புதன், 16 நவம்பர், 2016

சுவிஸ்சில் இருந்து ஒன்பது பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த 9பேர் மீளவும்   இங்கைக்கு  நாடுகடத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு நாடு கடத்தப்பட்டஇலங்கையர்கள் விபரம் தற்போது
 வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவகுமார் சிந்துஜன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பிரதஜா நிரோசன், புங்குடுதீவு ரஜீவன், லிந்துதாஸ் இனுவில், பாலசுதன் யாழ்ப்பானம், காண்டீபன் பருத்தித்துறை, சிவநேசன் பருத்தித்துறை போன்ற இடங்களைச்
 சேர்ந்தவர்கள்.
குறித்த 9 பேரும் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளவர்கள் எனவும் இவர்கள் அந்தநாட்டு சட்ட திட்டத்தை மீறி குடியேறிய நிலையில் இவர்கள் நாட்டை விட்டு திருப்பி நாடு கடத்தப்பட்டு ள்ளனர்
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று (புதன்கிழமை)  பிற்பகல் 1.05 மணி விசேட விமான மூலம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களை விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை செய்து வருவதாக கட்டு நாயக்க பொலிசார் 
தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.