புதன், 9 அக்டோபர், 2013

இத்தாலியில் சடலமாக மீட்பு சுவிஸைச் சேர்ந்த 6 வயது சிறுவன்


 
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன சுவிஸ் சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பின்னர் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இத்தாலியின் தெற்குப் பகுதியான டஸ்கனி பிரதேசம் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு விடுமுறையைக் கழித்துவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினரின் கார் விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் 6 வயது சிறுவன் காணாமல் போனான். இதனையடுத்து, இரு தினங்களாக தீயணைப்புப் படையினர், நீச்சல் வீரர்கள் மேலும் பலர் மோப்ப நாய்களுடன் தேடினர்.
அப்பகுதியிலிருந்து 150 மீற்றர் தூரத்திலுள்ள பாலத்தில் கார் சிக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிறுவனின் உடல் 7 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் அம்மா கால்நடையாக வீட்டுக்குத் திரும்பினார். அவர் காயப்படவில்லை எனினும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார்.
காரினுள் சிறுவனின் கலர் பென்சில்கள் மட்டும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.