புதன், 23 டிசம்பர், 2015

பயங்கர தீ விபத்து: குடியிருப்பில் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழப்பு !!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உள்பட பலர் பலியாகிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற நகரில் தான் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதே பகுதியில் உள்ள பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இன்று காலை 11.20 மணியளவில் ஒரு அவசர தகவல் வந்துள்ளது.
தகவல் பெற்று அதிர்ச்சி அடைந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதே சமயம் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள குடியிருப்பிற்குள் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியாகி கொண்டிருப்பதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு, தீயை கட்டுபடுத்தியும் உள்ளே நுழைய முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அருகில் இருந்த குடியிருப்புவாசிகளிடம் விசாரணை நடத்தியதில், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் ஒரு தாய், அவரது இரண்டு மகன்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் வசித்ததாக தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலில், வீட்டிற்குள்ளே பல உடல்கள் கிடப்பதாகவும், ஆனால், உள்ளே நுழைய முடியாததால் அவற்றை அடையாளம் காண இயலவில்லை என பொலிசாரிடம்
 தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் அந்த வீட்டில் உள்ள நண்பர்களை பார்க்க வந்ததாக கூறப்படுவதால், அவர்களும் தீவிபத்தில் சிக்கி இருப்பார்களா என்ற அச்சம்
 ஏற்பட்டுள்ளது.
தற்போது தடவியல் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாவும், இந்த தீவிபத்து பற்றி சில மணி நேரங்களுக்கு பிறகு முழு விபரம் தெரியவரலாம் என பொலிசார் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






சனி, 19 டிசம்பர், 2015

வாலிபர்கள்: மாற்றான் மனைவியை கற்பழிக்க முயன்றனர் பொலிசார் நூதனமாக கைது செய்தனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் மாற்றான் மனைவி ஒருவரை கற்பழிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பெயர் வெளியிடப்படாத கணவன் மனைவி என இருவர் வசித்து
 வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் அந்த பெண் தனியாக பெர்ன் நகர ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது பெண் தனியாக செல்வதை அறிந்த இரண்டு வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இருவரும் பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசியவாறு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் Grosse Schanze என்ற பகுதியை அடைந்ததும் அங்கு ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த வாலிபர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
வாலிபர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னுடைய பலம் முழுவதையும் திரட்டி வாலிபர்களுக்கு எதிராக போராடியுள்ளார்.
சிறிது நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த பெண் கத்தி கூச்சல் எழுப்ப அவர்கள் இருவரும் அஞ்சியவாரு அங்கிருந்து தப்பி 
ஓடியுள்ளனர்.
நள்ளிரவில் தன்னை கற்பழிக்க முயன்ற சம்பவம் குறித்து அந்த பெண் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் வாலிபர்களின் உடை மற்றும் அங்க அடையாளங்களை சேகரித்துக்கொண்டு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிசாருக்கு அந்த தகவல்களை 
அளித்துள்ளனர்.
அடையாளங்களை சேகரித்துக்கொண்ட பொலிசார், அப்பகுதி முழுவதையும் சல்லடையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் இருவர் தான் பெண்ணை கற்பழிக்க முயன்றது தெரியவர உடனடியாக இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டு வாலிபர்களுக்கும் மற்ற குற்றங்களிலும் தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அடுத்தடுத்து மீட்கப்பட்ட 2 சடலங்கள் :பொலிசார் அதிர்ச்சியில்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு வாகனம் பழுதுப்பார்க்கும் இடத்தில் 2 வாலிபரின் சடலங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதே பெர்ன் மாகாணத்தில் உள்ள Laupen என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று இரவு வேளையில், Laupen பகுதி மக்களுக்கு அவசர தகவல் ஒன்றை அளித்துள்ளனர்.
தகவலை பெற்று வந்த பொலிசார், அங்குள்ள ஒரு குடியிருப்பில் 2 சடலங்களை உயிரற்ற நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
சடலங்களை மீட்ட பொலிசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Langenthal நகரில் கண்டுபிடிக்கப்பட்ட மரணம் கொலையா தற்கொலையா என விசாரணை நிறைவு பெறாத நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் 
அடைந்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கும் புதன் கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை உடனடியாக தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
பெர்ன் மாகாணத்தில் 2 நாட்களுக்குள் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 16 டிசம்பர், 2015

காதலன் காதலியை ஈர்க்க செய்த முயற்சிக்கு 150 பிராங்குகள் அபராதம்!!!

