ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

வாட்ச் விலையுயர்ந்ததல்ல: வாதாடும் அதிகாரி ?

இந்தோனேசிய இராணுவ தலைமை அதிகாரி சுவிஸின் விலைமதிப்புள்ள கடிகாரம் அணிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த இராணுவ தலைமை அதிகாரி மோல்டோகோ என்பவர், சுவிஸில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த கடிகாரத்தை கையில் அணிந்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது.
ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார், இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த கடிகாரத்தை எடுத்து உடைத்துகாட்டி, மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை யாராவது இப்படி உடைப்பார்களா? இது சீனாவில் 430 டொலர்களுக்கு வாங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
இருப்பினும், அந்நாட்டு மக்கள் வறுமையில் வாடும்போது, உயர் அதிகாரிகள் விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வியாழன், 24 ஏப்ரல், 2014

சுவிஸ் பிரிட்டிஷ் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் ...

 சுவிஸ் நிறுவனமான நோவார்ட்டிஸின் நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பிரிவை பிரிட்டிஷ் நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் ஏழு பில்லியன் டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
உலகின் இரண்டு முன்னணி மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்களான நோவார்டிஸும் கிளாக்ஸோ ஸ்மித்க்ளைனும் ஒன்றின் தொழில் பிரிவை மற்றொன்று வாங்கும் விதமாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
அந்த உடன்பாட்டின்படி மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் வாங்கக் கூடிய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை கூட்டாக தயாரித்து விற்பார்கள்.
தம்மிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு மற்றும் வர்த்தப் பரிமாற்றம் மூலம் இரண்டு நிறுவனங்களும் அதன் பங்குதாரர்களும் பயனடைவார்கள் என கிளாக்ஸோவும் நோவார்ட்டிஸும் அறிவித்துள்ளன.
மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம் நோவார்ட்டிஸ் நிறுவனம் தனது கால்நடை மருந்துப் பிரிவை லில்லி நிறுவனத்துக்கு 5.4 பில்லியன் டொலருக்கு விற்க உடன்பட்டுள்ளது. 

திங்கள், 21 ஏப்ரல், 2014

ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து கடத்தப்படும் பணம்

ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து பணத்தைக் கடத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள், அதிகரித்துக் கொண்டே போகின்றது.
சுங்க இலாகா அதிகாரிகள், சோதனையிடுகையில் ஜெர்மன்- சுவிஸ் எல்லைப் பகுதிகளில், இந்த பணக்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக இடம்பெற்று வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள புற பகுதிகளில், ஒரு நபருக்கு அனுமதிக்கப்பட்ட பணத்தொகை 10 ஆயிரம் யூரோக்கள் ( 12,200 பிராங்குகள் ஆகும்). அந்த விதிகளை மீறி, ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து பணத்தைக் கடத்திச் செல்கின்றனர்.
2013ம் ஆண்டில் 573 மில்லியன் யூரோக்கள் கடத்தப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பணக்கடத்தல்காரர்கள், மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகின்றனர். அவர்கள் ஒரு நாளில் நான்கு பேர்களாக ஜேர்மனிய - சுவிஸ் எல்லைப் பகுதிகளில் கார்களின் பிரயாணம் செய்கையில், ஒவ்வொரும் தங்களது, பர்சுகளில் 9,900 யூரோக்களை பணமாக வைத்துள்ளனர்.
அதிகாரிகள் அவர்களை சோதிக்கும்போது, அவர்களது அனுமதிக்கப்பட்ட லிமிட் ஆன 10000 யூரோக்களுக்கு கிழே இரப்பதால், எல்லைப் பாதுகாப்பில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகளால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க இயலுவதில்லை.
அவர்கள் சுவிஸ்- ஜேர்மன் எல்லையை எளிதாக பணத்துடன், கடந்து விடுகின்றனர்
 

 

சனி, 12 ஏப்ரல், 2014

சுவிஸ் விமானி இந்தோனேசியாவில் கைது

 இலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்று இந்தோனேசியா விமானப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுவிசை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி ஒருவர் விமானம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இலங்கை வழியாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்த போது அந்நாட்டு போர் ஜெட் விமானங்களினால் சுற்றிவளைக்கப்பட்டு ஷோவக்டோ விமான தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படையினர் விமானத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
65 வயதான ஹெனிஸ் பேயர் என்ற இந்த விமானி கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்ததால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.


                    
 

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

அதிஷ்டவசமாக தப்பிய விமானங்கள் !!!


சுவிசில் எதிரெதிரே மோதிக்கொள்விருந்த இரண்டு விமானங்கள் விமான அதிகாரிகளால் தவிர்க்கப்பட்டுள்ளது.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் கடந்த 20ம் திகதி நெட்ஜெட் என்ற நிறுவனத்தினால் இயக்கப்பட்டு வரும் ஹாக்கர் - 800 என்ற வியாபார விமானம் தரையிரக்கதிற்கு தயாராகிக்கொண்டிருந்தது.
அப்போது அவ்விமானம் தரையிருங்கும் பாதையிலேயே பயிற்சி விமானம் ஒன்றும் தரையிரங்க முயற்சித்துள்ளது.
இதை பார்த்த விமான போக்குவரத்து அதிகாரிகள் பயிற்சி விமானத்தை வேறொரு இடத்தில் தரை இறங்குமாறு விமான ஓட்டுநருக்கு கட்டளையிட்டனர்.
இதனால் இரு விமானங்களும் விபத்திலிருந்து காப்பற்றப்பட்டதுன், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பயிற்சி விமானமானது ஜேர்மனியிலுள்ள நியூஹாம்பர்க் நகரத்தில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது
 

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

குரோஷியாவுடன் சமரச உடன்பாட்டை எட்டிய சுவிஸ்

  சுவிட்சர்லாந்து, குரோஷியா நாட்டுடன் சமதான உடன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிசில் நிகழ்ந்த வாக்கெடுப்பிற்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகாலம் இருந்த இடைக்கால ஆட்சி, குரோஷியவிற்கு சுவிஸ் வேலைவாய்ப்பு மையங்களில் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதன்பின் குரோஷியாவிற்கு வேலை வாய்ப்பளிக்க சுவிஸ் நிராகரித்து வந்ததால், குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் 28 நாடாக இணைந்துள்ளது.
தற்போது சுவிஸ் மக்கள் சுதந்திரத்துடன் செயல்பட குரோஷியாவுடன் சமரச உடன்பட்டை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள முரண்பாடு முடிவிற்கு வரும் என அறிக்கை ஒன்றை சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தினால் குரோஷிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரத்துடன் சுவிசில் வேலை செய்யும் உரிமை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
 

புதன், 2 ஏப்ரல், 2014

வீராங்கனைக்கு நேர்ந்த அவலம்

சுவிசில் பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள பெர்னீஸ் ஒபர்லாந்த் பகுதியை சேர்ந்த 35 வயது விளையாட்டு வீராங்கனை மலையின் உச்சியிலிருந்து குதித்துள்ளார்.
அப்போது எதிர்பாரதவிதமாக மலைக்குன்றின் மீது மோதி கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து அப்பெண்ணை மீட்பு படையினர் மீட்பதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பெண் வீராங்கனையுடன் இருவர் வந்திருந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Blogger இயக்குவது.