புதன், 28 டிசம்பர், 2022

மக்கள் தொகை சுவிற்சலாந்தில் 9 மிலியனை தொடும் உச்சியில் உள்ளது

சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை ஒன்பது மில்லியனைத் தொடும் உச்சியில் உள்ளது என்றும் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளைத் தூண்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புத்தாண்டுக்கு முன் அல்லது 2023 இன் தொடக்கத்தில் அடையக்கூடிய அடையாள எண் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையாக 
வரவேற்கப்படுகிறது. 
குறைந்த கருவுறுதல் விகிதம் உள்ள ஒரு நாட்டில் (2020 இல் ஒரு பெண்ணுக்கு 1.46 பிறப்புகள்), வளர்ச்சியானது குடியேற்றம் மற்றும் வாழ்நாள் ஆயுளில் இருந்து வருகிறது. எவ்வாறாயினும், சுவிட்சர்லாந்தில்
 யார் வாழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது நாம் எப்படி வாழ வேண்டும் என்ற மிக முக்கியமான பிரச்சினையை மறைக்கிறது. இது திட்டமிடல் மற்றும் நுகர்வு பற்றி மிகவும் சிக்கலான மற்றும் கோரும் கேள்விகளை எழுப்புகிறது.
2012 முதல், சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை நான்கு சதவீத புள்ளிகளால் 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் புலம்பெயர்ந்தோரின் வயது விவரம் காரணமாக, சுவிஸ் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டினர்.
உண்மையில், சுவிஸ் பொருளாதார மாதிரியானது வெளிநாட்டு தொழிலாளர்கள், முக்கியமாக ஐரோப்பிய யூனியன் குடிமக்கள் எளிதில் கிடைப்பதை அடிப்படையாகக் கொண்டது. சுவிட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே மக்கள் சுதந்திரமாக நடமாடுவது இதற்கு அடிகோலுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 15 நவம்பர், 2022

சுவிஸ் லுசேர்ன் Ebikon பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 17,000 பிராங்குகள் சொத்து சேதம்

சனிக்கிழமை மாலை, லுசேர்ன் Ebikon இல் A14 நெடுஞ்சாலையை இணைக்கும் பாதையில் ஒரு ஓட்டுநர் விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக SwissTamil24.Com  பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
சனிக்கிழமை, நவம்பர் 12, 2022 அன்று, மாலை 6:45 மணிக்கு சற்று முன்பு, ஒரு ஓட்டுநர் Reusseggstrasse இலிருந்து A14 மோட்டார் பாதையின் திசையில் இணைக்கும் வளைவில் ஓட்டிச்சென்றபோது இந்த விபத்து 
இடம்பெற்றதாக தெரிவித்தார்.
அங்குள்ள வலதுபுற வளைவில், கார் சாலையை விட்டு வெளியேறி, வனவிலங்கு வேலியில் மோதி, இறுதியில் அதன் கூரையில் குடைசாய்ந்தவாறு கிடந்துள்ளது. இவ்விபத்தின் போது ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்தில் சுமார் 17,000 பிராங்குகள் சொத்து சேதம்  ஏற்பட்டுள்ளதாகவும்  செய்தியாளர் தெரிவித்தார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சுவிற்சர்லாந் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! பலர் அதிரடியாக கைது

சுவிஸ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! | பலர் அதிரடியாக கைது.!! சுவிற்சர்லாந்தில் தொடர்ந்து கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்து வந்த வேளையில் சுவிஸ் பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு பலரை கைது செய்ததாக அறிவுத்துள்ளனர்.
கடந்த இரண்டு இரவுகளில் கொள்ளை நிகழ்வுகளில் எண்ணிக்கை 12 முறை இடம் பெற்று உள்ளது, இதன் காரணமாக சுவிஸ் பொலிஸார்  சனிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் 12 கொள்ளை நிகழ்வுகள் ஆர்க (AARGAU) பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த காரணமாக அந்த பிராந்திய பொலிஸ், மத்திய சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு, போக்குவரத்து, மத்திய காவல்துறை, சமூக காவல்துறை ஆகியவை இணைந்து இந்த 
நடவடிக்கையில் ஈடுபட்டன.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 14 நவம்பர், 2022