சுவிசில் காதலன் ஓருவர் தனது காதலியை ஈர்க்கும் பொருட்டு நடத்திய நிகழ்வால் பொதுமக்கள் பாதித்துள்ளதாக கூறி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
Winterthur பகுதியில் உள்ள 26 வயதான அந்த காதலன் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு அவரிடம் சம்மதம் பெற முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கிலோக்கணக்கில் ரோஜா பூக்கள், வாசனை மெழுகுவர்த்திகள், Champagne பானம், கோப்பைகள் என அவரது காதலியை மகிழ்விக்கும் பொருட்டு அனைத்தையும் எடுத்து 
சென்றுள்ளார்.
காதலியின் வீட்டில் சென்ற இந்த நபர் திருமண சம்மதம் கேட்க அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தம்முடன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களையும் அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.
இந்த குப்பைகள் அப்பகுதி மக்களை பாதிப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கு குறித்து விசாரித்த winterthur அமர்வு நீதிமன்றம் சம்பந்தபட்ட நபருக்கு 150 பிராங்குகள் அபராதம் 
விதித்துள்ளது.
சம்பவத்தின்போது அப்பகுதியில் கடந்து சென்ற நபர் ஒருவர் பூக்கள் மற்றும் பொருட்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதாகவும் அதை அப்படியே விட்டுச்செல்லுமாறு தம்மை கேட்டதாகவும் விளக்கமளித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



தமிழர் உள்ளிட்ட வெளிநாட்டவர்க்கு சுவிசில் நோக்கி வரும் பேராபத்து!!!

குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 28.02.2016 அன்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இதற்கான முன்மொழிவினை வெளிநாட்டவர்களை இனவாதத்தின் அடிப்படையில் எதிர்க்கும் வலதுசாரி கோட்பாட்டுக்
 கொள்கையை கடைப்பிடிக்கும் சுவிஸ் மக்கள் கட்சி (SVP) முன்னெடுத்து வருகின்றது.
இவ்முன்மொழிவு மக்கள் அங்கீகரமளித்து வாக்களிப்பின் மூலம் வெற்றி பெற்று சட்டரீதியாக அமுலாக்கப்படும்போது சுவிசில் வாழும் தமிழ்மக்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள
 நேரிடும்.
எதிர்வரும் 28 பெப்ரவரி 2016 அன்று மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் சட்டஅங்கீகாரத்துக்கான மக்கள்வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் கீழ்வரும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம். அவை-
* ஓர் வெளிநாட்டவர் சிறிய குற்றச்செயலில் ஈடுபட்டாலும் இனவாத ரீதியாக குற்றம்சாட்டப்பட்டு நாடுகடத்தப்படலாம்.
* சுவிஸ் நாட்டின் வதிவிடஉரிமைபெற்ற ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் இச்சட்டமூலத்தினூடாக நேரடியாக பாதிக்கப்படுவதோடு அவரது முழுக்குடும்பமும் தண்டனையை பெறும் ஓர் துர்ப்பாக்கியம் ஏற்படும். உதாரணமாக வதிவிட அனுமதியுடன் வாழும் கணவன்
 குற்றம்சாட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டால் சுவிஸ் குடியுரிமையுடன் வாழும் மனைவியும் சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நிற்பந்திக்கப்படுவார்.
* நீதிமன்ற அனுமதியின்றி காவற்துறையே முடிவெடுத்து நாடுகடத்தும் அதிகாரத்தை இச்சட்டம் அமுலாக்கவுள்ளது.
* பெற்றோர்கள் வதிவிட அனுமதியுடனும், பிள்ளைகள் சுவிஸ் குடியுரிமையுடனும் இருப்பின் பெற்றோர்கள் குற்றம்சுமத்தப்பட்டு நாடுகடத்தப்பட்டால் ஏதும்அறியாத குழந்தைகளும் சேர்த்து
 நாடுகடத்தப்படும் மனிதஅவலம் நடைபெறும். காரணம் சுவிஸ் சட்டத்தின் சமூகவாழ்வியல் மற்றும் குடும்ப உறவுமுறைக்கான 21 வது சட்டப்பிரிவின்  41வது  அறிவுறுத்தலின்படி 18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் பெற்றோருடனேயே இருக்கவேண்டும் என்பது நியதி.
இருப்பினும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது சுவிஸ் நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறது என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்சட்டம் ஐரோப்பிய மனிதஉரிமை உடன்படிக்கையை 
கவனத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சர்வதேச குழந்தைகள், சிறுவர்கள் பாதுகாப்புச்சட்டத்தை இப்புதிய வரைபு நிராகரிக்கும் பேராபத்தைக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐ.நா மனிதஉரிமைகள் சாசனத்தையும் இச்சட்ட அங்கீகாரம் நிரகரித்துள்ளது..
இனத்துவேசத்தின் எண்ணக்கருவில் முளைத்த இச்சட்ட அமுலாக்கங்களை எதிர்த்து வெளிநாட்டவர்களின் அனைத்து அமைப்புக்களுடனும் இணைந்து வெளிநாட்டவர்களை ஆதரிக்கும் சோசலிச ஜனநாயகக் கட்சி மாபெரும் வேலைத்திட்டம் ஒன்றை தேசியரீதியாக 
முன்னெடுக்கவுள்ளது.
இதற்கான தார்மீக ஆதரவை சுவிஸ் தமிழ் சமூகக் கட்டமைப்புக்கள் கவனத்தில் எடுத்து செயற்படுதல் அவசியமாகின்றது
வாழ்விட வதிவுரிமை பெற்ற ஒவ்வொருவருடைய வாக்குகளும் இச்சட்ட அமுலாக்கத்தை எதிர்த்து Nein என்று வாக்களிப்பதன் மூலம் இச்சட்டமூலத்தை தோற்கடிக்க
 முடியும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 8 டிசம்பர், 2015

