வெள்ளி, 26 ஜூன், 2015

குதிரை ஒன்றிற்கு பயிற்சி அளிதபெண் பரிதாபமாகஉயிரிழந்தார்

சுவிட்சர்லாந்து நாட்டில் குதிரை ஒன்றிற்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தபோது கட்டுப்பாடின்றி ஓடிய குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Vaud மண்டலத்தில் உள்ள Noville என்ற நகரில் தம்பதிகள் இருவர் குதிரையேற்றம் பள்ளி ஒன்றை கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வந்துள்ளனர்.
பள்ளியின் உரிமையாளரின் 56 வயதுடைய மனைவி கடந்த செவ்வாய்கிழமை மாலை வேளையில் குதிரை ஒன்றிற்கு பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த உயரமான மர கட்டையை குதிரை வேகமாக வந்து தாண்ட வேண்டும்.
இந்நிலையில், குதிரையில் அமர்ந்து பயிற்சி அளித்துக்கொண்டிருந்த சமயத்தில் அசுர வேகத்தில் வந்த குதிரை ஒரு மர கட்டைக்கு முன்னர் நிலை தடுமாறியுள்ளது.
அப்போது, எதிர்பாராத கண நேரத்தில் தனது முதுகில் அமர்ந்திருந்த பெண் பயிற்சியாளரை குதிரை தூக்கி வீசியுள்ளது.
இந்த விபத்தில் தலைகீழாக விழுந்த அந்த பெண்ணின் தலையில் பலத்த அடிப்பட்டுள்ளது.
இந்த காட்சியை கண்ட சக ஊழியர்கள் மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர்.
மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக
 தெரிவித்தனர்.
பெண் பயிற்சியாளர் தலையில் கவசம் அணிந்திருந்தும், அதனையும் மீறி அவரது தலை தரையில் பலமாக மோதியதின் விளைவாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பேசிய அந்த பள்ளியின் 
ஊழியர்கள், இங்குள்ள குதிரைகளின் ஒவ்வொரு பழக்கவழக்கத்தையும் அந்த பெண் நன்கு அறிவார்.
மிகுந்த அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரான அவர்,
 இதுபோன்ற ஒரு எதிர்பாராத விபத்தில் சிக்கி இறந்துள்ளது இப்பள்ளிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கவனம்?விமான டிக்கெட் பதிவு செய்பவர்க்கு ? எச்சரிக்கை???

மோசடி கும்பல்கள் அதிகரித்து வருவதால் இணையதளங்கள் மூலம் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்யும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என சுவிஸ் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் இணையத்தளம் மூலம் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்தால், இலவசமாக வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் அல்லது கவர்ச்சிகரமான பரிசுகள் கிடைக்கும் என்று வரும் எஸ்.எம்.எஸ்களை நம்பி பல நபர்கள் ஏமாந்துள்ளனர்.
இதே போல், சுவிஸில் உள்ள சூரிச் மண்டல பொலிசாருக்கு அண்மையில் புகார் ஒன்று வந்துள்ளது.
புகார் அளித்த 6 நபர்களுக்கும் இணையத்தள நிறுவனம் ஒன்று ‘தங்களிடம் டிக்கெட் பதிவு செய்தால் கோசோவோ நாட்டில் உள்ள Pristina நகருக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அவர்கள், அந்த இணையத்தளத்தில் தங்களுடைய வங்கி கணக்கு எண்களை தெரிவித்து டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
அவர்களுடைய கணக்குகளிலிருந்து ஆயிரக்கணக்கான பிராங்குகள் தான் போனதே தவிர அவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் எதுவும் வரவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சூரிச் மண்டல பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, பணத்தை ஏமாற்றிய நிறுவனம் அவர்களிடம் அதனை திருப்பி செலுத்தி விட்டது.
இந்த மோசடி குறித்து பேசிய பொலிசார், விமான டிக்கெட்டுகள் பதிவு செய்பவர்கள் தங்களுக்கு கைப்பேசியில் வரும் எஸ்.எம்.எஸ் தொடர்பாக எப்போதும் உஷாராக செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், வாடிக்கையாளர்கள் சிரமம் பார்க்காமல், குறிப்பிட்ட விமான நிறுவனத்திலோ அல்லது நம்பிக்கைக்கு உரிய தனியார் பயண நிறுவனங்களிடம் நேரடியாக விமான டிக்கெட்டுகளை பதிவு செய்வது அவசியம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 20 ஜூன், 2015

சுவிஸ் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியிட்ட அரசு!

சுவிட்சர்லாந்து குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் அகதிகளாக குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள் தொடர்பாக சூரிச் மண்டல நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுவிஸின் சூரிச் மண்டலத்தை சேர்ந்த SP, GLP, Green மற்றும் AL கட்சிகளின் மாநகர சபை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், சூரிச் மண்டலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் சுவிஸ் குடிமக்களாக இருந்தாலும், வெளிநாட்டினர்களாக இருந்தாலும் அவர்களுடைய நாட்டுடமை தொடர்பான தகவல்களை அரசு மற்றும் பொலிசார் வெளியிடும் அறிக்கையில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தாள்கள் மட்டுமின்றி, அந்த குற்றம் தொடர்பாக தகவல்களை சேகரிக்கும் நிருபர்கள் கூட குற்றவாளிகளின் நாட்டுடமையை வெளியிடக்கூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பு தொடர்பாக பேசிய SP Group-ன் தலைவரான Min Li Marti கூறுகையில், குற்றம் புரிந்துள்ள நபரின் நாட்டுடமையை பற்றி தெரிந்துக்கொள்வது என்பது அந்த குற்றம் தொடர்பான விசாரணைக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்றார்.

மேலும், சுவிஸில் ஒரு குற்றம் நடைபெற்றால், உடனடியாக வெளிநாட்டினரை தான் விசாரிக்கும் ஒரு தவறான போக்கு உள்ளதால் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.

குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருடைய நாட்டுடமை பற்றி கூறினால், அதன் மூலம் அந்த நபரின் மதம், பாலியல் நாட்டம், அரசியலில் அவரது பார்வை உள்ளிட்ட விடயங்களை மட்டுமே சிறிதளவு தெரிந்துக்கொள்ள முடியுமே தவிர மிக முக்கிய காரணிகளான வயது, கல்வி, இந்த சமூகத்தில் அவருக்கு இருக்கும் அணுகுமுறை உள்ளிட்டவைகளை தெரிந்துக்கொள்ள முடியாது என்றார்.

இருப்பினும் சூரிச் மண்டல நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பெரும்பாலான மக்கள் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றில், சுமார் 90 சதவிகித மக்கள் ‘ஒரு குற்றவாளியின் நாட்டுடமையை பற்றி அறிந்துக்கொள்வது அவசியம்’ என வாக்களித்துள்ளனர்.

9 சதவிகித மக்கள் மட்டுமே குற்றவாளியின் நாட்டுடமை தொடர்பான தகவல்கள் அவசியம் அல்ல என வாக்களித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், சுவிஸில் உள்ள 26 மண்டலங்களிலும் சூரிச் மண்டல பொலிசார் தான் இதனை முதலில் அறிமுகப்படுத்த உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.