சனி, 17 செப்டம்பர், 2016

உலகிலேயே சுவிட்சர்லாந்து பசுமையான நகரத்தை கொண்டுள்ள நாடு!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரம் உலகிலேயே பசுமையான நகரங்களில் முதல் இடத்தை பிடித்து அந்நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Arcadis என்ற நிறுவனம் உலகளவில் பசுமையான 100 நகரங்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், சுவிஸில் உள்ள சூரிச் நகர் இந்த 100 நகரங்களில் முதல் இடத்தை 
பிடித்துள்ளது.
உலகளவில் பசுமையாக திகழும் முதல் 10 நகரங்களின் பட்டியல்:
சூரிச் (சுவிட்சர்லாந்து)
சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
ஸ்டாக்ஹோம் (சுவீடன்)
வியன்னா (ஆஸ்திரியா)
லண்டன் (பிரித்தானியா)
பிராங்க்பர்ட் (ஜேர்மனி)
சியோல் (தென் கொரியா)
ஹேம்பர்க் (ஜேர்மனி)
பிரேக் (செக் குடியரசு)
முனிச் (ஜேர்மனி)
இதே பட்டியலில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் 15-வது இடத்திலும், கனடாவில் உள்ள வான்கூவர் நகர் 23-வது இடத்திலும், அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகர் 26-வது இடத்திலும் 
உள்ளன.
இதே பட்டியலில் இந்தியாவில் உள்ள சென்னை 89-வது இடம் பெற்றுள்ளது. எனினும், இந்த பசுமையான 100 நகரங்களின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 7 செப்டம்பர், 2016

கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மூவர் சுவிஸில் கைது!

சுவிஸில் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Bursins மாவட்டத்தில் உள்ள பல வீடுகள் புகுந்து திருடி வந்த பிரான்ஸ், மொராக்கோ மற்றும் அல்ஜீரிய நாட்டை சேர்ந்த மூன்று பேர் பிடிப்பட்டுள்ளனர்.
Denes பகுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான இருந்த வாகனம் குறித்து அப்பகுதி மக்கள் தகவல் 
கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்து வந்த காரை மடக்கி, பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் Denes பகுதியில் கொள்ளையடித்த பொருட்கள் சிக்கியுள்ளது.
இதை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், அதில் வந்த மூவரும் பிரான்ஸ், மொராக்கோ மற்றும் அல்ஜீரிய நாட்டினர் என
 தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் நடந்த பல திருட்டு சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யபட்ட மூவரிடமும் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.