இராணுவ சேவையில் சுவிஸ் தோற்றுவிட்டது கிறிஸ்டோப் ப்ருங்நேர்

சுவிஸ் இராணுவத்தினர் தங்களது பாதுகாப்பு சேவையில் தோற்றுவிட்டதாக சுவிஸ் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோப் ப்ருங்நேர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2014ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு சேவையில் இடம்பெற்ற 1,213பேருக்கும் வன்முறையினுடனாக ஆபத்து நிறைந்து காணப்பட்டமையே இதற்கு காரணம் என ஜெர்மன் மொழி செய்தித்தாள் சுவிஸ் ஏம் சொன்டெக்குக்க தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு வறுமை நிலையை பாதுகாப்பபு தொடர்பில் 965 மதிப்பீடு செயய்ப்பட்டது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. மேலும் இது தொடபிலான நுழைவுக்கு முன் இதற்கு சாத்தியமான வீரர்கள் வேண்டும் 2011ஆம் ஆண்டே அழைத்துக் கொண்டனர்.
வன்முறை அபாயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள போதும் இராணுவத்தில் இளைஞர்கள் என்பது தொடர்பில் சுவிட்சர்லாந்து தான் கட்டாய இராணுவ சேவையை தொடர அனுமதி இல்லை என தெரிவித்தது.
அவர்கள் இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தாலும் சேவையில் ஈடுபட தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் ஒருவர் தனிப்பிட்ட துப்பாக்கி பெறுவதிலும் சிரமம் காணப்பட்டது.
குறிப்பாக அவர்கள் சிறுபான்மையினர் மீது தீவிர அல்லது ஜிஹாத்திச தொடர்பான வன்முறை ஆபத்து இருக்கலாம் என கருதப்படும்போது, வறுமை நிலையை மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸ் இராணுவம் இருந்து விலக்கப்பட்ட போதிலும் இது கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம் என்றார். 
தனடிப்படையில், சிறப்பு இராணுவ சேவை "இராணுவத்தில் தீவிரவாதம்", கடந்த ஆண்டுகளாக 41 வழக்குகள் காணப்பட்டன. 

தில் மிக தீவிர வலதுசாரி அரசியல் தொடர்பான தொடர்புகள் இருந்தன. ப்ருஙநேர், இந்த வழக்குகளில் எதுவும் குற்றவியல் நடவடிக்கைகள் விளைவாக அமையவில்லை எனவும் வன்முறை செயல்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல விடயங்கள் இருந்தனஎன
 தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>>



ஞாயிறு, 6 டிசம்பர், 2015

பொலிஸ்சார் 24 மணிநேர பாதுகாப்பு விமான சேவையில் ???

சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டத்திற்கமைய 24 மணிநேர விமான பொலிஸ் சேவையை 30 மில்லியன் ($29 மில்லியன்) ரூபா செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
இதற்காக முக்கிய விமான தளங்களில் ஒன்றான வோட் பியேமி என்ற விமான தளத்திலேயே இத்திட்டத்தை 
ஆரம்பிக்கவுள்ளது.
இது தொடர்பில், விமான பொலிஸ் சேவை இரண்டு முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
அதாவது, தீவிரமான போக்குவரத்து சட்டங்கள் அல்லது சுவிஸ் வான்வெளி இறையாண்மையை மீறும் வகையில் ஏனைய விமானம் தலையிடுவதற்கு தடைவிதித்தல், வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் கவனமாக கண்காணிக்கவும் இராஜதந்திரம் ஒழிக்கப்படவும் வேண்டும் எனவும் கோரியுள்ளனர். 
இத்திட்டம் 2016ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் எனவும் முதலில் இரண்டு விமானங்கள் செயற்படத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06:00 மணிமுதல் மாலை 08:00 மணிவரை இடம்பெறும். 
இதன்மூலம் இவை ஆண்டுக்கு 50 வாரங்கள் செயற்படும். மேலும் 2017ஆம் ஆண்டளவில் இது நாளாந்த சேவையாக மாற்றப்படும் . இத்திட்டம் 2019ஆம் ஆண்டளவில் வெற்றியடையம் பட்சத்தில் காலை 06.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இடம்பெறவும் திடடமிடப்பட்டுள்ளது. 
இறுதியாக, 2020இல், இத்திட்டமானது காற்று ரோந்து வருவதிலும் சேவை 24 மணித்தியாலங்களாக, வாரம், வருடம் முழுவதும் சேவையில் இருக்கக்ககூடியதாக அமையும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 2 டிசம்பர், 2015

இருபது கார்களை நொறுக்கிய மர்ம நபர்கள் பொலிசார் தீவிர தேடுதல்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் பார்கிங் செய்திருந்த சுமார் 20 கார்களை உடைத்து சேதாரப்படுத்திய மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Reinach என்ற நகரில் தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று நள்ளிரவு வேளையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வெளியே பல கார்கள் பார்கிங் செய்யப்பட்டிருந்துள்ளன.
இந்நிலையில், திட்டம் போட்டு வந்த சில மர்ம நபர்கள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை கண்மூடித்தனமாக உடைத்து சேதாரப்படுத்தியுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள சுமார் 20 கார்களின் மீதும் இந்த தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இன்று காலையில் சேதாரம் அடைந்துள்ள கார்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்கள் உடனடியாக பேசல் நகர பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்து கார்களை ஆய்வு செய்த பொலிசார், Tatnacht Hollenweg, Brunngasse, மற்றும் Lindenweg Rebbergweg உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்று தாக்குதலை மர்ம நபர்கள் நடத்தியுள்ளதை 
கண்டுபிடித்துள்ளனர்.
நள்ளிரவில் நிகழ்ந்துள்ள அட்டூழியம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மர்ம நபர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே இரவில் மர்ம நபர்கள் 20 கார்களை அடித்து நொருக்கியுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 26 நவம்பர், 2015

பர்தா அணிவதற்கு சுவிட்சர்லாந்தில் தடை!!!

தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும்படி பர்தா அல்லது நிகாப் அணிந்து வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த தடையை மீறி பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு 6500 ஸ்ரேலிங் பவுன் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசு
 தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: பரிதாபமாக பலியான 100 பசுமாடுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கால்நடைகள் பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 100க்கும் அதிகமான பசுமாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Kriessern என்ற நகரில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Lehenstrasse என்ற பகுதில் கால்நடைகள் பண்ணை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த பண்ணையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பண்ணையில் பற்றிய தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கு பரவியதால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்துள்ளது.
தகவல் பெற்று வந்த தீயணைப்பு வீரர்கள் பண்ணையில் இருந்து 8 பசுமாடுகள் மற்றும் 19 கன்றுகளை மட்டுமே உயிருடன் மீட்க 
முடிந்துள்ளது.
எஞ்சிய 100க்கும் அதிகமான பசுமாடுகள் தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
தீவிபத்தில் ஒட்டுமொத்த பண்ணையும் எரிந்து சாம்பலாகி போயுள்ளதால் சுமார் 1 மில்லியன் பிராங்குகள் வரை சேதாரம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு அப்பகுதி பொதுமக்களிடம் பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>