சுவிஸ் வின்டத்தூர் நகரில் காவல்துறை அதிகாரிகளை தாக்கிய குற்றவாளி கைது

சுவிஸ்  சூரிச் வின்டத்தூர் நகரில்நவம்பர் 11 2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் பணியில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிற்பகல் 3:30 மணி அளவில் நகரின் மையப்பகுதியில் அத்துமீறி நுழைவது குறித்து வின்டர்தூர் நகர போலீஸாருக்கு எச்சரிக்கை
 செய்யப்பட்டது.
தளத்தில் போலீசார் 34 வயதான செர்பியரை சந்தித்தனர். அவர் வீட்டில் இருப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் செர்பியாவைச் சேர்ந்த அவரது 46 வயதான முன்னாள் காதலியின் குடியிருப்பில் 
தங்கியிருந்துள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் அந்த நபரை வெளியேறச் சொன்னபோது ​​​​அவர் துஷ்பிரயோகம் செய்து காவல்துறை அதிகாரிகளை உடல்
 ரீதியாக தாக்கினார்.
இதனால் குறித்த நபரை போலீசார் கைது செய்யவேண்டி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் போது இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு’ அந்த நபர் அரசு வழக்கறிஞரிடம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபருடன் பயணித்த காதலியும் கைது நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளார் போலீசார் தங்களது கடமையைச்செய்ய தடையாக இருந்ததாக குறிப்பிட்டே குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக  
செய்தியாளர் தெரிவித்தார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

புலம்பெயர் தமிழ் பெண் சுவிஸில் விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்தார்

புலம்பெயர் தமிழ் பெண்ணொருவர் சுவிஸ் நாட்டின் Helvetic Airways விமான நிறுவனத்தில் முதன் முறையாக விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்துள்ளார்
சுவிஸ் நாட்டில் பிறந்த செல்வராஜன் சுஸ்மீனா என்பவரே இவ்வாறு தனது இலக்கை அடைந்துள்ளார்.
மருத்துவத்துறையில் பயின்றுள்ள இவர், தான் உலகம் சுற்றி வரவேண்டும் என்ற ஆசையால் துறைசார் கல்வியை முடித்து இத்துறையைில் பணியாற்ற முன்வந்துள்ளார்.
பாடகியான இவர், அண்மையில் ஜேர்மன் நாட்டில் நடைபெற்ற Supper Star பாடல் போட்டி நிகழ்ச்சியிலும் பங்குகொண்டார்.
அத்துடன் புதிய ஆடைகளை உலகுக்கு காண்பித்தல் (Model) துறையிலும் தன்னை ஆர்வம் காட்டிவருகிறார்.
இவரின் பல்துறை சார் ஆற்றலை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் வாழ்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>






வெள்ளி, 3 ஜூன், 2022

சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு வெளியான அறிவிப்பு

உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் சிறப்பு அனுமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை சுவிட்சர்லாந்து அரசாங்கம் 
வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு வந்துள்ள உக்ரைன் அகதிகள் ஓராண்டுக்கு வாழவும், பணி செய்யவும் அனுமதிக்கும் வகையில் இந்த ‘S’ permit என்னும் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கால எல்லையானது சிலநேரங்களில் நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் அனுமதி தொடர்பிலான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், அதனால் அந்த அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும் சுவிஸ் புலம்பெயர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உக்ரைன் அகதிகள் மூன்று மாதங்களில் 15 நாட்களுக்குமேல் சுவிட்சர்லாந்திலிருந்து உக்ரைனுக்குச் சென்று தங்கினாலோ அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் வெளிநாடு ஒன்றில் தங்கினாலோ, அவர்களுடைய ‘S’ permit என்னும் அனுமதியை அவர்கள்
 இழக்க நேரிடும்.
எனினும் நிரந்தரமாக உக்ரைன் திரும்புவதற்கான ஆயத்தங்கள் செய்வதற்காக ஒருவர் சுவிட்சர்லாந்திலிருந்து உக்ரைன் சென்றாலோ அல்லது உடல் நலமில்லாமல் இருக்கும் ஒரு உறவினரைக் காணச் சென்றாலோ அவர்களுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

