புதன், 7 செப்டம்பர், 2016

கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மூவர் சுவிஸில் கைது!

சுவிஸில் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Bursins மாவட்டத்தில் உள்ள பல வீடுகள் புகுந்து திருடி வந்த பிரான்ஸ், மொராக்கோ மற்றும் அல்ஜீரிய நாட்டை சேர்ந்த மூன்று பேர் பிடிப்பட்டுள்ளனர்.
Denes பகுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான இருந்த வாகனம் குறித்து அப்பகுதி மக்கள் தகவல் 
கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்து வந்த காரை மடக்கி, பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் Denes பகுதியில் கொள்ளையடித்த பொருட்கள் சிக்கியுள்ளது.
இதை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், அதில் வந்த மூவரும் பிரான்ஸ், மொராக்கோ மற்றும் அல்ஜீரிய நாட்டினர் என
 தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் நடந்த பல திருட்டு சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யபட்ட மூவரிடமும் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.