வெள்ளி, 20 நவம்பர், 2015

அடிபட்டு சாலையில் உயிருக்கு போராடிய சிறுமிகளை செல்பியில் புகைப்படம் எடுத்த நபர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 3 சிறுமிகளை காப்பாற்றாமல் அவர்கள் அருகில் நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்ட நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Aigle என்ற நகரில் தான் இந்த கொடூர காட்சி அரங்கேறியுள்ளது.
நகரன் மையத்தில் இருந்த சாலை ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை அன்று 10 மற்றும் 11 வயதுடைய சிறுமிகள் 3 பேர் தங்கள் பெற்றோர்களுடன் நடந்து சென்றுள்ளனர்.
சாலையின் ஓரத்தில் இருந்த நடைமேடையில் நடந்து சென்ற சிறுமிகளை நோக்கி வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று திடீரென
 மோதியுள்ளது.
விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த 50 வயதான கார் ஓட்டுனர் உடனடியாக காரை விட்டு இறங்கி வந்துள்ளார்.
அப்போது, விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களுக்கும் ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் 
ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பதில், விபத்தில் அடிப்பட்டு கீழே கிடந்த சிறுமிகளை கான கூட்டம் கூடியுள்ளது.
கூடிய கூட்டத்தில் இருந்த மக்கள் சிறுமிகளை காப்பாற்றுவதற்கு பதிலாக, அவர்களை புகைப்படம் எடுக்க தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர், கீழே குணிந்து அடிப்பட்ட சிறுமியுடன் செல்பி எடுத்துக்கொண்டது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறிது நேரத்தில் தகவல் அறிந்து பொலிசார் வந்தபோது, எவ்வித காரணமின்றி பொலிசாரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
நிலமையை உணர்ந்து அதிக எண்ணிக்கையில் பொலிசாரை வரவழைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி அடிப்பட்ட சிறுமிகளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
3 சிறுமிகளில் இருவர் சிகிச்சை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், Eglantina(11) என்ற சிறுமி கடந்த புதன் கிழமை முழுவதிலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
சாலையில் சிறுமிகள் 3 பேர் அடிப்பட்டுள்ள நிலையில், அவர்களை காப்பாற்றாமல் புகைப்படும் எடுத்துக்கொண்டு சிலரின் நடவடிக்கைகள் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சாலையில் நிகழ்ந்த கோர விபத்து ஓட்டுனர்உயிரிழந்தார்

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர் வாகனத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிஸில் உள்ள St. Gallen நகரை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பயணம் செய்துள்ளார்.
அதிகாலை நேரத்தில் A13 சாலை வழியாக Margrethen நகர் நோக்கி அவர் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றுள்ளார்.
அப்போது, நபரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக சறுக்கியவாறு சென்று சாலையோறம் இருந்த தடுப்பு சுவற்றில் பயங்கரமாக மோதியுள்ளார்.
சுவறின் மீது மோதிய வேகத்தில் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர், பல அடி தொலைவில் சென்று விழுந்துள்ளார்.
இந்த பயங்கர காட்சியை கண்ட சிலர், விரைந்து சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
சுவிஸின் மீட்பு குழுவினரான Rega-விற்கு தகவல் அளிக்கப்பட்டது. சில நிமிடங்களில் விபத்து பகுதிக்கு வந்த மீட்பு குழுவினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபருக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், ஓட்டுனருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாலையில் மீட்பு பணிகள் நடைபெற்ற வந்ததால், சில மணி நேரங்களுக்கு A13 சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
விபத்தை நேரில் கண்ட நபர்களிடம் தகவல்களை சேகரித்துக்கொண்ட பொலிசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

