ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகர் ஈழமாக மாறியது

பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர் 
சுவிஸ்  பேர்ன் பெருநகர் தமிழ்  ஈழமாக காட்சி அளித்தது
பேர்னில் சுவிற்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க திருக்கோபுரத்தில் நால்வர் பெருமக்கள் எழுந்துநிற்க
 அருளாட்சி புரிகிறான்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகரில் சைவமும் தமிழும் சிறந்து விளங்க ஞானலிங்கேச்சுரர் பெருங்கருணை புரிந்து ஐரோப்பாத்திடலில் நாளும் தமிழ் ஒலிக்க அருள்செய்துளான்பொற்றடை ஆண்டுத் திருவிழா பெருவிழாவாக 17. 08. 2017 வியாழக்கிழமை முதல் 29. 08. 2017 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று வருகிறது.
26. 08. 2017 சனிக்கிழமை தேர்த்திருவிழா பெரும் சைவப்பெருவிழாவாக நடைபெற்றது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கூட்டம் பெரும்திரளாக ஒன்றுகூடிய பெருநிகழ்வாக நடைபெற்றது.
பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் (Haus der Religionen) பிரதிநிதிகள், பல்சமயத் தலைவர்கள் ஒன்றுகூடி வருகை அளித்து, ஞானலிங்கேச்சுர் தேர்த்திருவிழா சிறக்க தம் வாழ்த்துக்களை நவின்று சென்றனர். றெகுலா அவர்கள் தனது உரையில் இக்கோவில் அடிக்கல் நாட்டியது முதல் இன்று விழாக்காணும் 
காலம்வரை நான் தமிழ்மக்களையும் அவர்களது பக்தியையும் அறிவேன். நேரில் கண்டு வியந்திருந்கிறேன். நீங்கள் சைவநெறிக்கூடத்தின் திருக்கோவில் ஊடாக பல்சமயத்தில் உறுப்பினாராக விளங்குவதும் எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தினார்.
பேர்ன் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தில் இருந்து திருநிறை. அன்ரன் மற்றும் திருநிறை வின்சன் அவர்கள் வருகையளித்து நிகழ்வைச் சிறப்பித்தனர். சைவநெறிக்கூடத்தின் கொள்கை சமயம் தாண்டி தமிழர்கள் நாம் ஒரு வலிமையான இனமாக விளங்கவேண்டும் 
என்பதாகும்.
வருகை அளித்த விருந்தினர்கள் யாவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திருமதி. றெகுலா மேடர் மற்றும் பழைய தலைவி காலநிதி. திருமதி கேர்டா கவுக் ஆகியோர் 
வருகையளித்திருந்தனர்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கழகத்தின் அதிகாரி திரு. பெல்லெர் அவர்களும் வருகை அளித்து விழாவைச் சிறப்பித்துப் பேசினார். தமிழர்கள் தமது பாரம்பரியத்தைப் பேணுவதற்கு தனக்கு வாய்ப்புக்கிடைப்பது மகிழ்ச்சி எனத் தன் 
உரையில் தெரிவித்தார்.

