செவ்வாய், 31 மே, 2016

சுவிசில் உலகிலேயே நீளமான சுரங்க வழி ரயில் பாதை திறப்பு விழா

சுவிஸ்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த எதிர்வரும் யூன் 1ம் திகதி திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Carl Eduard Gruner என்ற பெருமைக்குரிய பொறியாளர் இந்த சுரங்க வழி ரயில் பாதை அமைப்பது தொடர்பாக திட்டங்களை வெளியிட்டார்.
இந்த ஆண்டில் தொடங்கிய திட்டப்பணிகள் 69 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது
Gotthard Base Tunnel என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி ரயில் பாதையின் நீளம் 57 கிலோ மீற்றர்கள் ஆகும்.
இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள Seikan என்ற சுரங்க வழி ரயில் பாதை(53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி ரயில் பாதையாக இருந்தது.
தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகியுள்ள இந்த சுரங்க வழி ரயில் பாதை அந்த பெருமைக்குரிய பெயரை பெற்றுள்ளது.
2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை ஐரோப்பிய நாடுகளில் ஒரு மிக்கியமான பாதையாக கருதப்படுகிறது.
சுவிஸின் Uri மாகாணத்தில் உள்ள Erstfeld என்ற பகுதியில் தொடங்கும் இந்த சுரங்க வழி ரயில் பாதை, Ticino மாகாணத்தில் உள்ள Bodio என்ற பகுதியில் நிறைவடைகிறது.
யூன் 1ம் திகதி நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலி பிரதமரான மேட்டோ ரென்ஸி ஆகிய தலைவர்களுடன் சுவிஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் பங்கேற்க உள்ளனர்.
யூன் 1ம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

வெள்ளி, 13 மே, 2016

திடீர் மழையினால் சுவிஸ் சூரிச்சில் போக்குவரத்து பெரும் பாதிப்பு ?

இன்று சுவிஸ் சூரிச்சில் திடீர் பெருமழையால் லங்ராச  வீதிகளில்பெரும்வெள்ளம் ஏற்பட்டதனால்
பல  வீதிகள் வெள்ளக்காடாக உள்ளது இதனால் பல வீதிகள்வாகன போக்குவரத்திற்கு 
தடை   செய்யப்பட்டது இதனல் மக்கள் பெரும்சிரமத்துக்கு உள்ளாயினர்என்பது 
இங்கு குறிப்பிட தக்கது   நிழல படங்கள்  காணொளி    இணைப்பு   
சுவிஸ் நிருபர். ரி.. எல் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>










திங்கள், 9 மே, 2016

ஒரே வீட்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் 4 பேர் கொடூரக் கொலை

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரே வீட்டில் 4 பேர் கொடூரக் கொலை
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வீடு ஒன்றில் 4 பேர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீட்டை ஏலம் விட உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 48 வயதான தாய், அவருடைய 13 மற்றும் 19 வயதான இரண்டு மகன்கள் மற்றும் மூத்த மகனின் காதலியான 21 வயதான இளம்பெண் ஆகிய 4 பேரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் தந்தை வெளியே சென்றுருந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் 4 பேரின் உடல்களில் கேபில் கம்பிகளை சுற்றி கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளனர்.
பின்னர், இவர்கள் அனைவரும் விபத்தால் இறந்தது போல் வீட்டிற்கு தீயை வைத்துவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர்.
கொலையை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி பொலிசாருக்கு இதுவரை எந்த தகவலும் தெரியவரவில்லை.
இந்நிலையில், மரணத்திலிருந்து தப்பிய வீட்டு உரிமையாளர் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, ’எனது இரண்டு மகன்களை இழந்துவிட்டு இதே வீட்டில் என்னால் வசிக்க முடியவில்லை. மனைவி, மகன்களின் நினைவுகள் எனக்கு அன்றாடம் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, மோசமான நினைவுகளை சுமந்துள்ள இந்த வீட்டில் இனிமேல் வசிக்க விரும்பவில்லை என்றும், இதனை உடனடியாக ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் தான் அவர் வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்ததாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
‘என்னிடம் போதுமான பணம் இருக்கிறது. பணத்திற்காக வீட்டை நான் விற்பனை செய்யவில்லை’ என அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 2 மே, 2016

கொட்டும் மழையிலும் சுவிஸ் நாட்டில் நடைபெற்ற மே தினம்

சுவிஸ் – சூரிச் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகளாவிய ரீதியில் அதனை மக்கள் வெகு விமர்சையாக முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், சுவிஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடனும், பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறும் தமது ஊர்வலத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
கொட்டும் மழையிலும் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.