ஞாயிறு, 6 மே, 2018

தமிழ் மொழி பொதுத்தேர்வில் சுவிசில் 5300 மாணவர்கள் பங்குபற்றினர்


சுவிட்சலாந்து தமிழக் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ் n;மாழிப் பொதுத்தேர்வு 24வது ஆண்டாக, 05.05.2018ஆம் நாள் சுவிட்சலாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.
இத்தேர்வில்pல் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள்
 தோற்றினர்.
பதினோராம் வகுப்புத்தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவரக்ளும் தோற்றியமை சிறப்பாகும்.
தமிழக் ; கல்விச்சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழக் ; குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.
இத்தேர்வின்போது தமிழப்;பள்ளிகளின் முதல்வ்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளராகக் கடமை புரிந்தனர். குறிப்பாக, பழையமாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழக்; குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக
 உள்ளது.
இவ் வாண்டு பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வுகள் இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி இளங்கலைமாணி பட்டப்படிப்புக்கான தகமைத்தேர்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக் ; கல்விச்சேவை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ் மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இயற்கை உணவுகள் அதிவேக வளர்ச்சி சுவிட்சர்லாந்தில்

உணவுகளின் உற்பத்தி, கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக வேளாண்மை மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிஸில் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் ஒன்று, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள் என்று வேளாண்மைத்துறையின் மத்திய அலுவலகம்
 தெரிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு 4.6 சதவித அளவில் இருந்த Organic உற்பத்தி, 2017ஆம் ஆண்டில் 9 சதவிதமாக அதிகரித்தது. அதே சமயம் விற்பனை விகித பங்கும், 6 சதவிதத்தில் இருந்து 11.5 சதவிதமாக உயர்ந்ததாக 
தெரிய வந்துள்ளது.
அனைத்து முட்டைகளிலும் Organic-யின் பங்கு, கடந்த ஆண்டு நான்கில் ஒன்றாக இருந்தது. இது அனைத்து வகை முட்டைகளிலும் 26.6 சதவிதம் ஆகும். மேலும், Organic காய்கறிகள் 23.1 சதவிதமும், Organic Bread 22.1 சதவிதமும் ஒட்டுமொத்த சந்தையில் 
பங்கு வகிக்கின்றன.
இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் சுவிஸின் Organic உணவு சந்தை 7.6 சதவிதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துள்ளது. விற்பனையான Organic உணவுகளின் ஒட்டுமொத்த மதிப்பு 2007ஆம் ஆண்டில் 1.3 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டில் 2.7 பில்லியனாக உயர்ந்திருந்தது. இதில் வருடாந்திர தனிநபம் செலவு CHF171-யில் இருந்து
 CHF320 ஆகும்.
மிகப்பெரிய Organic விநியோகஸ்த அங்காடிகளான Migros மற்றும் Coop ஆகியவை முறையே, 33 மற்றும் 44 சதவித வளர்ச்சியை Organic உணவுகள் மூலம் பெற்றுள்ளன. அதே வேளையில், சிறப்பு அங்காடிகளில் இதனால் 5 சதவித அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் Liechtenstein-யில் சுமார் 6,906 organic பண்ணைகளை அளித்ததன் மூலம், மொத்தமாக 279 புதிய உற்பத்தியாளர்கள் organic சான்றிதழ் அடையாளத்தை 2017ஆம் ஆண்டில் பெற்றனர். இவற்றில் 6,423 பண்ணைகள் Bio Suisse சான்றிதழ் திட்டத்தின் கீழ் உள்ளன.
எனினும், அதிக விலை நிர்ணயம் Organic உணவுகளின் வேகமான வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. இதனை சுவிஸின் விலை கண்காணிப்புக் குழு அதிகாரி Stefan Meierhans
 அறிந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், 'பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல்லாமே Organic ஆக தான் இருந்தன. இப்போது அவை சிறப்பு அடையாளத்தை பெற்றுள்ளன. அதனால் நீங்கள் அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியுள்ளது.
சில சமயங்களில் இது மிகவும் உயர்வான விலை என நான் நினைத்திருக்கிறேன். ஆனால், போதுமான அளவு தேவைப்படும் வரை சந்தைகளின் விதியாக இந்த விலை உள்ளது' 
என தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 5 மே, 2018

புகைப்பிடிக்க சுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் தடை உத்தரவு

சுவிட்சர்லாந்தின் Ticino மண்டலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளின் வெளிப்புற பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.
மண்டலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நடியா கிசோல்பி இது குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளார்.
அதாவது உணவகங்களின் வெளிபுறங்களில் இருக்கும் பகுதியிலேயே புகைப்பிடிக்கும் பகுதி மற்றும் புகைப்பிடிக்க கூடாத பகுதி என பிரிக்க வேண்டும் என்பது நடியாவின் வாதமாக உள்ளது.
நடியா கூறுகையில், முழுவதுமாக புகைப்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமல்ல, புகைப்பிடிக்காதவர்களை பாதுகாக்க வேண்டும் என கூறயுள்ளார்.
இந்த முடிவுக்கு புகையிலை எதிர்ப்பு சங்கத்தின் உறுப்பினர் தாமஸ் பியூட்லர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகங்களின் உள்ளே புகைப்பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாகவே தடை உள்ளது
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.