சுவிசில் தமிழால் சாதிக்கத் துடிக்கும் மாணவன் குவியும் வாழ்த்துக்கள்

தமிழர்களுக்கு ஒரு நாடு கிடைத்திருந்தால் அவர்களின் திறமையை உலகே பாராட்டியிருக்கும் என சுவிஸில் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அதீத பற்றுக்கொண்ட அர்ஜித் குமணன் எனும் மாணவன் கூறியுள்ளார்.சங்கீத பாடத்தில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றுக்கு கூட
அவர் தேர்வு செய்த பாடகராக, ஈழத்து காந்தக் குரலோன் எஸ். சி. சாந்தன் இருந்துள்ளார்.ஈழப்போராட்டத்திற்கு அவர் தனது இசையால் ஆற்றிய பணிகள், அவருக்கு கொடுக்கப்பட்ட சிறப்புப் பெயர்கள், இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சனைகள், இன்னும்
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற விடயம் உட்பட பல விடயங்களை தனது இசை (சபை) மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.சுவிஸ் சூரிக்கில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் இவர், தமிழ் மொழிசார்ந்த விடயங்களில் அதிக ஆர்வம் காட்டி 
வருவதாக தெரியவருகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 3 பிப்ரவரி, 2022

நீங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்களாஅதன் முக்கிய செய்தி

சில குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமைந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்…
1. வழக்கமான குடியுரிமை பெறும் முறை
உங்களிடம் நிரந்தர வாழிட உரிமம் C permit இல்லையென்றால், அல்லது தொடர்ந்து 10 ஆண்டுகள் நீங்கள் சுவிட்சர்லாந்தில் 
வாழவில்லை என்றால்…
8 முதல் 18 வயது வரை உள்ளவர்கள்சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலகட்டம் இரட்டிப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனாலும், ஒருவர் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும் என்கிறது மாகாண 
புலம்பெயர்தல் செயலகம்.
B or Ci உரிமத்துடன் வாழ்ந்த காலகட்டமும் அதில் அடங்கும்.
ஆனால், நீங்கள் ஒரு புகலிடக் கோரிக்கையாளராக மட்டுமே சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருந்தாலோ, அதாவது குறுகிய கால அனுமதிக்கான உரிமத்துடன் வாழ்ந்திருந்தாலோ (N permit or on a short stay L permit) உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இதுபோக, மாகாண அளவில், குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நீங்கள் ஒரு மாகாணத்தில் வாழ்ந்திருக்கவேண்டியதும் 
அவசியம்.
நீங்கள் சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழவில்லை என்றால்…
உள்ளூர் வாழ்க்கை முறை, உள்ளூர் மரபுகள் ஆகியவற்றுடன் நீங்கள் வாழும் இடம் குறித்து நீங்கள் நன்கு அறிந்துவைத்திருக்கவேண்டும்.
சரியான நேரத்திற்கு வரி செலுத்தாமை, கடன், குற்றப்பின்னணி ஆகியவையும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.
அரசு நிதி உதவி பெற்றீர்களா?
குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு மூன்று ஆண்டுகள் முன் வரை நீங்கள் அரசின் நிதி உதவி பெற்றிருந்தீர்களானால் உங்கள் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
நீங்கள் இதுவரை பெற்ற உதவித்தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தினால் உங்களுக்கு விதிவிலக்கு 
அளிக்கப்படும்.
2. எளிதாக்கப்பட்ட குடியுரிமை பெறும் முறை
இது சுவிஸ் குடிமகன் அல்லது குடிமகளை மணந்த அல்லது, வெளிநாட்டுப் பெற்றோருக்கு சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கான ஒரு வேகமான குடியுரிமை பெறும் முறையாகும்.
எளிதாக்கப்பட்ட என்று கூறப்பட்டாலும், அதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
வாழிடத் தேவைகள்
உங்கள் கணவர் அல்லது மனைவி சுவிஸ் குடிமகனாக அல்லது குடிமகளாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும். விண்ணப்பம் அளிப்பதற்கு
 முந்தைய ஆண்டு நீங்கள் சுவிட்சர்லாந்தில் செலவிட்டிருக்கவேண்டும். சுவிஸ் நாட்டவர் ஒருவரை திருமணம் செய்து அல்லது சுவிஸ் நாட்டவருடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது வாழ்ந்துவருபவராக இருக்கவேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு நீங்கள் உட்படாத பட்சத்தில், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மூன்றாம் தலைமுறை வெளிநாட்டவர்
நீங்கள் சுவிட்சர்லாந்தில் பிறந்து சுவிட்சர்லாந்திலேயே வாழ்ந்து வருவதால் குடியுரிமை பெறுதல் எளிதாக இருக்கும் என நீங்கள் எண்ணலாம். ஆனால், அப்படியல்ல.
உங்கள் தாத்தா அல்லது பாட்டி, சுவிட்சர்லாந்தில் பிறந்தவராக இருக்கவேண்டும், அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழும் உரிமை பெற்றவர்கள் என்பதை நிரூபித்தாகவேண்டும்.
உங்கள் தந்தை அல்லது தாய், நிரந்தர வாழிட உரிமம் பெற்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும். குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் கல்வி (compulsory schooling) கற்றிருக்கவேண்டும்.
நீங்கள் சுவிட்சர்லாந்தில் பிறந்தவராக இருக்கவேண்டும், நிரந்தர வாழிட உரிமம் பெற்றவராக இருக்கவேண்டும்.
நீங்கள் ஐந்து ஆண்டுகளாவது சுவிட்சர்லாந்தில் கல்வி கற்றவராக (compulsory schooling) இருக்கவேண்டும்.
நீங்கள் வெற்றிகரமாக சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்பவராக இருக்கவேண்டும்.
25ஆவது பிறந்தநாளுக்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருக்கவேண்டும்.
இந்த விதிகளில் எதற்காவது நீங்கள் உட்படவில்லை என்றால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 11 ஜனவரி, 2022

