புதன், 9 நவம்பர், 2016

சுவிஸ் உடல் எடை அதிகரிப்பால் தவிக்கும் ஓர்சிலமக்கள் ஆய்வில் தகவல்!

சுவிஸ் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 2,000 இளைஞர்களை இது தொடர்பாக ஆய்வு செய்ததில் 44 விழுக்காடு பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பெண்களை விடவும் ஆண்களே இருமடங்கு அதிக எண்ணிக்கையில் உடல் எடை அதிகரிப்பால் தவித்து வருவதாக
 கூறப்படுகிறது.
மட்டுமின்றி மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள 5 பங்கு பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட 13 விழுக்காட்டினர் இந்த சிக்கலில் இருந்து மீண்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள உணவில் 3 முதல் 4 பங்கு பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட நான்கில் ஒரு பங்கு மக்கள் அதிக உடல் எடை பாதிப்பில் இருந்து மீள்வார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜேர்மன் மற்றும் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகம் கொண்ட பகுதிகளில் 13-14 விழுக்காடு மக்கள் பழ வகையில் ஒருபகுதிக்கும் குறைவாகவும் காய்கறி உணவுகளையும் எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை இலத்தீன் மொழி பேசும் மக்கள் அதிகம்கொண்ட பகுதியில் 22 விழுக்காடாக
 அதிகரித்துள்ளது.
லாசான்னே பல்கலைக்கழகம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை ஒன்றிணைந்து குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.