துணை தலைவி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து சுவிட்சர்லாந்தின் மாற்று கீறின் கட்சியின் துணை தலைவி அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
Zug பிராந்திய நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினராக தொடர்ந்தும் இருக்க எண்ணியுள்ள Jolanda Spiess-Hegglin என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த நிலையில் தாம் சார்ந்த கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ள அவர், ஒரு சுதந்திரமான அரசியலை தொடர விரும்புவதாகவும் Jolanda Spiess-Hegglin 
கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு திசம்பரில் Zug பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது.
அதில் கலந்து கொண்ட சுவிஸ் மக்கள் கட்சியின் Zug பிராந்திய முன்னாள் தலைவர் Markus Hurlimann போதை மருந்தை கலந்து தந்து Jolanda ஐ பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக
 கூறப்படுகிறது.
இதுகுறித்து நடத்தப்பட்ட அனைத்து மருத்துவ சோதனைகளிலும் இருவரும் பாலியல் உறவு கொண்டதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே Jolanda Spiess-Hegglin மற்றும் Markus Hurlimann ஆகியோர் உடனடியாக Zug பிராந்திய நாடாளுமன்றத்தில் இருந்து பதவி விலக வேண்டும் என பிராந்தியத்திலுள்ள பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி 
வந்துள்ளனர்.
ஆனால் அந்த கோரிக்கைகளை புறந்தள்ளியுள்ள Jolanda தாம் இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், குறிப்பாக, பெண்கள் உரிமை, குடும்ப நலம், மற்றும் பாலியல் சமத்துவம் போன்றவைகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 11 நவம்பர், 2015

பெண்கள் சுவிஸ்லாந்தில் குட்டைப் பாவாடைஅணியத்தடை!!!

சுவார்சயமான சுவிஸ்லாந்தில் ஒரு சம்பவத்தினைஅரசு  கொண்டுவந்திருக்கிறது. குறிப்பாக சுவிஸ்லாந்தில் பெண்கள், குட்டைப் பாவாடை மற்றும் இடுப்பு , உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டஆடைகளை அணிபவர்கள் 6 மாத சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் இவ்வாறான குட்டைப் பாவாடைகள் மற்றும் உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதானது பாலியல் வன்முறையை தூண்டும் வகையில் அமைவதால் இவ்வாறான ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் பெண் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
‘உடல் அங்கங்கள் தெரியும் வகையில் பெண்கள் ஆடை அணிவதற்கு தடைவிதிக்கப்படுகிறது’ பழமைவாத சட்டமானது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக சுவாஸிலாந்து பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
சுவாசிலாந்தில் மூன்றில் இரண்டு வீதமான  வயது பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுவதாக ஊடக அறிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சமத்துவ உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கோரி கடந்த மாதம் இந்நாட்டு பெண்கள் சுவாசிலாந்தின் இரண்டாவது நகரமான மன்சாரி நகரில் 
ஊர்வலம் சென்றனர்.
இவ்வாறான போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதா சுவாசி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
‘தடைவிதிக்கப்பட்ட ஆடைகளை அணிபவர்கள் கைது செய்யப்படுவர்’ என  பொலிஸ் பெண் பேச்சாளர் வென்டி ஹெல்டா எச்சரிக்கை 
விடுத்துள்ளார்.
பெண்கள் இவ்வாறான ஆடைகளை அணிவதால் எதிரிகளுக்கு மிகவும் சுலபமாக அமைந்துவிடுகின்றது. பெண்கள இந்த பாதிப்புகளை தொடர்ந்தும் எதிர்கொள்வதை எம்மால் ஊக்குவிக்க முடியாது. மக்கள் இவ்வாறான விடயங்களை கவனித்தில்கொள்ள வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பாரம்பரிய விழாக்களின்போது நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் குட்டை பாவாடை அணிவதற்கு அனுமதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 5 நவம்பர், 2015

சிறந்த மாணவராக ஈழத் தமிழர் தெரிவுசுவிஸ் பேர்ண் மாநகரில்---

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.
மாணவர்களின் கல்விச் செயற்பாடு புறக்கிருத்திய நடவடிக்கைகள் அனைத்துக்கும் மேலாக நற் பழக்க வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு இடம்பெற்று 
வருகின்றது.
பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர்கள் கல்வித் திணைக்களத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி
 வைக்கப்படும்.
தெரிவுக் குழுப் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தெரியாமலேயே பாடசாலைகளுக்கு வருகை தந்து அவதானங்களை மேற்கொண்டு அந்த விபரங்களை அடிப்படையாக வைத்தே இறுதி முடிவை எட்டுவார்கள்
அத்தகைய தெரிவில் தமிழரான செல்வன் அருளானந்தம் மரிய அனோஜ் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டு புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பேர்ண் - பெத்லகேமில் வசிக்கும் அருளானந்தம்(வின்சன்) சந்திரவதனா தம்பதிகளின் ஏக புதல்வனான மரிய அனோஜ் சுவிஸ் நாட்டிலேயே பிறந்தவர் என்பதுவும் வெளிநாட்டுப் பிள்ளைகள் அதிகமாக வாழும் பிராந்தியத்தில் வசிப்பவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
சுவிற்சர்லாந்து பல்கலைக் கழகம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வில் சுவிசில் வாழும் 148 பிறநாட்டு இனங்களுள் முதன்மைபெற்ற இனமாக தமிழ் இனம் விளங்குவதாகவும் இன்னும் ஒரு தசாப்த காலத்தில் நாட்டின் உயர் பதவிகளில் 35 வீதமானவற்றை தமிழ் இளையோரே வகிப்பர் எனவும் எதிர்வு கூறியுள்ளமையும் நினைவிற் கொள்ளத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 3 நவம்பர், 2015