பலபத்து அடியார்கள்கூடி வேல் குத்திக் காவடி எடுத்தனர். சிறுவர்கள், பாலர்கள், இளவயதினர், காவடி எடுத்து ஆடிவந்த காட்சி இது சுவிசா ஈழமா என வியக்க வைத்தது
பல பெண் அடியார்கள் தீச்சட்டி சுமந்து வந்து தம் வேண்டுதலை நிறைவுசெய்தனர்.
இந்த ஆண்டும் மூன்று தேர்கள் திருவலம் வந்தன. முதற்தேரில் கரிமுகக்கடவுள் பிள்ளையாரும், முருக்கப்பெருமானும், திருமால் எழுந்திருக்க, ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் நடுநாயகமாக எழுந்தகாட்சி கையிலை இங்கு வந்ததாக 
அமைந்தது.
உலகப்பொது மறை அளித்த திருவள்ளுவர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இளம் சிறார்கள் திருக்குறள் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருவள்ளுவரும் சிறப்புத் தேரில் எழுந்து உலா வந்தது, சைவமும் தமிழும் இரண்டல்ல ஒன்றென விளக்கியதாக அமைந்தது.
தமிழ் உலகின் முதன்மைத் தமிழ் ஊடகங்கள் செய்தியினை நேரடி அஞ்சலும் பதிவு செய்தன. சைவநெறிக்கூடத்தின் சார்ப்பில் யாவருக்கும் நன்றி நவிலப்பட்டது. மேலும் தமழ் ஊடகங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்களும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால்
 பகரப்பட்டது.
ஐரோப்பாத்திடல் முழுவதும் தமிழ் மணம் நிறைந்தது, பல தமிழ் அங்காடிகள் திருவிழாச் சூழலை மனதில் பதிய வைத்தது.
கோவில்கள் வெறும் சடங்குகளுடன் நின்றுவிடாமல் தம் பணியை இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு காக்கும் கருவிகாளாக விளங்கவேண்டும் எனும் சைவநெறிக்கூடத்தின் நோக்கம் ஒழுகுவதாக நிகழ்வுகள்
 அமைந்தன.
காலை 06.00 மணிக்கு தொடங்கிய வழிபாடுகளைத் தொடர்ந்து 12.30 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு, 13.30 மணிக்கு அருளமுது அறுசுவை விருந்தாக அளிக்கப்பட்டது. தேர் முன்றலில் முத்தமிழ் நிகழ்வுகள் 
நடைபெற்றன.
தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டால் மட்டுமே வாழ்வு உண்டெனத் தேர்த்திருவிழா அடையாளமாக விளக்குவதாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் விளக்கினார்.
ஊர்கூடி இழுத்தால் வாசல் வந்து தேர் சேரும், இன்று நாம் திருவாசல் வந்து அடைந்துள்ளோம், ஆனால் இன்னும் வாசல் வந்து சேரவேண்டிய தேர்கள் பல உண்டு, நாம் தமிழர்கள் ஒன்றாக இத்தேரை இழுத்து திருவாசல் சேர்க்க வேண்டும் என விளக்கினார்.
ஒருநாள் தமிழர்கள் தேர் திருவாசல் வரும் எனும் நம்பிக்கையுடன் ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் விழா நிறைவுற்றது.00:50 28.08.2017ஈழமாக மாறிய சுவிஸ்!!!!!”
பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர் பேர்னில் சுவிற்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க திருக்கோபுரத்தில் நால்வர் பெருமக்கள் எழுந்துநிற்க 
அருளாட்சி புரிகிறான்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகரில் சைவமும் தமிழும் சிறந்து விளங்க ஞானலிங்கேச்சுரர் பெருங்கருணை புரிந்து ஐரோப்பாத்திடலில் நாளும் தமிழ் ஒலிக்க அருள்செய்துளான்பொற்றடை ஆண்டுத் திருவிழா பெருவிழாவாக 17. 08. 2017 வியாழக்கிழமை முதல் 29. 08. 2017 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று வருகிறது.
26. 08. 2017 சனிக்கிழமை தேர்த்திருவிழா பெரும் சைவப்பெருவிழாவாக நடைபெற்றது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கூட்டம் பெரும்திரளாக ஒன்றுகூடிய பெருநிகழ்வாக நடைபெற்றது.
பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் (Haus der Religionen) பிரதிநிதிகள், பல்சமயத் தலைவர்கள் ஒன்றுகூடி வருகை அளித்து, ஞானலிங்கேச்சுர் தேர்த்திருவிழா சிறக்க தம் வாழ்த்துக்களை நவின்று சென்றனர். றெகுலா அவர்கள் தனது 
