வெள்ளி, 17 மே, 2013

சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்


சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.
இவர்களில் ஒரு பிரெஞ்சுக்காரர், ஒரு அல்பேனியர், ஒரு போஸ்னியர், ஒரு கொசோவர் மற்றும் ஒரு செர்பியர் ஆவார்கள்.
மெர் சிறைக்கு வெளியே காலை 10.20க்கு ஏணி வைத்து ஏறிய முகமூடி அணிந்த ஒருவன், ஒரு பையைச் சிறை வளாகத்துக்குள் விட்டெறிந்துள்ளான். அந்த ஐவரும், அப்பையில் இருந்த ஆயுதத்தால் கைதிகளையும், காவலரையும் மிரட்டியுள்ளனர்.
மேலும் குறடு ஒன்றின் உதவியுடன் வேலியில் துளையிட்டு அதனைப் பிரித்து, சிறைச்சாலையின் சுவரைத் தாண்டி அங்கு சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஏணி வழியே கீழே இறங்கித் தப்பித்து விட்டனர்.
இதற்கு வெறும் ஐந்து நிமிடங்களே ஆயிற்று. மேலும் சிறைக்கு வெளியே இவர்களை அழைத்துச் செல்ல இரண்டு வண்டிகள் தயாராக இருந்தன.
இந்தக் குழுவில் இருந்த பிரெஞ்சுக்காரர்(47) திருட்டு, போதைப் பொருள் கடத்தல், ஆயுதப் பயன்பாடு போன்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்துள்ளார்.
போஸ்னியனும்(31), கொசோவனும்(22) திருட்டு வழக்கிலும், அல்பேனியன்(34) போதைப் பொருள் கடத்தல் வழக்கிலும் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளனர்.
தற்பொழுது இவர்களை சர்வதேச அளவில் தேடப்படும் மனிதர்களாக அறிவித்துள்ளனர்

கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க?


மக்களுக்கு கருணைக்கொலைக்கு தேவையான மருத்துவ உதவிகளைப் பெற சுவிஸ் அரசு, தனது விதிமுறைகளைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆல்டா கிராஸ்(Alda Gross)(82) என்ற மூதாட்டி தனிமை தனக்கு சலிப்பூட்டுவதாகக் கூறி தன்னைக் கொலைச் செய்து விடும்படி மருத்துவ உதவி கோரியிருந்தார். ஆனால் அவருக்கு நாள்பட்ட நோய் எதுவும் இல்லாததால் அவரது கோரிக்கையை மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
பொதுவாக சுவிட்சர்லாந்தில் நாள்பட்ட, குணமாக வாய்ப்பில்லாத நோயாளிகளை கருணைக்கொலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனால் வயதான காரணத்தால் மட்டுமே ஒருவரை கருணைக் கொலைக்கு உட்படுத்துவதில்லை.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற போது கருணைக் கொலைக்கான விதிமுறைகளை சுவிஸ் அரசு வரையறுத்தால் மட்டுமே மருத்துவர்கள் முறையாகத் தமது பணிகளை நிறைவேற்ற முடியும் என்று தீர்ப்பளித்தது

புதன், 15 மே, 2013

நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து


சுவிட்சர்லாந்திலுள்ள நியுசேட்டலில் ஏரியைப் பார்த்தபடி காட்சியளிக்கும் நவீன நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்சார அறையில் ஏற்பட்ட தீ, விடுதி முழுவதும் விறுவிறுவென பரவியது.
தீ பரவுவதை அறிந்த பணியாளர்கள், அறையில் தங்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். இதனால் எவருக்கும் தீயினால் காயம் ஏற்படவில்லை. இத்தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு வந்து விரைவாக தீயை அணைத்துள்ளனர்.
இந்த விடுதி மிகவும் நவீன வசதிகளுடன் ஏரியையும், மலையையும் அறையிலிருந்தே பார்க்கக்கூடிய வகையில் கட்டப்பட்டிருந்ததால் ஓரிரவுக்கான அறை வாடகை மட்டும் 1040 ஃபிராங்க் ஆகும்.
அங்கிருந்த 40 அறைகளில் 24 அறைகள் இந்த வசதியுடன் இருந்தன. மேலும் தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது
Blogger இயக்குவது.