புதன், 11 நவம்பர், 2015

பெண்கள் சுவிஸ்லாந்தில் குட்டைப் பாவாடைஅணியத்தடை!!!

சுவார்சயமான சுவிஸ்லாந்தில் ஒரு சம்பவத்தினைஅரசு  கொண்டுவந்திருக்கிறது. குறிப்பாக சுவிஸ்லாந்தில் பெண்கள், குட்டைப் பாவாடை மற்றும் இடுப்பு , உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டஆடைகளை அணிபவர்கள் 6 மாத சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் இவ்வாறான குட்டைப் பாவாடைகள் மற்றும் உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதானது பாலியல் வன்முறையை தூண்டும் வகையில் அமைவதால் இவ்வாறான ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் பெண் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
‘உடல் அங்கங்கள் தெரியும் வகையில் பெண்கள் ஆடை அணிவதற்கு தடைவிதிக்கப்படுகிறது’ பழமைவாத சட்டமானது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக சுவாஸிலாந்து பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
சுவாசிலாந்தில் மூன்றில் இரண்டு வீதமான  வயது பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுவதாக ஊடக அறிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சமத்துவ உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கோரி கடந்த மாதம் இந்நாட்டு பெண்கள் சுவாசிலாந்தின் இரண்டாவது நகரமான மன்சாரி நகரில் 
ஊர்வலம் சென்றனர்.
இவ்வாறான போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதா சுவாசி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
‘தடைவிதிக்கப்பட்ட ஆடைகளை அணிபவர்கள் கைது செய்யப்படுவர்’ என  பொலிஸ் பெண் பேச்சாளர் வென்டி ஹெல்டா எச்சரிக்கை 
விடுத்துள்ளார்.
பெண்கள் இவ்வாறான ஆடைகளை அணிவதால் எதிரிகளுக்கு மிகவும் சுலபமாக அமைந்துவிடுகின்றது. பெண்கள இந்த பாதிப்புகளை தொடர்ந்தும் எதிர்கொள்வதை எம்மால் ஊக்குவிக்க முடியாது. மக்கள் இவ்வாறான விடயங்களை கவனித்தில்கொள்ள வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பாரம்பரிய விழாக்களின்போது நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் குட்டை பாவாடை அணிவதற்கு அனுமதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.