உரையில் இக்கோவில் அடிக்கல் நாட்டியது முதல் இன்று விழாக்காணும் காலம்வரை நான் தமிழ்மக்களையும் அவர்களது பக்தியையும் அறிவேன். நேரில் கண்டு வியந்திருந்கிறேன். நீங்கள் சைவநெறிக்கூடத்தின் திருக்கோவில் ஊடாக பல்சமயத்தில் உறுப்பினாராக விளங்குவதும் எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தினார்.
பேர்ன் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தில் இருந்து திருநிறை. அன்ரன் மற்றும் திருநிறை வின்சன் அவர்கள் வருகையளித்து நிகழ்வைச் சிறப்பித்தனர். சைவநெறிக்கூடத்தின் கொள்கை சமயம் தாண்டி தமிழர்கள் நாம் ஒரு வலிமையான இனமாக விளங்கவேண்டும் 
என்பதாகும்.
வருகை அளித்த விருந்தினர்கள் யாவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திருமதி. றெகுலா மேடர் மற்றும் பழைய தலைவி காலநிதி. திருமதி கேர்டா கவுக் ஆகியோர் வருகையளித்திருந்தனர்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கழகத்தின் அதிகாரி திரு. பெல்லெர் அவர்களும் வருகை அளித்து விழாவைச் சிறப்பித்துப் பேசினார். தமிழர்கள் தமது பாரம்பரியத்தைப் பேணுவதற்கு தனக்கு வாய்ப்புக்கிடைப்பது மகிழ்ச்சி எனத் தன் உரையில் தெரிவித்தார்.
பலபத்து அடியார்கள்கூடி வேல் குத்திக் காவடி எடுத்தனர். சிறுவர்கள், பாலர்கள், இளவயதினர், காவடி எடுத்து ஆடிவந்த காட்சி இது சுவிசா ஈழமா என வியக்க வைத்தது
பல பெண் அடியார்கள் தீச்சட்டி சுமந்து வந்து தம் 
வேண்டுதலை நிறைவுசெய்தனர்.
இந்த ஆண்டும் மூன்று தேர்கள் திருவலம் வந்தன. முதற்தேரில் கரிமுகக்கடவுள் பிள்ளையாரும், முருக்கப்பெருமானும், திருமால் எழுந்திருக்க, ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் நடுநாயகமாக எழுந்தகாட்சி கையிலை இங்கு 
வந்ததாக அமைந்தது.
உலகப்பொது மறை அளித்த திருவள்ளுவர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இளம் சிறார்கள் திருக்குறள் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருவள்ளுவரும் சிறப்புத் தேரில் எழுந்து உலா வந்தது, சைவமும் தமிழும் இரண்டல்ல ஒன்றென 
விளக்கியதாக அமைந்தது.
தமிழ் உலகின் முதன்மைத் தமிழ் ஊடகங்கள் செய்தியினை நேரடி அஞ்சலும் பதிவு செய்தன. சைவநெறிக்கூடத்தின் சார்ப்பில் யாவருக்கும் நன்றி நவிலப்பட்டது. மேலும் தமழ் ஊடகங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்களும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால் பகரப்பட்டது.
ஐரோப்பாத்திடல் முழுவதும் தமிழ் மணம் நிறைந்தது, பல தமிழ் அங்காடிகள் திருவிழாச் சூழலை மனதில் பதிய வைத்தது.
கோவில்கள் வெறும் சடங்குகளுடன் நின்றுவிடாமல் தம் பணியை இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு காக்கும் கருவிகாளாக விளங்கவேண்டும் எனும் சைவநெறிக்கூடத்தின் நோக்கம் ஒழுகுவதாக 
 நிகழ்வுகள் அமைந்தன.
காலை 06.00 மணிக்கு தொடங்கிய வழிபாடுகளைத் தொடர்ந்து 12.30 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு, 13.30 மணிக்கு அருளமுது அறுசுவை விருந்தாக அளிக்கப்பட்டது. தேர் முன்றலில் முத்தமிழ் நிகழ்வுகள்
 நடைபெற்றன.
தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டால் மட்டுமே வாழ்வு உண்டெனத் தேர்த்திருவிழா அடையாளமாக விளக்குவதாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் விளக்கினார்.
ஊர்கூடி இழுத்தால்  தேர்  வாசல் வந்து  சேரும், இன்று நாம் திருவாசல் வந்து அடைந்துள்ளோம், ஆனால் இன்னும் வாசல் வந்து சேரவேண்டிய தேர்கள் பல உண்டு, நாம் தமிழர்கள் ஒன்றாக இத்தேரை இழுத்து திருவாசல் சேர்க்க வேண்டும் என விளக்கினார்.
ஒருநாள் தமிழர்கள் தேர் திருவாசல் வரும் எனும் நம்பிக்கையுடன் ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் விழா 
நிறைவுற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம்சய்தி >>>






