் சடலத்தை கடந்த புதன்கிழமை அன்று மீட்டுள்ளனர்.
இவர் தனது உறவினர்களை சந்திக்க சுவிஸ் வந்துவிட்டு பின்னர் திரும்பி செல்கையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.
மேலும், வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பாததை அறிந்த உறவினர் பொலிசாரிடம் புகார் கொடுத்ததையடுத்து தற்போது பொலிசார் அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.