திங்கள், 26 டிசம்பர், 2016

இலங்கை தமிழருக்கு சுவிஸில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை.?.

சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தவகையில், அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் இதற்குள்ளேயே அடங்கும்.
இந்த விபத்தில் 10 அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் 
உயிரிழந்தார்.
ஏ-9 நெடுஞ்சாலையில் அதிகளவிலான விபத்துக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன என்றும் இந்த தரவுகளின் மூலம் 
தெரியவந்துள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியதாலுமே இவ்விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 19 டிசம்பர், 2016

சுவிஸில் புதிய சட்டங்கள் வர உள்ளன ?

சுவிஸில் வசிப்போர் பின்வரும் விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது தற்போது அவசியமாகியுள்ளது.
குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறவும் பணி ஒப்பந்தமாக தங்கவும் வெளிநாட்டினர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிப்படையில் சுவிஸில் குடியேறும் மற்றும் பணி ஒப்பந்தமாக தங்கும் வெளிநாட்டினர்கள் அவசியமாக சுவிஸ் தேசிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
பின்னர், பொது இடங்களில் குடிமக்களுடன் மரியாதையுடனும் கனிவுடனும் பழக வேண்டும். சுவிஸ் தேசிய பாதுகாப்பையும் சமூக பழக்க வழக்கங்களை மதிப்பதுடன் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியிலும் பங்கேற்க வேண்டும்.
இதுபோன்ற விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வெளிநாட்டினர்களின் பி- அனுமதிபத்திரம்   உடனடியாக ரத்து செய்யப்படும். 
மேலும், 
சி.அனுமதிபத்திரம்  உள்ளவர்களின் அனுமதியானது தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு
 மாற்றப்படும்.
இதுமட்டுமில்லாமல், சுவிஸில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் வெளிநாட்டினர்களும் இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் அவர்களுடைய அனுமதியும் பறிக்கப்படும் வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இக்கோரிக்கை தொடர்பான விவாதம் நடைப்பெற்ற பிறகு அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 8 டிசம்பர், 2016

கணிதத்தில் ஐரோப்பியா நாடுகளில் சுவிஸ் மாணவர்கள் தான் கில்லியாம்!

ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் புலி என்ற விடயம் ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
Organization for Economic Cooperation and Development என்னும் அமைப்பு சமீபத்தில் பள்ளி பாடங்கள் சம்மந்தமாக ஒரு ஆய்வை 
மேற்கொண்டது.
அதில், ஐரோப்பியா நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் கெட்டிக்காரர்கள் என தெரியவந்துள்ளது.
இதுவரை இதில் முதலிடத்தில் இருந்த எஸ்டோனியா நாட்டை பின்னுக்கு தள்ளி சுவிற்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
கணிதத்தை பொருத்தவரை சுவிற்சர்லாந்துக்கு அடுத்தடுத்த இடங்களில் நெதர்லாந்து, டென்மார்க், ஸ்லோவேனியா போன்ற
 நாடுகள் உள்ளன.
அறிவியல் பாடம் விடயத்தில் சுவிற்சர்லாந்து முதலிடம் பிடிக்கவில்லை என்றாலும் களரவமான இடத்தையே பிடித்துள்ளது.
அதனுடன் மற்ற ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, பிரித்தானியா, பின்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளும் உள்ளதாக ஆய்வுகள் 
கூறுகின்றது.
உலகளவி லான நாடுகள் பட்டியலில் கணிதம், அறிவியல் போன்ற எல்லா பாடங்களிலும் சிங்கப்பூர் முதலிடம் வகிப்பது 
குறிப்பிடத்தக்கது.    
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 5 டிசம்பர், 2016

குடியுரிமை வழங்கும் குழுவில் சுவிசில் ஈழத்தமிழ் பெண்மணி.

சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தெரிவு
 செய்யப்பட்டுள்ளார்.
மற்றும், தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 வயது மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை பெறும் உயர்மட்டக்குழு விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு குடியுரிமை வழங்கும் குழுவிலும் அங்கம் வகிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் தை மாதம் முதல் தனது பணியை தர்சிகா கிருஸ்ணானந்தம் ஆரம்பிக்கவுள்ளார்.
அவருக்கான கடிதம் தூண் நகராட்சியினால் இன்று வழங்கப்பட்டுள்ளது, அந்த நகராட்சியில் குடியுரிமை வழங்கும் உயர்மட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் முதலாவது புலம்பெயர் பெண்மணியும் இவரே 
என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.