புதன், 9 ஆகஸ்ட், 2017

தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸில் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்தி படுகொலை

சுவிஸ் நாட்டில் St-Gall மாநிலத்தில் வசித்த 22 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது St-Gall மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வெள்ளிகிழமை (04-08-2017) அன்று, St-Gall மாநிலத்தில் சன நடமாட்டம் உள்ள நகர் பகுதியில் (St gallen City, Market platz ) ஒரு உணவகத்தின் மத்தியில் அமைந்துள்ள தோட்டப் பகுதியில் இக் கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.
கழுத்தில் ஆழமாக கத்திக்குத்து நடந்ததால், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டு, தீவிர சிகிச்சையின் பலனளிக்காததால் நேற்று 08-08-2017 செய்வாய்கிழமை அன்று மரணமடைந்துள்ளார்.
கத்தியால் குத்தியவர் 42வயதுடைய சுவிஸ் பிரஜை எனவும், அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாகவும் செங்களான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது இதுவரை தெரியவில்லை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சுவிஸ் வாழ் குடிமக்களுக்கு இப்படி ஒரு நிலையா?

சுவிட்சர்லாந்து நாட்டில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அதற்கான மருத்துவ பரிசோதனையை தவிர்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சுவிஸ் சுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்று அரசின் அனுமதியுடன் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்காக சரியான மருத்துவ பரிசோதனையை மக்கள் மேற்கொள்கின்றனரா என கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆய்வின் முடிவில், போதிய சேமிப்பும், வருமானமும் இல்லாத காரணத்தினாலும், மருத்துவ பரிசோதனைக்கு அதிகளவில் கட்டணம் செலுத்த வேண்டிய காரணத்தினாலும் பலரும் பரிசோதனையை தவிர்த்து வருவது தெரியவந்துள்ளது.
அதாவது, 11 நபர்களில் ஒருவர் மருத்துவ பரிசோதனையை தவிர்த்து வருவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு நடத்தப்பட்டவர்களில் சுமார் 25.5 சதவிகித மக்கள் ‘மருத்துவ கட்டணம் அதிகமாக உள்ளதால் பரிசோதனையை தவிர்த்து விட்டதாக’ தெரிவித்துள்ளனர். இதே எண்ணிக்கை 2010-ம் ஆண்டு 10 சதவிகிதமாக இருந்தது.
அதிகரித்துள்ள மருத்துவ கட்டணங்களுக்கு அதிகளவில் சுவிஸில் உள்ள வெளிநாட்டினர்களும், குறைந்தளவு ஊதியம் பெருபவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 2 ஆகஸ்ட், 2017

சுவிஸ்சில்வாழும் இலங்கையர்களுக்கு இலங்கை அரசின் முக்கிய அறிவிப்பு!

சுவிசில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசாங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
அதன்படி சுவிசில் உள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை
 விடுத்துள்ளார்.
இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் Heinz Walker – Nederkoorn இன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர்
 இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சுவிசில் 50,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு 
வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Blogger இயக்குவது.