திங்கள், 14 அக்டோபர், 2019

சுவிசில் அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்,

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.
அந்த 14 வயது பெண், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகம் செல்ல அனுமதியுள்ள நெடுஞ்சாலையில் 150 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதையடுத்து பொலிசார் பொருத்தியுள்ள CCTV கமெராக்களில் 
சிக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Zofingen பகுதியில் அந்த பெண் கமெராவில் சிக்கினார்.
அந்த காரை தேடிச்சென்று அதன் உரிமையாளரை விசாரித்தபோதுதான் அந்த காரை அவரது பேத்தியான அந்த 14 வயது பெண் 
திருடிச் சென்றது தெரியவந்தது.
குற்றவாளிக்கு 14 வயது என்பதால், மேல் நடவடிக்கைக்காக அவரை மாகாண இளைஞர் விவகாரத்துறையிடம் 
பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.