புதன், 16 நவம்பர், 2016

சுவிஸ்சில் இருந்து ஒன்பது பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த 9பேர் மீளவும்   இங்கைக்கு  நாடுகடத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு நாடு கடத்தப்பட்டஇலங்கையர்கள் விபரம் தற்போது
 வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவகுமார் சிந்துஜன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பிரதஜா நிரோசன், புங்குடுதீவு ரஜீவன், லிந்துதாஸ் இனுவில், பாலசுதன் யாழ்ப்பானம், காண்டீபன் பருத்தித்துறை, சிவநேசன் பருத்தித்துறை போன்ற இடங்களைச்
 சேர்ந்தவர்கள்.
குறித்த 9 பேரும் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளவர்கள் எனவும் இவர்கள் அந்தநாட்டு சட்ட திட்டத்தை மீறி குடியேறிய நிலையில் இவர்கள் நாட்டை விட்டு திருப்பி நாடு கடத்தப்பட்டு ள்ளனர்
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று (புதன்கிழமை)  பிற்பகல் 1.05 மணி விசேட விமான மூலம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களை விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை செய்து வருவதாக கட்டு நாயக்க பொலிசார் 
தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 9 நவம்பர், 2016

சுவிஸ் உடல் எடை அதிகரிப்பால் தவிக்கும் ஓர்சிலமக்கள் ஆய்வில் தகவல்!

சுவிஸ் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 2,000 இளைஞர்களை இது தொடர்பாக ஆய்வு செய்ததில் 44 விழுக்காடு பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பெண்களை விடவும் ஆண்களே இருமடங்கு அதிக எண்ணிக்கையில் உடல் எடை அதிகரிப்பால் தவித்து வருவதாக
 கூறப்படுகிறது.
மட்டுமின்றி மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள 5 பங்கு பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட 13 விழுக்காட்டினர் இந்த சிக்கலில் இருந்து மீண்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள உணவில் 3 முதல் 4 பங்கு பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட நான்கில் ஒரு பங்கு மக்கள் அதிக உடல் எடை பாதிப்பில் இருந்து மீள்வார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜேர்மன் மற்றும் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகம் கொண்ட பகுதிகளில் 13-14 விழுக்காடு மக்கள் பழ வகையில் ஒருபகுதிக்கும் குறைவாகவும் காய்கறி உணவுகளையும் எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை இலத்தீன் மொழி பேசும் மக்கள் அதிகம்கொண்ட பகுதியில் 22 விழுக்காடாக
 அதிகரித்துள்ளது.
லாசான்னே பல்கலைக்கழகம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை ஒன்றிணைந்து குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 8 நவம்பர், 2016

பாலியல் துஷ்பிரயோகம் செய்து மாடுகளை கொன்ற காமகொடூரன்!

சுவிட்சர்லாந்தில் இளைஞன் ஒருவன் இரண்டு மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Fribourg மாகாணத்திலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மாடுகளை கொன்ற குற்றத்திற்காக பொலிசார் 20 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று மாலை மாட்டு பண்ணையில் நுழைந்த இளைஞன் இரண்டு மாடுகளை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோம் செய்துள்ளான்.
இதைக்கண்ட உரிமையாளர் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றவாளியை விரட்டி பிடித்துள்ளனர்.
இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாடுகளும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அவனுக்கு மனநலம் குறித்த சோதனை நடத்தப்படவுள்ளது.
ஏனெனில் 14 வயதில் சகோதரனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சிறார் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவன் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 6 நவம்பர், 2016

உங்களுக்கு சுவிஸ் விசா வேண்டுமா? இந்த வழிமுறைகளை' பின்பற்றுங்கள்?

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது.
சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும்
 நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of Invitation) அல்லது ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) ஆகிய இரண்டு கடிதங்களில் ஒன்றை உங்கள் தாய்நாட்டில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு கொடுக்க வேண்டும்.
அழைப்பு கடிதம்
சுவிஸில் உள்ள அந்த நிறுவனம்/தனிநபர் உங்களை அதிகாரப்பூர்வமாக அழைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
மேலும், அந்த அழைப்பு கடிதத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் சுவிஸில் தங்குகிறீர்கள்? என்ன நோக்கத்திற்காக 
தங்குகிறீர்கள்?
மேலும், எத்தனை முறை சுவிஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறீர்கள்? என்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.
அதேபோல், இந்த கடிதத்தில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரை தொடர்புக்கொள்ளும் முகவரியும் உங்களுடைய முகவரியும் இடம்பெற வேண்டும்.
உதாரணத்திற்கு, குடும்ப பெயர், முதல் பெயர், பிறந்த திகதி, குடியுரிமை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும்.
மேலும், உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் கையெழுத்து மற்றும் அதன் திகதியும் இடம்பெற வேண்டும்.
முக்கியமாக, இந்த அழைப்பு கடிதம் சுவிஸ் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான நிதி வசதிகள் உங்களிடம் இருப்பதை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் நிரூபிக்க வேண்டும்.
இதனை நீங்கள் வாங்கும் ஊதிய அறிக்கை அல்லது வங்கி இருப்பு அறிக்கை மூலம் அதிகாரிகளிடம் நிரூபிக்கலாம்.
இவ்வாறு இல்லாமல், உங்களுடைய அனைத்து செலவுகளையும் உங்களை சுவிஸ் நாட்டில் எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் ஏற்றுக்கொண்டால், அதனை அழைப்பு கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.
நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்
சுவிஸ் நாட்டிற்கு செல்ல உங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தேகம் அடைந்தால், அவர்களிடம் நீங்கள் ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) அளிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
இந்த கடிதமான அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும். அதாவது, உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள உள்ளூர் அதிகாரி அல்லது மாகாண குடியமர்வு துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்றுருக்க வேண்டும்.
இந்த கடிதத்தில் கையெழுத்து போடுவதன் மூலம் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள குடியமர்வு துறைக்கு 30,000 பிராங்க் வரை செலுத்த நேரிடும்.
காப்பீட்டு ஆவணம்
சில நேரங்களில் உங்களுடைய அல்லது உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் காப்பீட்டு ஆவணத்தை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த காப்பீட்டு கடிதமானது 30,000 பிராங்க் வரையிலான மருத்துவ செலவினங்களை ஏற்றுக்கொள்ளும்.
அதாவது, சுவிஸில் நீங்கள் தங்கியிருக்கும்போது உங்களுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அல்லது சுவிஸில் மருத்துவம் பார்க்கவும் மற்றும் விபத்து உள்ளிட்ட பிற சூழ்நிலைகளில் உங்களுடைய செலவினங்களை இந்த காப்பீடு ஏற்றுக்கொள்ளும்.
மேலே கூறிய இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், விசா பெறுவதற்கான அடுத்த கட்டத்தை 
அடைய முடியும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





Blogger இயக்குவது.