ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

சுவிசில் தமிழால் சாதிக்கத் துடிக்கும் மாணவன் குவியும் வாழ்த்துக்கள்

தமிழர்களுக்கு ஒரு நாடு கிடைத்திருந்தால் அவர்களின் திறமையை உலகே பாராட்டியிருக்கும் என சுவிஸில் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அதீத பற்றுக்கொண்ட அர்ஜித் குமணன் எனும் மாணவன் கூறியுள்ளார்.சங்கீத பாடத்தில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றுக்கு கூட
அவர் தேர்வு செய்த பாடகராக, ஈழத்து காந்தக் குரலோன் எஸ். சி. சாந்தன் இருந்துள்ளார்.ஈழப்போராட்டத்திற்கு அவர் தனது இசையால் ஆற்றிய பணிகள், அவருக்கு கொடுக்கப்பட்ட சிறப்புப் பெயர்கள், இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சனைகள், இன்னும்
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற விடயம் உட்பட பல விடயங்களை தனது இசை (சபை) மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.சுவிஸ் சூரிக்கில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் இவர், தமிழ் மொழிசார்ந்த விடயங்களில் அதிக ஆர்வம் காட்டி 
வருவதாக தெரியவருகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.