புதன், 30 அக்டோபர், 2013

இறப்பை ஏற்படுத்தும் சுவிஸ் நோய்த்தொற்று மருத்துவமனைகள்


 
சுவிட்சர்லாந்தில் கிருமிகளால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவிசோநோ மருத்துவகுழு

 அமைப்பு தெரிவித்துள்ளது.
சுவிஸ்நோ மருத்துவகுழு நடத்திய ஆய்வில் சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகள் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 600 மரணங்களையும், 15,000 நோய்த்தொற்றையும் கட்டுப்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்நாடு சுகாதார வசதிகளில் பிற நாடுகளை விட பின்தங்கி உள்ளது. மத்திய பொது சுகாதார அலுவலகம் தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக ஒரு தேசிய திட்டத்தை தற்போது

 தொடங்கியுள்ளது.
சுவிஸில் பெருங்குடல் அல்லது மலக்குடல் தொடர்பான அறுவை சிகிச்சைகளில் எட்டு பேரில் ஒருவர் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த எண்ணிக்கை ஜேர்மனியில் 11 பேர், பிரான்சில் 13 பேர் மற்றும் அமெரிக்காவில் 16 பேரில் ஒருவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.