சனி, 16 ஜூன், 2018

இலங்கைத் தமிழ்ப் பெண் சுவிஸ்லாந்தில் தற்கொலை

சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில்தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமைசிறையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில், பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடுமையான காயம் காரணமாக பெண் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக அரசசட்டத்தரணி அறிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த 29 வயதான இந்த பெண், சுவிஸர்லாந்தில் புகலிடம் கோரிவிண்ணப்பத்திருந்த விண்ணப்பம் கடந்த ஆண்டு மே மாதம் நிராகரிக்கப்பட்டது.
டப்ளின் நடைமுறைப்படி மோல்டா இந்த பெண் குறித்து பொறுப்புக் கூற வேண்டும்.
இதனையடுத்து தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் சனிக்கிழமை பேர்ன் நகரில்கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கடந்த திங்கட்கிழமை பசல்பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.
உலகம்,பொதுவானவை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 4 ஜூன், 2018

ஒரே நாளில் சுவிஸில் இரண்டு முறை வாகன விபத்தை ஏற்படுத்திய இளைஞர்

சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இருமுறை வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Graubünden மாகாணத்தில் உள்ள Chur நகரத்திலேயே 27 வயது இளைஞர் ஒருவரால் குறித்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
வெள்ளியன்று தனது காரில் சென்ற குறித்த இளைஞர் சாலை ஓரத்தில் வாகனத்தை மோதவிட்டுள்ளார்.பின்னர் அங்கிருந்து தப்பியதாகவும் பொலிசாருக்கு தெரிய வந்தது. குறித்த விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதே நாள் இரவு குறித்த இளைஞர் சாலையின் எதிர் திசையில் வாகனத்தை செலுத்தி வந்தவர் திடீரென்று
 தடுப்பு வேலி மீது மோதியுள்ளார்.
இதில் அவரது வாகனமும் சேதமடைந்துள்ளது. மட்டுமின்றி விபத்து நடந்த உடன் அங்கிருந்து மாயாமாகியும் உள்ளார். கண்காணிப்பில் இருந்த பொலிசார் உடனடியாக அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவரது வாகன உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
24 மணி நேரத்தில் அவர் ஏற்படுத்திய இழப்பிற்கு அவரிடம் இருந்தே அபராதம் வசூலிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அபராதம் பல ஆயிரம் பிராங்க் என இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விசாரணையின் ஒருபகுதியாக அவரிடம் இருந்து சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளையும் பொலிசார் பெற்றுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.