திங்கள், 7 அக்டோபர், 2013

நெடுஞ்சாலையில்தீப்பற்றி எரிந்தது. சுவிஸில் கோர விபத்து


சுவிட்சர்லாந்து நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வான் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள A1 நெடுஞ்சாலையில் வான் ஒன்று படுவிபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது.

இந்த தீப்பொறியானது 100 மீற்றர் தொலைவிற்கு பரவியதால் இதனை அணைப்பதற்காக 70 அவசரப்படையினர், 50 தீயணைப்பு படையினர், 3 அவசர ஊர்தி, இரண்டு ஹெலிகொப்டர் போன்றவை வரவைக்கப்பட்டன.
இதனால் இந்த நெடுஞ்சாலை பாதையானது 5 மணி நேரத்திற்கு முன்னதாகவே மூடப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் மோசமான காயங்களுடன் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.