சனி, 12 ஏப்ரல், 2014

சுவிஸ் விமானி இந்தோனேசியாவில் கைது

 இலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்று இந்தோனேசியா விமானப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுவிசை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி ஒருவர் விமானம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இலங்கை வழியாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்த போது அந்நாட்டு போர் ஜெட் விமானங்களினால் சுற்றிவளைக்கப்பட்டு ஷோவக்டோ விமான தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படையினர் விமானத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
65 வயதான ஹெனிஸ் பேயர் என்ற இந்த விமானி கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்ததால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.


                    
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.