புதன், 9 ஆகஸ்ட், 2017

தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸில் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்தி படுகொலை

சுவிஸ் நாட்டில் St-Gall மாநிலத்தில் வசித்த 22 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது St-Gall மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வெள்ளிகிழமை (04-08-2017) அன்று, St-Gall மாநிலத்தில் சன நடமாட்டம் உள்ள நகர் பகுதியில் (St gallen City, Market platz ) ஒரு உணவகத்தின் மத்தியில் அமைந்துள்ள தோட்டப் பகுதியில் இக் கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.
கழுத்தில் ஆழமாக கத்திக்குத்து நடந்ததால், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டு, தீவிர சிகிச்சையின் பலனளிக்காததால் நேற்று 08-08-2017 செய்வாய்கிழமை அன்று மரணமடைந்துள்ளார்.
கத்தியால் குத்தியவர் 42வயதுடைய சுவிஸ் பிரஜை எனவும், அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாகவும் செங்களான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது இதுவரை தெரியவில்லை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.