செவ்வாய், 12 நவம்பர், 2019

ஓடுதளத்தில் இருந்து விலகி சுவிட்சர்லாந்தில் பேருந்து ஒன்றில் மோதியது


சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதாக
 தகவல் வெளியானது.
மேலும், குறித்த விமானமானது ஓடுதளத்தில் இருந்து விலகி பேருந்து ஒன்றில் மோதி நின்றதாகவும் கூறப்பட்டது.
இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்ததாகவும், இருவர் மரணமடைந்தனர் என்றும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் 
தகவல் வெளியானது.
ஆனால் இச்சம்பவமானது பெர்ன் விமான நிலையத்தில் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விளக்கப்பட்டதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த அவசரகால மீட்பு பயிற்சியில் சுமார் 160 சிறப்பு படையினரும் 40 பொதுமக்களும் 15 பல்துறை நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி பெர்ன் மண்டல பொலிசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இதில் பங்கேற்றுள்ளன. ஐரோப்பிய விமான பாதுகாப்பு செயலாண்மை EASA இந்த பயிற்சியை முன்னெடுத்து
 நடத்தியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.