தனது அதீத திறமையால் சுவிசில் பலரால் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன்

சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறையில் முக்கியமானது Glacier Express எனும் மலைப்பாதை ரயில் சேவை. இந்த ரயில்சேவையின் விருந்தினர் உபசாரம் என்பது தனித்துவமானது.அந்தத் தனித்துவமான
 உணவுப் பரிமாற்றத்தில் தன் கைப்பக்குவம் காட்டும் தமிழனாக பல ஆண்டுகளாக நிலைத்து நிற்பவர் எமது கூர் மாநிலத்தின் கண்ணன் எல்லோராலும் அழைக்கப் படும்
 (Kailainathan Thiyagarajah)
இங்குள்ள உணவகத்தில் உணவு பரிமாற்றம் என்பது, ஒரு மருத்துவருக்கு நிகரான பொறுப்புணர்வோடும், அழகியற் கலைஞனுக்கே உரிய கற்பனைவளத்துடனும் மேற்கொள்ள வேண்டியது
.அந்த அரிய பணியை ஆற்றும் கலைஞனை, தமது ஆண்டு மலரில் கௌரவித்திருக்கிறது Glacier 
திசாலனின் 31ம் நாள் புண்ணியாகவசனம், நாமகரண
 கிரிகைகளில் எம்முடன் இருந்தவாறே தொலைபேசி வழியாக பணிக்கான ஆயத்தங்களை உதவியாளருக்குச் சொல்லிக் கொண்டிருந்த கண்ணனைக் 
காணும்போதே,
அவனது பணிமீதான காதலும், கடமை உணர்வும், உயர்வுகளைத் தரும் என்பது புரிந்தது. என்பதுடன் கண்ணனை பலரும் பாராட்டி 
வருகின்றனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>







Blogger இயக்குவது.