கலைவாணி விழா 24 வது பாசல் தமிழ்ப் பாடசாலையின்

பாசல் தமிழ்ப் பாடசாலையின் 24 வது கலைவாணி விழாவில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் அப்பாடசாலையின் பழைய மாணவனாகவும் கௌரவ அறிவிப்பாளராகவும் கலந்துகொண்ட வேளை.
 இதுவே
சுவிற்சர்லாந்தில் முதலாவதாக சட்டபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இப்பாடசாலையின் ஆரம்பநாளன்று கல்விபயில ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். 
எனது ஒவ்வொரு கலைமுயற்சிகளினதும் அரங்கேற்ற மேடையாக திகழ்ந்தது இந்த மேடையே
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சுவிஸ் ஆங்கில மொழி திறனை வளர்த்துக்கொள்ளும் சிறந்த நாடுகளின் பட்டியலில் பின்னடைவு

சுவிஸில் உள்ள லூசெர்ன் நகரத்தில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள Education First (EF) என்ற நிறுவனம் 2015ம் ஆண்டில் ஆங்கில மொழி திறனை வளர்த்துக்கொள்ளும் சிறந்த நாடுகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் 70 நாடுகளில் உள்ள சுமார் 9,10,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கடந்த ஆண்டு 18ம் இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து 19வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இடத்தில் சுவீடனும், 2வது மற்றும் 3வது இடங்களில் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் 
இடம்பெற்றுள்ளன.
ஆங்கில மொழி திறமையை சிறப்பாக வளர்க்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்:
1.சுவீடன் 2.நெதர்லாந்து 3.டென்மார்க் 4.நோர்வே 5.பின்லாந்து 6.ஸ்லோவேனியா 7.ஈஸ்டோனியா 8.லக்ஸம்பர்க் 9.போலந்து 
10.ஆஸ்திரியா
இதே பட்டியலில் ஆசிய நாடுகளான இந்தியா 20வது இடத்திலும், இலங்கை 49வது இடத்திலும் உள்ளன. ஆய்வில் எடுக்கப்பட்ட 70 நாடுகளில் ஆங்கில மொழி திறனில் மிகவும் பின் தங்கியுள்ள நாடாக லிபியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சட்டவிரோதமாக பே ருந்தில் மதுபானம் கடத்தியவர் கைது!!!

சுவிஸ் எல்லைப்பகுதியில் உள்ள ட்ராம் வாகனத்தின் 8ம் வழித்தடத்தில் எல்லை பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, இருக்கைகளுக்கு பின்புறம் எண்ணற்ற பைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த பொலிசார், அவற்றை திறக்க உத்தரவிட்டுள்ளனர்.
அதில், பிராந்தி மற்றும் விஸ்கி வகைகளை சேர்ந்த 21 லிற்றர் மதுபானம் 30 பாட்டில்களில் கடத்தப்பட்டிருந்தது 
கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து பேசிய Patrick Gantenbein என்ற பொலிஸ் அதிகாரி, அதிக பைகளில் மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததால், அதனை கண்டுபிடிக்க முடியாதவாறு, இருக்கையின் பின்புறத்தில் சில பைகளை மறைத்து வைத்துள்ளனர்.
பேருந்துகளில் நபர் ஒருவருக்கு ஒரு லிற்றர் மதிப்புள்ள மதுபானம் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதி உள்ளதால், இதுபோன்ற நடவடிக்கைகள் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன.
கடத்தலில் ஈடுபட்ட 38 வயதான பேசல் நகரை சேர்ந்த ஒருவரையும் அவருடன் பயணித்த மற்றொரு நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 21 அக்டோபர், 2015

சுவிசில் இலவச போக்குவரத்து வசதி:சுற்றுலா பயணிகளுக்கு ?

சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு நகரம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் போக்குவரத்து வசதியை இலவசமாக அளிக்க முடிவு 
செய்துள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள லூசெர்ன் நகரம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
எனவே அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்கும் விதமாக 2017ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அரசின் போக்குவரத்து வசதியை இலவசமாக அளிக்க முடிவு 
செய்துள்ளது.
இது தொடர்பாக லூசெர்ன் நகரின் பொருளாதார விவகாரங்களுக்கான கொமிஷ்னர் பீட்டர் பௌச்சர் கூறியதாவது, லூசெர்ன் நகரம் மிகவும் தொன்மையான நகரம் இங்குள்ள ஹொட்டல்கள் 100 ஆண்டுகள் பழமையானவை.
மேலும் இங்குள்ள வாட்ச் மற்றும் நகைக்களும் நீண்ட பாரம்பரியத்தை உடையதாக விளங்கி வருகின்றன.
எனவே இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சுற்றுலா பயணிகளுக்கு இலவச போக்குவரத்து வசதி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக மாநகராட்சி நிர்வாகம் லூசெர்ன் சுற்றுலா துறையுடன் இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி 2017ஆம் ஆண்டில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நகர பேருந்து மற்றும் ரயில் போன்றவற்றை இலவசமாக பயன்படுத்திகொள்ளும் வசதியை அளிக்க முடிவு செய்துள்ளதாக
 கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 17 அக்டோபர், 2015

மக்களுக்குபாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை’: காரணம் தெரியுமா?

சர்வதேச அளவில் கோடீஸ்வர குடிமக்களை கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பவதில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் நாளை(18.10.15) பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், பொது தேர்தலுக்கு உண்டான எந்த பரபரப்பும் இன்றி சுவிஸ் மக்கள் மிக இயல்பாகவே இருந்து
 வருகின்றனர்.
இந்த காட்சி இன்று மட்டுமல்ல, பல வருடங்களாக பாராளுமன்ற பொது தேர்தலுக்கு அந்நாட்டு குடிமக்கள் அதிகம் முக்கியத்துவம் 
அளிப்பதில்லை.
சுமார் 82 லட்சம் குடிமக்களை மட்டுமே உடைய அந்நாட்டில், பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க செல்பவர்கள் 40 லட்சத்திற்கும் குறைவானவர்களே.
கடந்த 80 ஆண்டுகள் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில். வாக்களிக்கும் சதவிகிதம் 48%, 49%, 50% எந்த வீதத்திலேயே இருந்து 
வருகிறது.
தற்போது வெளியான புள்ளிவிபரத்திலும் கூட, நாளைய பாராளுமன்ற தேர்தலில் 49.1 சதவிகித மக்கள் மட்டுமே வாக்களிக்க வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், வாக்களிக்க செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக கொண்டுள்ள நாடுகளில் போலந்து, லிதுனியா மற்றும் ரோமானியா நாடுகளுக்கு அடுத்த 4-வது இடத்தில் சுவிட்சர்லாந்து இடம் பெற்றுள்ளது.
பெரும்பாலான குடிமக்கள் வாக்களிக்க விரும்பாததற்கு அந்நாட்டின் அரசாட்சி முறை மட்டுமே காரணமாக
 பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிறகு 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டின் ஜனாதிபதி மாறிக்கொண்டே இருப்பார். இதற்கு குடிமக்களின் வாக்கெடுப்பும் அவசியமாகும்.
சுவிட்சர்லாந்து நாட்டில் நேரடி ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருவதால், உள்நாட்டு விவகாரங்கள் முதல் வெளிநாட்டு விவகாரங்கள் வரை அரசு மட்டுமே சுயமாக முடிவு எடுக்க
 முடியாது.
ஒவ்வொரு விவகாரத்திற்கும் தீர்வு காண குடிமக்களிடம் அரசாங்க வாக்கெடுப்பை நடத்தும். 6 மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு வருடத்திற்கு ஒரு முறை என அடிக்கடி வாக்கெடுப்பில் குடிமக்கள் ஈடுப்படுவதால், பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் அதிகம் கவனம் 
செலுத்துவதில்லை.
நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மண்டல வாரியாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், வாக்களிக்க வரும் குடிமக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதற்கு இந்த நேரடி ஜனநாயக ஆட்சி நடைமுறை தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.



இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Blogger இயக்குவது.