செவ்வாய், 24 நவம்பர், 2020

கொவிட்-19 தொற்றினால் சுவிசில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் மொத்தமாக மூன்று இலட்சத்து 352பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் இதுவரை நான்காயிரத்து 222பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 751பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166பேர் 
உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 89ஆயிரத்து 430பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 522பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து 700பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு
 திரும்பியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.